Author: Editor TN Talks
மதுரை மாநகராட்சியில் 2020-ம் ஆண்டில் 53,826 தெருநாய்கள் இருந்த நிலையில், தற்போது புதிதாக நகர்நலப் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 100 வார்டுகளிலும் மொத்தம் 38,348 தெருநாய்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் எண்ணிக்கை குறைந்ததால் இந்த கணக்கெடுப்பு குறித்து சர்ச்சையும், கேள்விகளும் எழுந்துள்ளன. மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. தெருநாய்கள் விபத்துகள், போக்குவரத்து இடையூறு, சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக மாநகராட்சி நகர்நலத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதனால் 100 வார்டுகளில் சுற்றித் திரியும் தெருநாய்களின் எண்ணிக்கையை கண்டறிய மாநகராட்சி, தனியார் நிறுவனம் மற்றும் விலங்குகள் நலத்தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கடந்த மார்ச் 17 முதல் 23 வரை கணக்கெடுப்பு மேற்கொண்டது. இந்த சர்வே முடிவின் அடிப்படையில், 100 வார்டுகளில் மொத்தம் 38,348 தெருநாய்கள் இருப்பதாக நகர்நலத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மாநகராட்சியில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றி திரியும் நிலையில், அதனை…
தனது மகள் பெயரில் போலி எக்ஸ் கணக்கு தொடங்கி, அதனைக் கையாண்டு வருபவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். அகிலேஷ் யாதவ் மகளின் பெயரில் தொடங்கப்பட்டுள்ள சமூக வலைதள கணக்கில் பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மார்பிங் செய்யப்பட்ட படங்கள் பகிரப்பட்டுள்ளன. இது குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்து 24 மணி நேரம் கடந்து விட்டது. இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சில சமூக விரோத சக்திகள் எங்கள் குடும்ப உறுப்பினர்கள், கட்சித் தலைவர்களின் ஒத்தப் பெயர்கள், படங்களை வைத்துக் கொண்டு மிகவும் கண்டிக்கத்தக்க வகையிலான சமூக ஊடக பதிவுகள் மற்றும் உள்ளடக்கத்தை வெளியிடுகின்றனர். இந்தப் படங்கள் மற்றும் பதிவுகள் மற்றும் கருத்துகளுக்கும் எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.…
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வேண்டும் என, அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்கத் தலைவர் அரங்கநாதன், உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “2006ல், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. அதன்படி அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றாலும், இதுவரை எங்களுக்கு பணி நியமனம் கிடைக்கவில்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணைக்கு எதிராக, ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம், உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளது. அந்த இடைக்கால தடை உத்தரவால், அர்ச்சகர் பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கானோர் பணி அமர்த்தப்படவில்லை. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலைய துறை சட்டப்படி, அர்ச்சகர்களை நியமனம் செய்வதற்கு தனிப்பட்ட பட்டப்படிப்பு வயது வரம்பு வரையறுக்கப்படவில்லை. அர்ச்சகர் பயிற்சியை முடித்தவர்களை பணி நியமனம் செய்யலாம் என்று விதி உள்ளது. இதையும் படிக்க: “குற்றவாளிகள்…
தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 9 பேருக்கு கோவை மகளிர் நீதிமன்றம் இன்று சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கியது. இந்த தீர்ப்பை பல்வேறு கட்சிகள், அதன் உட்பட திமுக, அதிமுக, தவெக, பாமக ஆகியவை வரவேற்ற நிலையில், பாஜகவும் வரவேற்றுள்ளது. இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கோவை மகளிர் நீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25), ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 9 பேரையும் சாகும்வரை சிறையில் அடைக்க வேண்டும் என்று நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்தார். பல பெண்களின் வாழ்வை சீரழித்து, தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில்…
