Close Menu
    What's Hot

    மர்ம நபரால் தொடர் தொல்லை: காவல் ஆணையரிடம் சென்னை மேயர் பிரியா பரபரப்பு புகார்!

    நீலகிரியில் மர்ம பூச்சி..!! உலா வரும் ‘கருப்புப் படை’யால் வெளியே வர தயங்கும் மக்கள்..!! பின்னணி என்ன..??

    தற்காலிக போர் நிறுத்தம்!. கச்சா எண்ணெய் விலை சரிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மதுரை: வரதட்சணை கேட்டு கொடுமை… தலைமை காவலர் கைது…
    தமிழ்நாடு

    மதுரை: வரதட்சணை கேட்டு கொடுமை… தலைமை காவலர் கைது…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 19, 2025Updated:July 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரையில் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய தலைமை காவலர் பூபாலன் கைது செய்யப்பட்டார்.

    மதுரை மாவட்டம் அப்பன் திருப்பதி காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் பூபாலன். இவர் தேனியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தனது கணவர் மற்றும் மாமனார் ஆகியோர் நாள்தோறும் கூடுதல் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமை படுத்துவதாக அப்பெண் புகார் தெரிவித்தார்.

    அந்த புகாரில், திருமணத்தின் போது 60 சவரண் நகை, இருசக்கர வாகனம், சீர்வரிசை உள்ளிட்ட பொருட்களை வழங்கினோம். ஆனால் மேலும் வரதட்சணை கேட்டு கணவர் பூபாலன் தன்னை கடுமையாக தாக்கியதாக கூறியிருக்கிறார். கணவர் தாக்கியதில் காயமடைந்த அந்த ஆசிரியை, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து ஆசிரியையின் பெற்றோரும் திருப்பதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் பூபாலனின் தந்தை செந்தில்குமாரும் போலீஸ் இன்ஸ்பெக்டராக சாத்தூரில் பணியாற்றி வந்துள்ளார்.

    இதற்கிடையே வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கியது குறித்து தனது சகோதரியிடம் காவலர் பூபாலன் சிரித்து சிரித்து பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அதில், ”தனது மனைவியை நகத்தால் கீறியதாகவும், முகத்தில் காயல் ஏற்படுத்தி, தொண்டையை இறுக்கி, கால்களில் தாக்கி நடக்க முடியாமல் செய்தாகவும், உதட்டில் காயம் ஏற்படுத்தியதாகவும்” கூறியிருக்கிறார் பூபாலன்.

    இந்த ஆடியோ போலீசாரின் உயர் அதிகாரிகள் வரை சென்ற நிலையில், பூபாலனை பணியிடை நீக்கம் செய்து மதுரை சரக டி.ஐ.ஜி., அபினவ் குமார் உத்தரவிட்டிருந்தார். இதேப் போல் வரதட்சணை கொடுமை புகாரில் அப்பெண்ணின் மாமனாரான இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரும் பணியிடை நீக்கம் செயப்பட்டார். இந்த நிலையில் தலைமை காவலர் பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்..!
    Next Article கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…
    Editor TN Talks

    Related Posts

    மர்ம நபரால் தொடர் தொல்லை: காவல் ஆணையரிடம் சென்னை மேயர் பிரியா பரபரப்பு புகார்!

    July 27, 2026

    நீலகிரியில் மர்ம பூச்சி..!! உலா வரும் ‘கருப்புப் படை’யால் வெளியே வர தயங்கும் மக்கள்..!! பின்னணி என்ன..??

    July 27, 2026

    தற்காலிக போர் நிறுத்தம்!. கச்சா எண்ணெய் விலை சரிவு!

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மர்ம நபரால் தொடர் தொல்லை: காவல் ஆணையரிடம் சென்னை மேயர் பிரியா பரபரப்பு புகார்!

    நீலகிரியில் மர்ம பூச்சி..!! உலா வரும் ‘கருப்புப் படை’யால் வெளியே வர தயங்கும் மக்கள்..!! பின்னணி என்ன..??

    தற்காலிக போர் நிறுத்தம்!. கச்சா எண்ணெய் விலை சரிவு!

    மாணவர்கள் மீது பெல்லட் கன், AK-47 பயன்பாடு… அமித் ஷா எங்கே ஒளிந்திருக்கிறார்? – கே.சி. வேணுகோபால் ஆவேசம்

    இணையத்தில் வெளியான ஜனநாயகன்… திருட்டுத் தனமாகப் பார்த்தவருக்கு நிபந்தனை முன் ஜாமீன்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.