Author: Editor TN Talks

பொன்னியின் செல்வன் என்ற மிகப்பெரிய படைப்புக்கு பிறகு மணிரத்னம் ’தக் லைஃப்’ என்ற படத்தை இயக்கத் தொடங்கினார். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனை வைத்து மணிரத்னம் இயக்குகிறார் என்ற செய்தி காட்டுத் தீயாய் பரவிய நிலையில், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் எகிறது. அதற்கு தீனி போடும் விதமாக படத்திலிருந்து ஒவ்வொரு அப்டேட்டாக படக்குழு அறிவித்துக் கொண்டிருந்தனர். ஒரு வழியாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (24.05.2025) பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிம்பு, ”பீப் சாங்” சர்ச்சை எழுந்தபோது ஏ.ஆர்.ரகுமான் தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும், ஏ.ஆர்.ரகுமான் வாய்ப்பளித்ததால் பல மொழிகளில் தாம் 150 பாடல்களை பாடியுள்ளதாக சிலம்பரசன் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தனது பெற்றோருக்கு நன்றி தெரிவிக்கும்போது குரல் தழுதழுத்தார்”. நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய கமல்ஹாசன், ”தாம் ஒரு சினிமா ரசிகன் என்றார். தாம் திரைப்படங்களை தயாரிக்கும்போது…

Read More

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் வரும் 28-ம் தேதி வரை உள்ள நிலையிலும், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ம் தேதி கேரளாவில் தொடங்கி ஜூலை 8ம் தேதி இந்தியா முழுவதும் பரவக்கூடும். இந்த முறை 16 ஆண்டுகளுக்கு பிறகு முன்கூட்டியே பருவமழை தொடங்கியிருப்பதால், கேரளாவை ஒட்டியுள்ள தமிழ்நாடு மாவட்டங்களிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நாட்டின் 80% மழைப் பொழிவு தென்மேற்கு பருவமழை காலத்தில் கிடைக்கும். தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்றும்(25.05.2025) நாளையும் (26.05.2025) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில், உதகைக்கு கேரளாவை சேர்ந்த குடும்பத்தினர் சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் இன்று உதகையில் உள்ள ஃபைன்…

Read More

கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி கடந்த 2 தினங்களாக கோவையில் மழை பெய்து வருகிறது. இதனால், கோவை – பாலக்காடு சாலை, குனியமுத்தூர் பகுதியில் சாலையோரம் இருந்த ஒரு மரம் சாய்ந்த சி.சி.டி.வி காட்சி வெளியாகியுள்ளது. மரம் சாய்ந்த சமயத்தில் அவ்வழியே வந்த ஒரு கார், சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மழைக்காலத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மரம் விழுதல் அல்லது மின்சார வயர்கள் அறுந்து விழுதல் போன்ற சம்பவங்கள் நடந்தால், உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த குழுவினர் தயாராக இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையின் பல்வேறு பகுதிகளில் தற்போது சாரல்…

Read More

காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தளத்தில் கடந்த மாதம் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்தது. காஷ்மீரில் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த சம்பவத்திற்கு பின்பு இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் மூண்டது. எல்லையில் 4 நாட்களுக்கு இருநாட்டு படைகளுக்கு இடையே தாக்குதல் நீடித்தது. பின்னர் மோதல் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவுக்கு வந்தது. இருப்பினும் ஆபரேஷன் சிந்தூர் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறியது. இந்த நிலையில், பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்கு போர்குணம் இல்லை என பாஜக எம்.பி ராம் சுந்தர் ஜங்ரா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவின் பிவானி பகுதியில் மகாராஷ்டிர ராணி அஹில்யாபாய்…

Read More

டைட்டானிக்.. இது ஒரு திரைப்படம் மட்டுமே அல்ல.. இது ஒரு காதல் காவியம் எனலாம். காதல் காவியங்கள் ஒருவரின் கற்பனையால் மட்டுமே தோன்றுவதில்லை. அது சில சமயம் உண்மை சம்பவங்களாகவும் இருக்கலம். அப்படியான ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் தான் டைட்டானிக். 1997-ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. ரோமியோ-ஜூலியட், அம்பிகாவதி-அமராவதி போன்ற காதலர்களின் வரிசையில், படமாக எடுக்கப்பட்டாலும் ஜாக்-ரோஸ் ஜோடி என்றென்றும் போற்றப்படுபவர்கள். இவர்களது காதல் கதை, இன்றைய இளைஞர்கள் வரை ஃபேவரைட் கதை. இந்த காதல் ஒரு பக்கம் இருந்தாலும், டைட்டானிக் கப்பல் மூழ்கிய அந்த ஒரு சம்பவம் எப்படி, ஏன், எதனால் என்ற பல கேள்விகளை நம்முள் ஏற்படுத்தியிருக்கிறது. இதனை பற்றி தெரிந்து கொள்ள நாம் 113 ஆண்டுகளுக்கு முன்பு செல்ல வேண்டும். 1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி பல்லாயிரம் பேரின்…

