Author: Editor TN Talks
இந்தியாவில் ஒரே நாளில் 276 பேருக்கு கொரோனா தொற்று – 7 பேர் உயிரிழப்பு தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழப்பு … கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதேபோல இந்தியா கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரொனா தொற்றால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 4302 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை நேற்று வரை 216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, நேற்று ஒருவருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. தமிழகத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதன்மூலம் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட 29 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.…
உணவு வணிகர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்.. மீறினால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை… உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு வணிகர்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டு இருக்கிறது. அதில் அனைத்து உணவு வணிகர்களும் http://foscos.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அனைத்து உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு டைபாய்டு மற்றும் மஞ்சகாமாலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி மருத்துவ தகுதி சான்றிதழ் பெற வேண்டும். உணவு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை பகுப்பாய்வு செய்து வைத்திருக்க வேண்டும். உணவுப் பொருட்களில் ஈக்கள், பூச்சிகள் மெய்க்காத வண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி வைத்து காட்சிப்படுத்த வேண்டும். உணவு எண்ணெயை ஒரு முறை சமைக்க பயன்படுத்த வேண்டும் நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருளில் நேரடியாகப்படும் வகையில் பரிமாறவோ பொட்டலமிடவோ கூடாது.…
இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ள மனுஷி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வசனங்கள் எவை என்பது குறித்து விளக்கம் அளிக்க சென்சார் போர்டுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை ஆன்ட்ரியா நடித்துள்ள மனுஷி திரைப்படத்தை, இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. படத்தை இயக்குனர் கோபி நயினார் இயக்கியுள்ளார். படத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். பயங்கரவாதி என்ற சந்தேகத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது குறித்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், மாநில அரசை மோசமாக சித்தரித்துள்ளதாகவும், கம்யூனிச கொள்கையை குழப்பும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, 2024 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் படத்துக்கு சென்சார் சான்று வழங்க சென்சார் போர்டு மறுத்தது. இதை எதிர்த்தும், நிபுணர் குழு அமைத்து படத்தை மீண்டும் சென்சார் செய்யக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கும்படி சென்சார்…
மதுரையை தலைமையிடமாக கொண்டு அப்சல் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தினரின் ஆசை வார்த்தையை நம்பி, நான் உள்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் 100 கோடி வரை முதலீடு செய்திருந்தனர். ஆனால் அவர்கள் உறுதியளித்தபடி நாங்கள் செலுத்திய முதலீட்டுத்தொகையை வட்டியுடன் திருப்பித்தரவில்லை. இதுகுறித்து புகார் அளித்ததால் 2017-ல் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்நிலையில் முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்கள் தொகையை திரும்ப பெற்றுத்தர ஓய்வு பெற்ற நீதிபதி சுதந்திரம் தலைமையில் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர், அப்சல் நிறுவன மேலாளர் ஆகியோர் அடங்கிய குழுவை உயர் நீதிமன்றம் நியமித்தது. அந்த குழு, நிதி நிறுவனத்தின் சொத்துகளை மீட்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. நிறுவனத்தினர் இதற்கு ஒத்துழைக்கவும் இல்லை. இதற்கிடையே அப்சல் நிறுவன நிர்வாகி செந்தில்வேல் இறந்துவிட்டார். நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்யவோ, வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவோ போலீசார் கடந்த 5…
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மாம்பழ விளைச்சல் அதிகரித்திருப்பதால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இதனால் உழவர்களும், மரங்களை குத்தகைக்கு எடுத்தவர்களும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள நிலையில், அவர்களின் துயர் துடைக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், நாமக்கல், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிக அளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. சேலத்து மாம்பழம் என்று போற்றப்படும் மாம்பழ வகைகள் இந்த மாவட்டத்தில் தான் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. நடப்பாண்டில் மாம்பழங்கள் விளைச்சல் அதிகமாக இருந்ததால், வழக்கத்தை விட சற்று கூடுதல் லாபம் கிடைக்கும் என்று நினைத்திருந்த உழவர்களுக்கு மாம்பழ விலை வீழ்ச்சியால் பெரும் ஏமாற்றம் தான் பரிசாகக் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டில் ஒரு டன் மாம்பழம் சராசரியாக ரூ.22 ஆயிரம் முதல்…
