Author: Editor TN Talks
எம்.பி. சீட் வழங்குவது தொடர்பான பிரச்சனை நீடித்து வந்த நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தே.மு.தி.க.) சுதீஷ், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு சற்று நேரத்துக்கு முன்பு நடைபெற்றது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க-வுக்கு எம்.பி. தொகுதிகள் ஒதுக்குவது குறித்து கூட்டணிக்குள் இழுபறி நீடித்து வந்த நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக, கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் சுமுகமான முடிவு எட்டப்படாததால் இரு கட்சிகளுக்கும் இடையே சலசலப்பு நிலவி வந்தது. இந்நிலையில், சுதீஷ் நேரடியாக எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தது, எம்.பி. சீட் விவகாரத்தில் ஒரு சுமூகமான முடிவை எட்டுவதற்கான முயற்சியாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின் முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இ-மெயில் மூலமோ அல்லது தொலைப்பேசி வாயிலாகவோ இந்த மிரட்டல் வரும். அதனை நம்பி அதிகாரிகளும் தேடுதல் பணியினை தொடருவர். பிறகு அது புரளி என்பது தெரியவரும். அப்படி நாடாளுமன்றத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் லாஞ்சி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ சாம்ரைட். இவர் கடந்த 2022-ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு பார்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இந்திய தேசியக் கொடி, வெடிப் பொருட்கள் தொடர்பான சில சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மற்றும் அரசியலமைப்பின் நகல், புகார் கடிதம் ஆகியவை இருந்துள்ளது. அந்த புகார் கடிதத்தில் தனது கோரிக்கைகளை பட்டியலிட்டிருந்த அவர், தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், நாடாளுமன்ற கட்டடத்தை வெடிக்கச் செய்வதாக மிரட்டல் விடுத்திருந்தார். இது தொடர்பாக அவர் மீது டெல்லி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை…
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில், மக்களின் வரிப்பணத்தில் பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட செயற்கை நீர்வீழ்ச்சி தற்போது செயலிழந்து, துர்நாற்றம் வீசும் இடமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது. நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் ஆட்சியில் பொதுப்பணம் வீணடிக்கப்படுவதாக அதிமுக தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. சிறுமலை – ஒரு சுற்றுலா சொர்க்கம்: கிழக்கு தொடர்ச்சி மலையின் கடைசி பகுதியான சிறுமலை, அதன் வானுயர்ந்த மரங்கள், குளுமையான காற்று, பசுமைப் போர்வையால் போர்த்தப்பட்ட வனங்கள் மற்றும் அரிய வகை வனவிலங்குகளுடன் (காட்டு மாடு, கேளையாடு, காட்டுப்பன்றி, மான், குரங்கு) தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தினந்தோறும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. செயற்கை நீர்வீழ்ச்சியின் அவலம்: சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், முன்னாள் மாவட்ட ஆட்சியர் விசாகன் காலத்தில், ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் சிறுமலை புதூர் செல்லும் சாலையில், மலைப்பகுதியில் இருந்து வரும் வாய்க்கால் தண்ணீரை பயன்படுத்தி ஒரு செயற்கை நீர்வீழ்ச்சி பல லட்ச ரூபாய் செலவில்…
பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அன்புமணி ராமதாஸ் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் கட்சி அலுவலக முகவரியை மாற்றியுள்ளார். சமீபத்தில் தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அளித்த பேட்டி, கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில், அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு என்றும், பொதுக்குழுவைக் கூட்டி அவரை நீக்குவேன் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன்வைத்தார். இந்த உட்கட்சி மோதலுக்குப் பிறகு அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்விகள் எழுந்திருக்கும் சூழலில், பா.ம.க. மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களை அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், “கட்சியில் என்றும் அடிமட்டத் தொண்டனாக இருக்கவே விரும்புகிறேன். பா.ம.க. என்பது யாருடைய தனிச் சொத்தும் இல்லை; தொண்டர்களாகிய நீங்கள் தான் பாட்டாளி மக்கள் கட்சி” என்று குறிப்பிட்டார். மேலும், “எனக்கு நேற்றுதான்…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்று வரும் கோடை விழாவின் ஒரு பகுதியாக, கால்நடைத்துறை சார்பில் நடத்தப்பட்ட 24வது நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. பிரையண்ட் பூங்காவில் கடந்த மே 24 ஆம் தேதி மலர் கண்காட்சியுடன் துவங்கிய கோடை விழா, இந்த வருடம் 9 நாட்கள் நடைபெறுவதாக சுற்றுலாத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. கோடை விழாவில் தினந்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இன்று 7வது நாள் கோடை விழாவில், கால்நடைத்துறை சார்பாக 24வது நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில், கோல்டன் ரிட்ரீவர், ஜெர்மன் செப்பர்டு, கிரேட் டேன், ராட்வீலர், டாபர்மேன், செயின்ட்பெர்னாட், ஹஸ்கி, ராஜபாளையம் உள்ளிட்ட 12 வகைகளைச் சேர்ந்த மொத்தம் 52 நாய்கள் கலந்துகொண்டன. இந்த நாய்கள் கண்காட்சி 4 சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் நாய்களின் குணாதிசயங்கள், கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல், பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படைகளில் சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்பட்டு, கால்நடைத்துறை சார்பில் பரிசுகளும் சான்றிதழ்களும்…
தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து போடி செல்லும் அரசுப் பேருந்தில் துரைராஜபுரம் காலனியைச் சேர்ந்த 4 பெண்கள் பயணம் செய்துள்ளனர். தங்களது நிறுத்தமான துரைராஜபுரம் காலனிக்கு வந்த போது பேருந்தை நிறுத்துமாறு நடத்துநரிடம் கூறிய போது, பேருந்து இங்கே நிற்காது என்று தெரிவித்துள்ளார். அடுத்த நிறுத்தமான B.மீனாட்சிபுரம் பேருந்து நிறுத்தத்திலாவது பேருந்தை நிறுத்துங்கள் என்று பெண்கள் கூறிய போது, அங்கேயும் நிற்காது போடியில் மட்டும் தான் நிற்கும் என்று கூறியுள்ளார் நடத்துநர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் ஓட்டுநரிடம் சென்று பேருந்து நிறுத்துமாறு வலியுறுத்தி உள்ளனர். நான்கு பெண்களும் கெஞ்சி கேட்டும் ”பேருந்து நிற்காது, நீங்கள் நிறுத்த சொன்னால் நாங்கள் நிறுத்த வேண்டுமா? உங்களுக்காகத்தானே அரசாங்கம் ஓசியில் பஸ் விட்டுள்ளது. அந்த பஸ்ஸில் ஏறி போக வேண்டியது தானே? எதற்காக எங்கள் உயிரை எடுக்கிறீர்கள் என்று? பெண்களை ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஏளனமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள்,…
சினிமா உலகில் ஒரு சில நடிகை, நடிகர்கள் பல படங்களில் நடித்திருப்பர். திடீரென ஒரு சில படங்களில் அவர்களது நடிப்பு மிகவும் கவனிக்கப்பட்டு இருக்கு. அப்படியான ஒரு நடிகை சுவாஸிகா. சமீபத்தில் வெளியான சூரியின் மாமன் படத்தில் ஒரிஜினல் ஹீரொயின் என்றால் அது சுவாஸிகா தான். அக்கா கதாபாத்திரத்தில் மிரட்டி விட்டிருப்பார். இதற்கு முன்னதாக அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோரது நடிப்பில் வெளியான லப்பர் பந்து படத்தில், ஹீரோயினின் தாயாகவும் நடித்து வரவேற்பை பெற்றார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் நடித்து வரும் சுவாஸிகா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், லப்பர் பந்து படத்தை ஷாருக்கான் பார்த்ததும், இந்த படத்தை ரீமெக் செய்ய வேண்டும் எனக் கூறியதாகவும், அது தனக்கு பெருமையாக இருந்ததாகவும் கூறினார். அத்தோடு, சூர்யாவின் 45-வது படத்தில் தான் நடித்துள்ள கதாபாத்திரம் மிகவும் ஸ்பெஷல் எனவும், இதுவரை நடித்தது போல் இல்லாமல் ஒரு சிறப்பான…
கோவையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக, பேரூர் செட்டிபாளையம், இந்திரா காலனிப் பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால், சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, அருகில் உள்ள சமுதாயக் கூடத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். அடிப்படை வசதிகளின்மை: கழிப்பறை வசதி இல்லாததால் பெரும் அவதி: இந்திரா காலனியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இவர்களுக்கு இதுவரை எந்தவித நிரந்தரக் கழிப்பறை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ள சமுதாயக் கூடத்திலும் கழிப்பறை வசதிகள் இல்லாதது, முதியோர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இயற்கை உபாதைகளுக்குக்கூட வழியில்லாத நிலை உள்ளதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள்: இதுகுறித்து அப்பகுதிப் பொதுமக்கள்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்குக் கல்வி விருது வழங்கும் விழாவை இன்று நடத்தினார். இந்த விழாவில், பரிசு பெற்ற ஒரு மாணவியின் தாய், தனது கணவரின் குடிப்பழக்கத்தால் மகளின் படிப்பு பாதிக்கப்பட்டதையும், தனி ஒரு ஆளாகப் போராடி மகளைச் சாதிக்க வைத்ததையும் கண்ணீருடன் விஜய்யிடம் பகிர்ந்துகொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கல்வி விருது விழா: மாணவ-மாணவிகளின் கல்வி ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், கடந்த 2 ஆண்டுகளாக நடிகர் விஜய் இந்த விருதுகளை வழங்கி வருகிறார். மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவருக்கு வைர மோதிரமும், மாணவிக்கு வைர கம்மலும் வழங்கி கவுரவித்து வருகிறார். இந்த ஆண்டுக்கான (2025) கல்வி விருது வழங்கும் விழா மற்றும் பரிசளிப்பு விழா இன்று பூஞ்சேரியில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஓட்டல் அரங்கத்தில் நடைபெற்றது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர்,…
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கே.ரமேஷ் என்பவர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், நான், மதுரை தெற்குசாவல் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், ஆங்கில பாடத்தில் முதுநிலை பட்ட தாரி ஆசிரியராக பணி புரிந்தேன். கடந்த 25.6.2024 அன்று பிளஸ் 1 வகுப்பிற்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு மாணவர், பாடத்தைக் கவனிக்காமல் குறும்பு செய்து கொண்டிருந்தார். இதை கண்டித்ததால், அந்த மாணவர், எதிர்த்துப் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த நான், மாணவரை காலணியால் அடித்தேன். இது குறித்து அந்த மாணவரின் பெற்றோர், என்மீது பள்ளி நிர்வாகத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் பள்ளி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு, என்னை பணியிடை நீக்கம் செய்தது. இதையடுத்து நான், விருப்பு ஓய்வில் செல்ல விருப்பதாக மனு அளித்தேன். பிறகு அந்த மனுவை திரும்ப பெற்றுக் கொண்டு, வேறு ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் விருப்ப பணியிட மாறுதலில்…