Close Menu
    What's Hot

    போரா அல்லது சமரசமா?. 3 மணி நேர டிரம்ப்-ஜெலென்ஸ்கி சந்திப்பில் என்ன நடந்தது?

    மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு விபத்து!. 13 பேர் பலி, 98 பேர் காயம்!.

    சார்ஜர்கள் ஏன் கருப்பு வெள்ளை நிறத்தில் மட்டும் இருக்கின்றன?. ஆச்சரிய தகவல்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மதுரை: வரதட்சணை கேட்டு கொடுமை… தலைமை காவலர் கைது…
    தமிழ்நாடு

    மதுரை: வரதட்சணை கேட்டு கொடுமை… தலைமை காவலர் கைது…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 19, 2025Updated:July 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 13
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரையில் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய தலைமை காவலர் பூபாலன் கைது செய்யப்பட்டார்.

    மதுரை மாவட்டம் அப்பன் திருப்பதி காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் பூபாலன். இவர் தேனியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தனது கணவர் மற்றும் மாமனார் ஆகியோர் நாள்தோறும் கூடுதல் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமை படுத்துவதாக அப்பெண் புகார் தெரிவித்தார்.

    அந்த புகாரில், திருமணத்தின் போது 60 சவரண் நகை, இருசக்கர வாகனம், சீர்வரிசை உள்ளிட்ட பொருட்களை வழங்கினோம். ஆனால் மேலும் வரதட்சணை கேட்டு கணவர் பூபாலன் தன்னை கடுமையாக தாக்கியதாக கூறியிருக்கிறார். கணவர் தாக்கியதில் காயமடைந்த அந்த ஆசிரியை, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து ஆசிரியையின் பெற்றோரும் திருப்பதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் பூபாலனின் தந்தை செந்தில்குமாரும் போலீஸ் இன்ஸ்பெக்டராக சாத்தூரில் பணியாற்றி வந்துள்ளார்.

    இதற்கிடையே வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கியது குறித்து தனது சகோதரியிடம் காவலர் பூபாலன் சிரித்து சிரித்து பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அதில், ”தனது மனைவியை நகத்தால் கீறியதாகவும், முகத்தில் காயல் ஏற்படுத்தி, தொண்டையை இறுக்கி, கால்களில் தாக்கி நடக்க முடியாமல் செய்தாகவும், உதட்டில் காயம் ஏற்படுத்தியதாகவும்” கூறியிருக்கிறார் பூபாலன்.

    இந்த ஆடியோ போலீசாரின் உயர் அதிகாரிகள் வரை சென்ற நிலையில், பூபாலனை பணியிடை நீக்கம் செய்து மதுரை சரக டி.ஐ.ஜி., அபினவ் குமார் உத்தரவிட்டிருந்தார். இதேப் போல் வரதட்சணை கொடுமை புகாரில் அப்பெண்ணின் மாமனாரான இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரும் பணியிடை நீக்கம் செயப்பட்டார். இந்த நிலையில் தலைமை காவலர் பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்..!
    Next Article கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…
    Editor TN Talks

    Related Posts

    கிறிஸ்துமஸ் விழாவுக்கு யார் முதலில் செல்வது என்பதில் தான் திமுக – தவெக இடையே போட்டி!. அண்ணாமலை விமர்சனம்

    December 29, 2025

    தங்கம் விலை குறைவு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?. இன்றைய நிலவரம் இதோ!.

    December 29, 2025

    எஸ்.ஐ.ஆர். பணி: கணக்கெடுப்பு படிவத்தை சரியாக நிரப்பாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணி தொடக்கம்

    December 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போரா அல்லது சமரசமா?. 3 மணி நேர டிரம்ப்-ஜெலென்ஸ்கி சந்திப்பில் என்ன நடந்தது?

    மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு விபத்து!. 13 பேர் பலி, 98 பேர் காயம்!.

    சார்ஜர்கள் ஏன் கருப்பு வெள்ளை நிறத்தில் மட்டும் இருக்கின்றன?. ஆச்சரிய தகவல்!.

    கிறிஸ்துமஸ் விழாவுக்கு யார் முதலில் செல்வது என்பதில் தான் திமுக – தவெக இடையே போட்டி!. அண்ணாமலை விமர்சனம்

    IND W vs SL W| ஒரு போட்டி, பல சாதனைகள்!. இந்திய மகளிர் அணியின் வரலாற்று  சிறப்புமிக்க திறமை!.

    Trending Posts

    விரைவு ரயில்களின் நேர மாற்றம்: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! உங்கள் பயண நேரம் மாறுமா?

    December 29, 2025

    இன்றைய ராசிபலன் 29.12.2025: இவர்களுக்கு நினைத்தது நிறைவேறும்

    December 29, 2025

    போரா அல்லது சமரசமா?. 3 மணி நேர டிரம்ப்-ஜெலென்ஸ்கி சந்திப்பில் என்ன நடந்தது?

    December 29, 2025

    மெக்சிகோவில் ரயில் தடம் புரண்டு விபத்து!. 13 பேர் பலி, 98 பேர் காயம்!.

    December 29, 2025

    சார்ஜர்கள் ஏன் கருப்பு வெள்ளை நிறத்தில் மட்டும் இருக்கின்றன?. ஆச்சரிய தகவல்!.

    December 29, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.