Close Menu
    What's Hot

    இது புதுசா இருக்கே!. குப்பைகளை விற்று ரூ. 1.2 லட்சம் சம்பாதித்த கலைஞர்!

    இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் புதிய வரலாறு ; கோலி, சச்சினால் கூட செய்ய முடியாத சாதனை!

    டாஸ்மாக் மதுபானங்களுக்கு ரூ.10 செஸ் வரி? – அரசு திடீர் முடிவு ஏன்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பா? விவசாயிகள் போராட்டம்..
    தமிழ்நாடு

    நிலத்தடி நீருக்கு வரிவிதிப்பா? விவசாயிகள் போராட்டம்..

    Editor TN TalksBy Editor TN TalksJune 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    water 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்த நீருக்கு வரி விதிப்பு என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாமிகள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    நிலத்தடி நீர் எடுப்பை முறைப்படுத்திடும் திட்டத்தை அமலாக்கிட 1,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் (ஜல் சக்தி துறை ) ஹெச்.எம்.பாட்டீல், டெல்லியில் அறிவித்து உள்ளார். நிலத்தடி நீர் கட்டுப்பாடற்ற முறையில் வெளியே எடுத்து பயன்படுத்தப்படுகிறது. என இதை முறைப்படுத்திடும் முறையில் விவசாயிகள் சாகுபடிக்காக வெளியே எடுக்கும் நீரை அளவீடு செய்து விவசாயிகளுக்கு வரி விதித்திடவும், மாநில அரசுகளோடு இணைந்து இத்திட்டத்தை அமலாக்கிட 1600 கோடி ரூபாய் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது எனவும் அறிவித்து உள்ளார்.

    தமிழகத்தின் நீர் தேவை அண்டை மாநிலங்களை நம்பியே உள்ளது. தமிழகத்திற்கு தேவையான நீர் பங்கீடு பாதகமாக உள்ள நிலையிலும், வேளாண்மை உற்பத்தி பெருகி வருவதற்கு அடிப்படை நிலத்தடி நீர் பயன்பாடாகும். தேவைக்கு மேல் விவசாயிகள் எவரும் நிலத்தடி நீரை எடுப்பதில்லை. பயன்பாட்டுக்கு மேலாக நீரை எடுத்தாலும், அதனால் மோட்டார் உள்ளிட்ட மின்சாதன கருவிகள் பழுது பட்டு வீண் செலவு ஏற்படும் என்பது விவசாயிகளுக்கு தெரியும். நிலத்தடி நீரை மேம்படுத்தி சேமித்திட வேண்டும் என்ற அக்கறை விவசாமிகளுக்கும் இருக்கிறது.

    நிலத்தடி நீரை சேமித்திடும் அக்கறை அரசுக்கு உண்மையாகவே இருந்தால் இருக்கும் நீர் நிலைகளை தூர்வாரி, மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்திட கடலுக்குச் செல்லும் ஆயிரக் கணக்கான டி.எம்.சி நீரை சேமிக்கும் கலன்களை உருவாக்கிவிடும் திட்டங்களை வகுத்திட நிதியை ஒதக்கீடு செய்யாமல் விவசாயிகளையே குறி வைத்து தாக்கிவிடும் செயலே ஒன்றிய அமைச்சரின் அறிவிப்பாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நீண்ட நெடிய போராட்டங்கள், எண்ணற்ற விவசாயிகளின் இறப்பிற்கு பின் தான் தமிழ்நாட்டில் கட்டணமில்லா வேளாண் மின்சாரம் அமல்படுத்தப்படுகிறது. இதையும் துண்டித்திடவே ஒன்றிய அரசின் முன்னேற்பாடாகும்.

    ஆகவே மத்திய அரசு உடனடியாக இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும். இதை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை மாவட்ட விவசாயிகளின் சார்பாக மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் எங்கள் கோரிக்கையை முன் வைக்கிறோம் என்றனர் விவசாயிகள்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகூட்டணி இல்லையென்றால் திமுக 10% வாக்குகள் கூட வாங்காது.. அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எள்ளல்…
    Next Article பாமகவில் நிர்வாகிகளை நீக்கவும், நியமிக்கவும் ராமதாசிற்கே முழு அதிகாரம்..
    Editor TN Talks

    Related Posts

    டாஸ்மாக் மதுபானங்களுக்கு ரூ.10 செஸ் வரி? – அரசு திடீர் முடிவு ஏன்?

    July 11, 2026

    கோயம்பேடு பஸ் ஸ்டாண்டை மாற்றும் மெகா திட்டம்.. ரூ.350 கோடியில் தலைமைச் செயலகம்!

    July 11, 2026

    “மெட்ரோவில் மெல்லமா பேசுங்க…” – மீறினால் ரூ.2,500 அபராதம்! – சென்னை மெட்ரோ எச்சரிக்கை

    July 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இது புதுசா இருக்கே!. குப்பைகளை விற்று ரூ. 1.2 லட்சம் சம்பாதித்த கலைஞர்!

    இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் புதிய வரலாறு ; கோலி, சச்சினால் கூட செய்ய முடியாத சாதனை!

    டாஸ்மாக் மதுபானங்களுக்கு ரூ.10 செஸ் வரி? – அரசு திடீர் முடிவு ஏன்?

    தனியுரிமை சிக்கல்!. AI பட உருவாக்க அம்சத்தை அதிரடியாக நிறுத்திய மெட்டா!

    கோயம்பேடு பஸ் ஸ்டாண்டை மாற்றும் மெகா திட்டம்.. ரூ.350 கோடியில் தலைமைச் செயலகம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.