Author: Editor TN Talks
பொதுவாக டிசம்பர் மாதம் என்றாலே சென்னைவாசிகளுக்கு ஒரு மரண பீதி ஏற்படும். ஏனெனில் அப்போது தான் புயல், கடுமையான மழை என பெய்து, சென்னையே வெள்ளக் காடாக காட்சியளிக்கும். ஆனால் கடந்தாண்டு புயல், கனமழை வரவில்லை. ஒருவழியாக மாதம் முடியப் போகிறது எந்த அசாம்பாவிதமும் நடைபெறவில்லை என மக்கள் நிம்மதி பெருமூச்சு விடும் முன், டிசம்பர் 23-ம் தேதி நடந்த சம்பவம் பேரதிர்ச்சியை கொடுத்தது சென்னை வாசிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் தான்… 2024 டிசம்பர் 23-ம் தேதி சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் மாணவி ஒருவர் வெளி நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரலைகளை ஏற்படுத்தியது. அன்றைய தினம் இரவு உணவிற்கு பிறகு அம்மாணவி தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், மாணவியின் நண்பரை மிரட்டி தாக்கியுள்ளார். அத்தோடு தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, பாதிக்கப்பட்ட பெண் மறுநாள் (24.12.2024) கோட்டூர்புரம் காவல்நிலையத்தில்…
சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து இரண்டு நீதிபதிகள் வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு புதிய நீதிபதிகள் சென்னைக்கு வர உள்ள நிலையில், தலைமை நீதிபதி அளவிலும் மாற்றம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. முக்கிய இடமாற்றங்கள் உச்ச நீதிமன்ற கொலீஜியம் வெளியிட்டுள்ள பரிந்துரையின்படி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விவேக் குமார் சிங், மத்திய பிரதேச மாநில உயர் நீதிமன்றத்திற்கும், நீதிபதி பட்டூ தேவனாந்த், ஆந்திரா மாநில உயர் நீதிமன்றத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர். புதிய நீதிபதிகள் நியமனம் கர்நாடகா மாநில உயர் நீதிமன்ற நீதிபதி ஹேம்ந்த் சந்தன் கவுடர் மற்றும் தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களது நியமனத்திற்கு குடியரசுத் தலைவர் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதால், விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதவியேற்க உள்ளனர். தலைமை நீதிபதிகள் மாற்றம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற…
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார். அதேவேளையில், இந்த வழக்கில் இன்னும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை என்றும், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் “அந்த SIR” யார் என்று கண்டுபிடித்து தண்டிக்கப்படுவார் என்றும் அவர் தனது X தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: * வரவேற்பு: ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதை வரவேற்றுள்ளார். இந்த வழக்கில் தொடர்ந்து போராடி மாணவியின் குரலாக ஒலித்ததன் பயன் இது எனக் குறிப்பிட்டுள்ளார். * எழுப்பப்பட்ட கேள்விகள்: * முதலில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் உடனடியாக விடுவிக்கப்பட்டது ஏன்? மீண்டும் கைது செய்யப்படுவதற்கு முன் என்ன நடந்தது? * ஞானசேகரன் வீட்டில் பிரியாணி சாப்பிடும் அளவுக்கு நெருக்கமாக இருந்த அமைச்சர் மற்றும் சென்னை துணை மேயர் விசாரிக்கப்படாதது ஏன்? * SIT-ல் பணியாற்றிய DSP…
சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் குமரேசன். அதே பகுதியில் உள்ள ராமசந்திரன் தெருவில் கார்கள் பழுது பார்க்கும் குடோன் வைத்து நடத்தி வருகிறார். நேற்று (27.05.2025) இரவு வழக்கம் போல் குடோனை மூடிவிட்டு சென்ற நிலையில் இன்று (28.05.2025) அதிகாலை திடிரென குடோனில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக உரிமையாளர் குமரேசனுக்கு தகவல் அளித்த நிலையில், குடோனை திறந்து பார்த்தபோது, பழுது பார்பதற்காக வைக்கபட்டிருந்த சுமார் 7 கார்கள் மளமளவென தீ பிடித்து எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குமரேசன் உடனடியாக தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில், வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அனைத்தனர். ஆனால் அதற்க்குள் ரூ.1கோடி மதிப்புள்ள கார்கள் மற்றும் பொருட்கள் தீயில் கருகின. தகவல் அறிந்து வந்த போலீசார் மின் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
எதிர்வரும் ஜூன் 19 ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தலில், ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதில், திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச. தலைவர் சண்முகம், எம்.எம்.அப்துல்லா மற்றும் திமுக கூட்டணி சார்பில் மதி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் பதவிக்காலங்கள் முடிவடைகின்றன. அதேபோல, அ.தி.மு.க.வைச் சேர்ந்த சந்திரசேகர், அ.தி.மு.க. ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது. தேர்தல் அட்டவணை: இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2 ஆம் தேதி தொடங்கி ஜூன் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜூன் 10 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். தேவைப்பட்டால், தேர்தல் ஜூன் 19 ஆம்…