Read More

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் முத்துசாமி மேட்டுப்பாளையம் வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மழை பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் காணொளி காட்சி மூலம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ”கோவையில் மாவட்ட அளவிலும் மாநகராட்சி அலுவலர்களும் மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்து வைத்திருக்கிறார்கள் என்றார். கடுமையான மழை இல்லை என்றாலும் சில இடங்களில் கூடுதலான மழை இருக்கிறது என தெரிவித்த அவர், ஐந்து இடத்தில் சிறு சிறு வீடுகள் பாதிப்படைந்துள்ளது, ஆனால் மக்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை, அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளார்கள் என்றார். மேலும் அச்சம்பவத்தில் இரண்டு பேர் மட்டும் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றார். 16 ஜேசிபி இயந்திரம் உட்பட அவசர காலத்திற்கு தேவைப்படும் அனைத்து உபகரணங்களும் உள்ளது என்றும், மேட்டுப்பாளையம், வால்பாறை போன்ற 3 தேவையான இடத்தில் பேரிடர் மீட்பு குழுவினர்…

Read More

நாடு மட்டுமில்லாது உலகையே ஒரு மிரட்டு மிரட்டிய வைரஸ் என்றால் அது கொரோனா. கடந்த 2020 முதல் தொடங்கிய கொரோனா 3 வருடங்களாக உலகம் முழுவதும் லட்சக் கணக்கான உயிர்களை பலிவாங்கியது. அதற்கான தடுப்பூசி அனைவருக்கும் செலுத்தப்பட்டு, மீண்டும் இயல்புநிலை திரும்பிய நிலையில், தற்போது மீண்டும் கொரோனா வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. ஆசியாவில் புதிய கொரோனா அலை உருவாக தொடங்கி இருப்பதாகவும், இந்தியாவில் மட்டும் இதுவரை 257 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஒமைக்ரான் பிஏ.2.86திரிபான ஜேஎன்1 வகை கரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மக்கள்தொகை நெருக்கம் அதிகமுள்ள ஹாங்காங், சிங்கப்பூர், சீனா தாய்லாந்து ஆகிய நாடுகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து முக்கிய பகுதிகளில் சுகாதாரத்துறை செயல்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கொரோனா தொற்று பரவி வருகிறது. கர்நாடகாவில் மட்டும் இதுவரை மொத்தம் 35 பேருக்கு…

Read More

தமிழ்நாடு காவல்துறையின் தற்போதைய இயக்குனர் சங்கர் ஜிவாலின் பணிக்காலம் ஆகஸ்ட் மாதவாக்கில் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த டிஜிபி யார் என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது. மூப்பு மற்றும் தகுதி அடிப்படையில் சீமா அகர்வால், சந்தீப் ராய் ரத்தோர், ராஜிவ் குமார், அபய் குமார் ஆகிய 4 பேரும் வரிசையில் உள்ளனர். இவர்கள் 4 பேரும் டிஜிபி தரத்தில் உள்ளனர். இதற்கிடையில், ஏடிஜிபி தரத்தில் உள்ள ஒரு அதிகாரியை பொறுப்பு டிஜிபியாக நியமிக்க சில நகர்வுகள் நடத்தப்படுவதாக செய்திகள் கசிந்தன. இத்தகைய தவறான முன்னுதாரணம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே எதிர்ப்பு மற்றும் தேவையற்ற பிரச்சனைகளைக் கிளப்பும் என்பதால் அந்த ஏடிஜிபி – டிஜிபியாக தரம் உயரும் காலம் வரை தற்போதுள்ள திரு.சங்கர் ஜிவாலுக்கே பணி நீட்டிப்பு அளித்து அமரவைக்கவும் ஒரு காய் நகர்த்தல் நடைபெறுவதாகத் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகின்றன. இது, தகுதி படைத்த டிஜிபி தரத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு…

Read More

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் என்பவர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரனுக்கு எதிராக சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானது எனவும் ஆதாரங்கள் இல்லாமல் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளதால், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, விடுமுறை என்பதால், வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஞானசேகரன் நேரில் ஆஜர்படுத்தபட்டார். வழக்கில் இருந்து விடுவிக்க கோரி ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு காவல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்த நிலையில் இன்று(25.05.2025) இரு தரப்பு…

Read More

நீலகிரி மாவட்டம் ஊட்டி எமரால்டு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன்(48). இவர் இன்று(25.05.2025) காலை அவிநாசி செல்வதற்காக காரில் ஒரு பெண் உட்பட மூவருடன் மேட்டுப்பாளையம் வழியாக சென்று கொண்டிருந்தார். கார் சரியாக அன்னூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஈஸ்வரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நிலை தடுமாறிய கார் அதிவேகமாக சென்று சாலையோரத்தில் இருந்த சிறு பாலத்தின் தடுப்பு சுவற்றில் மோதி சுமார் 10 அடிக்கும் மேல் பறந்தது. மேலும்,சாலையோரம் இருந்த சக்தி தியேட்டரின் சுவற்றில் மோதி கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த மூவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது, சாலையில் நடந்து சென்ற முதியவரும் அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் உயிர் தப்பினார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக காரில் இருந்த மூவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினர். இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த…

Read More