எஸ் 400 வான்பாதுகாப்பு கவசம் இந்தியாவின் வலுவான பாதுகாப்பு அமைப்பின் அடையாளமாக மாறி உள்ளதென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி, விமானப் படை வீரர்களை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தானுடனான தாக்குதலில் வெற்றிகரமாக செயல்பட்ட நாட்டின் முப்படைகளுக்கு வணக்கம் தெரிவிப்பதாக குறிப்பிட்டார். இந்திய விமானப் படையின் வீரத்தை ஒட்டு மொத்த உலகமே பார்த்ததாக பாராட்டு தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய பெண்களுக்காக நீதியை ராணுவம் நிலைநாட்டி உள்ளதாக புகழாரம் சூட்டினார். நமது முப்படைகளின் வீரச் செயல் இந்தியர்களுக்கும், இந்திய தாய்மார்களுக்கும் உலக அரங்கில் பெருமையை தேடிச் தந்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். எதிரிகள் அணுகுண்டு மிரட்டல் விடுத்த போது, அவர்களுக்கு பதிலடியாக முதலில் பாரத் மாதா கீ ஜே என்ற முழக்கம் விண்ணதிர கேட்டதாக பிரதமர் தெரிவித்தார். நமது விமானப் படை தளங்களை தாக்க எதிரிகள்…
தெற்கு அந்தமான மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 20ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்குவது வழக்கம். இதன்தொடர்ச்சியாக ஜூன் 1ம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கும். ஆனால், இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவ மழை வழக்கத்தைவிட முன்கூட்டியே தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் தென்மேற்கு பருவ மழை இன்று (மே 13) தொடங்கி உள்ளதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது. இதனால், தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மேற்கு திசை வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை…
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ஒட்டுமொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் தீர்ப்பினை பாராட்டி வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்-க்கும் இடையே பெரும் வார்த்தை போர் தொடங்கியுள்ளது. முதலமைச்சரின் விமர்சனத்திற்கு அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடுமையாக பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு. உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது. வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள். யார் வெட்கித் தலை குனிய வேண்டும்?.” எனப்…
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற காவலில் உள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதிஷ், மணிவண்ணன், அருண்பால், பாபு, அளுளானந்தம், அருண்குமார் ஆகியோருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் என்னென்ன? என்று சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் தெரிவித்துள்ளார். அவை பின்வருமாறு.. A1 குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனை – ரூ.40,000 அபராதம் A2 குற்றவாளி திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனை – ரூ.35,000 அபராதம் A3 குற்றவாளி சதீஷ்க்கு 3 ஆயுள் தண்டனை – ரூ.18,500 அபராதம் A4 குற்றவாளி வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனை – ரூ.13,500 அபராதம் A5 குற்றவாளி மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனை – ரூ.18,000 அபராதம் A6 குற்றவாளி பாபு-க்கு ஒரு ஆயுள் தண்டனை – ரூ.10,500 அபராதம் A7 குற்றவாளி ஹெரன்பால்-க்கு 3 ஆயுள்…
“பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்,” என்று பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது. அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்,” பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது! அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்! https://t.co/lG3uWR7yYp — M.K.Stalin (@mkstalin) May 13, 2025 முன்னதாக, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு…
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, பொள்ளாச்சி பாலியல் வழக்கை முறையாகக் கையாண்டு, நடுநிலை தவறாமல் விசாரிக்கப்பட சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதன் விளைவாக உரிய நீதி கிடைத்துள்ளது என்று அதிமுக தெரிவித்துள்ளது. அக்கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, கடும் தண்டனைகளை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, இந்த வழக்கை முறையாகக் கையாண்டு, நடுநிலை தவறாமல் விசாரிக்கப்பட சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதன் விளைவாக உரிய நீதி கிடைத்துள்ளது. திமுகவைப் போல் அரசியலுக்காக அவதூறுகளை அள்ளித் தெளிக்க எங்களுக்கு மனம் இல்லை. எங்களுக்கு மடியில் கணமில்லை, வழியில் பயமில்லை என்பதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினோம். பொள்ளாச்சி வழக்கில் சுயவிவரங்கள் வெளியானதாக சொன்ன திமுக, 6 ஆண்டுகளுக்கு பிறகு,…