தமிழ் சினிமாவில் தந்தை மூலம் சினிமாவுக்கு வந்தவர்களில் இன்று வரை ஜொலிப்பவர்கள் மிக மிக குறைவு தான். அப்படியான ஒருவர் சிலம்பரசன். 1983-ம் ஆண்டு பிறந்த சிம்பு, 4 மாத குழந்தையாகவே சினிமாவில் தோன்றிவிட்டார். அத்தோடு, 2002-ம் ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார் சிம்பு. குழந்தை முதலே படங்களில் நடித்து வந்தவர், “ஐ ய எம் அ லிட்டில் ஸ்டார் ஆவேனே சூப்பர் ஸ்டார்” என 6 வயதில் அவரது தந்தை படத்தில் சுட்டித் தனமாக ஆடியவர், இன்று தனது 42 வயதில் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துள்ளார். சிம்பு எத்தனை முறை சினிமாவை விட்டு சில காலங்கள் விலகி இருந்தாலும் கூட, மீண்டும் திரையில் வந்தால் மீண்டும் ரசிகர்கள் அவரை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் அப்படியான ஒரு ராசி அவருக்கு. தற்போது அவரது நடிப்பில் வெளிவரவுள்ள ’தக் லைஃப்’…
சென்னையில் கிஸ்கிந்தா, குயின்ஸ் லாண்ட், விஜிபி, எம்.ஜி.எம் என பல தீம் பார்க்குகள் உள்ளன. அவைகளில் முதன்மையானது விஜிபி தீம் பார்க். விஜிபி குழுமத்திலிருந்து உருவாக்கப்பட்ட இந்த தீம் பார்க் சென்னையில் மிகவும் பிரபலம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ்வதற்கான அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு உள்ளது. கோடை விடுமுறை என்பதால் இங்கு மக்கள் கூட்டம் அலை மோதியது. அதேப் போல் நேற்றும் (27.05.2025) இங்கு நூற்றுக்கணக்கான மக்கள் பொழுதுபோக்கு ரைடுகளில் விளையாடிக் கொண்டிருந்தனர். இங்குள்ள ராட்சத ராட்டினத்தில் கிட்டத்தட்ட 36 பேர் விளையாடிக் கொண்டிருந்த போது, ராட்டினத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நின்றது. 120 அடி உயரத்தில் நின்ற நிலையில் ராட்டினத்தில் சிக்கிய 36 பேர் அலறினர். அத்தோடு அவர்களது குடும்பத்தினரும் கீழே இருந்தவாறு கூச்சலிட ஆரம்பித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் போலீசார் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ராட்டினத்தில்…
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு நீதிபதி ராஜலட்சுமி அவர்களால் வழங்கப்படும். கடந்த ஆண்டு டிசம்பர் 23-ஆம் தேதி இரவு நடந்த இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், அடையாறு பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் (37) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர், ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்தனர். சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். சென்னையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் மார்ச் மாதம் முதல் விசாரணை தொடங்கியது. ஞானசேகரனுக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராகாத நிலையில், சட்டப்பணி ஆணைக்குழு வக்கீல்கள் கோதண்டராமன், ஜெயபிரகாஷ் ஆகியோரை நியமித்தது. ஏப்ரல் 23-ஆம் தேதி…
கோவை மாநகர எல்லையில் அமைந்துள்ள சூலூர் அடுத்த பட்டணம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் 30,000-க்கும் மேற்பட்ட மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குடிநீர், தார் சாலை, மழைநீர் வடிகால், பேருந்து நிழற்குடை போன்ற அத்தியாவசியத் தேவைகள் முறையாக வழங்கப்படவில்லை என பொதுமக்கள் உள்ளாட்சி நிர்வாகம் மீது குற்றம் சாட்டுகின்றனர். மழைநீர் தேங்கிய சாலைகள்; மக்கள் அவதி: கடந்த சில தினங்களாகக் கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பட்டணம் ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் சாலைகள் அனைத்தும் சேறும் சகதியுமாக மாறியுள்ளன. இதனால் வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்வதுடன், அடிப்படைத் தேவைகளுக்காகக்கூட வெளியே செல்ல முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். குறிப்பாக, காவேரி நகர், ரங்கா நகர் போன்ற பகுதிகளில் தார் சாலைகள் இல்லாததால் மழைநீர் தேங்கி, சகதியாகக் காட்சியளிப்பது மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளது. நூதன போராட்டம்; உடனடி கோரிக்கை: இந்நிலையில், இன்று அதிகாலை பட்டணம்…
தேனி மாவட்டம், ஊஞ்சாம்பட்டியில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவிலை, அமைச்சர் பெரியகருப்பனின் முன்னாள் நேர்முக உதவியாளர் கிருஷ்ணன் என்கிற கிருஷ்ணமூர்த்தி அபகரித்து, பொதுமக்களை வழிபட விடாமல் தடுத்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்களை அபகரித்த இந்தச் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவிலின் பின்னணி: ஊஞ்சாம்பட்டி கிராமம் மற்றும் அன்னஞ்சி விலக்கு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள இந்தக் காளியம்மன் கோவிலுக்குச் சொந்தமாகப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. ஊஞ்சாம்பட்டி மற்றும் அன்னஞ்சியைச் சேர்ந்த நாயுடு மற்றும் வாணிய செட்டியார் சமுதாய மக்கள் இணைந்து இந்தக் கோவிலைக் கட்டியுள்ளனர். ஆண்டுதோறும் வரி வசூல் செய்து திருவிழாக்களை நடத்தி, கும்பாபிஷேகம் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர். வாரத்தின் ஏழு நாட்களும் இப்பகுதி மக்கள் இங்கு வழிபட்டு வந்துள்ளனர். அபகரிப்பு முயற்சி: சென்னையில் பல ஆண்டுகளாக வசித்து, அமைச்சர்…