விரைவுரயில்களில் கூடுதல் ஏசி பெட்டிகள் தேவையா? மத்திய ரயில்வேத்துறை அமைச்சருக்கு அன்புமணி கடிதம்.. தமிழ்நாட்டில் இயக்கப்படும் சேரன் விரைவுரயில், சென்னை – திருவனந்தபுரம் மெயில், நீலகிரி விரைவு ரயில் , நெல்லை விரைவு ரயில், பொதிகை விரைவு ரயில் ஆகியவற்றில் உள்ள படுக்கை வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்து விட்டு, அவற்றுக்குப் பதிலாக குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகளைச் சேர்க்க தொடர்வண்டித்துறை முடிவு செய்திருக்கிறது. ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்த நடைமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது. விரைவுத்தொடர்வண்டிகளில் 7 முதல் 9 வரை முன்பதிவு செய்யக்கூடிய படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் இருக்கும். இப்போது அவற்றில் இரு பெட்டிகள நீக்கி விட்டு குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன. இதனால், பயணம் செய்வோரின் எண்ணிக்கைக் குறையாது என்றாலும் கூட, மக்கள் அதிக கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டியிருக்கும். இது ஏழை மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்துவதாக…
கமல்ஹாசன், சிலம்பரசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தக்லைப் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா உள்ளிடோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக்லைப் திரைப்படம் உலகெங்கிலும் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தை சட்டவிரோதமாக 793 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகள் ஆகியவற்றில் வெளியிடப்படுவதை தடுக்க வேண்டுமென அரசு மற்றும் தனியார் இணைய தள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜராகி, உலகம் முழுவதும் 3 ஆயிரத்து 500 திரையரங்குகளில் தக்லைப் படம் வெளியாகயுள்ளதாகவும், மிகுந்த பொருட்செலவில் படத்தை தயாரித்துள்ளதால், திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியானால் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என்றும், திரை கலைஞர்களின்…
பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து தற்போதைய செயல் தலைவரான அன்புமணி, நாளை நீக்கப்பட உள்ளதாக சூசகமாக கூறியுள்ளார் கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ். பாமகவில் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கும் வேலையை கடந்த சில நாட்களாக ராமதாஸ் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இதுவரை காலியாக இருந்த மாவட்டங்களில் புதிய மாவட்ட செயலாளர்களாக எஸ்.டி.கே. சேகர் (திருவள்ளூர் வடக்கு) பகவான் பழனி (திருவள்ளூர் கிழக்கு) ரஜினி (திருவள்ளூர் தெற்கு) பழனிசாமி (தென்சென்னை தெற்கு) மயிலை ஆறுமுகம் ( தென்சென்னை கிழக்கு) வி.எஸ். வெங்கடேஷ் (வேலூர் கிழக்கு), முருகன் (மதுரை புறநகர் தெற்கு) பாண்டி காமாட்சி என்ற பாரதி பாண்டியன் (மதுரை புறநகர்) சந்தானதாஸ் (ராமநாதபுரம் கிழக்கு) சிங்கராயன் (தென்காசி தெற்கு) திருமலைசாமி (தென்காசிவடக்கு) ஆகியோரை புதிய நிர்வாகிகளாக ராமதாஸ் நியமித்துள்ளார். கடந்த 16-ந்தேதி முதல் மருத்துவர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு லோக்ஆயுக்தா கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டப்படி, லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பொது ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை இந்த அமைப்பு விசாரிக்கும். தற்போது சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ராஜமாணிக்கம், லோக் ஆயுக்தா தலைவராக உள்ளார். இதைத் தவிர்த்து 2 நீதித்துறை உறுப்பினர்கள், 2 நீதித்துறை அல்லாத உறுப்பினர்கள் உள்ளனர். இதில் ஒரு நீதித்துறை உறுப்பினர்கள் இடம் காலியாக உள்ளது. இந்த உறுப்பினரை தேர்வு செய்வது தொடர்பான குழுவை அமைப்பது தொடர்பான கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம், பேரவைத் தலைவர் அப்பாவு, லோக் ஆயுக்தா தலைவர், மனித வள மேலாண்மைத்துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் வேட்பு மனுவை முன்மொழிய உள்ள 20 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தொடங்கியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக சாபில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் படிவத்தில் எம்எல்ஏக்களின் கையெழுத்து பெறுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களரான வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, முன்னாள் எம்எல்ஏ தனபால் ஆகியோரது வேட்பு மனுக்களை முன்மொழியும் 20 சட்டமன்ற உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இருவரது வேட்பு மனுக்களும் முறையாக தயார் செய்த பின்னர் நாளை அல்லது நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.