Close Menu
    What's Hot

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»போலீசார் மீது நடிகர் மன்சூர் அலிகான் புகார்..
    தமிழ்நாடு

    போலீசார் மீது நடிகர் மன்சூர் அலிகான் புகார்..

    Editor TN TalksBy Editor TN TalksJuly 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    w 1280h 720croprect 0x0x0x0imgid 01hvpmn91z9wq5t0d757zmjsvnimgname asianet news 2024 04 17t234745.001
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலைய வாசலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    சென்னை மண்ணடி மரக்காயர் தெருவை சேர்ந்த கனி என்கிற வரிசை கனியிடம் பிளாட் வாங்குவதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு 35 லட்சம் ரூபாய் பணம் கொடுத்த நிலையில் வாங்குவதில் சட்ட பிரச்சனைகள் இருப்பதாக கூறியதை எடுத்து பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர்.ஆனால் பணத்தை கொடுக்காமல் கடந்த ஐந்து வருடங்களாக கேட்டு வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று மன்சூர் அலிகான் அவர்களின் மகன் துக்ளக் மண்ணடி பகுதிக்கு வந்து பணத்தை கேட்ட போது கனி தனது வீட்டை பூட்டிக்கொண்டு காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    பின்னர் போலீசார் வந்து அவர்கள் அனைவரையும் அழைத்து வந்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் விசாரணை மேற்கொண்டு வடக்கு கடற்கரை போலீசார் சட்டவிரோதமாக கூடுதல் ஆபாசமாக பேசுதல் மிரட்டல் அத்துமீறி நுழைதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நீதிமன்றத்தில் சென்று பணத்தை பெற்றுக் கொள்வதாக இரு தரப்பினரையும் எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்

    இது சம்பந்தமாக துக்ளக் மீது வழக்கு பதிவு செய்த காவல் நிலைய ஆய்வாளர் வேண்டுமென்றே இது அவதூறு பரப்ப வேண்டும் என்கிற அடிப்படையில் இதை செய்துள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார்.100-க்கு போன் செய்து புகார் அளித்தவுடன் என்ன ஏது என்று கூட ஆதாரம் இல்லாமல் சிசிடிவி கேமரா காட்சிகள் கூட இல்லாத நிலையில் அக்கம்பக்கத்தினர் அவர் வீட்டை பூட்டி கொண்டார் என கூறியும் கூட என் மகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அவனுடன் பழகிய அனைவருக்கும் தெரியும் அவன் எவ்வாறு பேசுவான் நடந்து கொள்வான் என்று அவதூறாக பேசியதாகவும் தகாத வார்த்தைகளில் பேசியதாக வழக்கு பதிவு செய்துள்ளார்கள். அவனுக்கும் திருமணமாக வேண்டும் அவனது தங்கைகளும் உள்ளனர். அவை வாழ்க்கையை ஏன் காவல்துறை இதுபோன்று செய்கிறார்கள். ஏன் வழக்கு பதிவு செய்தீர்கள் என கேட்டதற்கு ஆய்வாளர் விஜயகாந்த் அடிஷனல் கமிஷனர் தான் வழக்கு பதிவு செய்ய சொன்னார் என கூறுகிறார். எங்கேயோ ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு இங்கு என்ன நடப்பது என்பது குறித்து தெரியாமல் வழக்கு பதிவு செய்ய சொல்வது நியாயமா?. இது போன்று தான் திருபுவனத்தில் அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்டார். ஒரு சில காவல்துறையினர் நன்றாக இருந்தாலும் பல பேர் இதுபோன்று நடந்து கொள்கிறார்கள் என தெரிவித்தார்.

    கஞ்சா அடித்தார் என தெரிந்தவுடன் தன் மகனை நானே அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன். போலீசார் என் முன்னிலையில் தான் கைது செய்தார்கள். தவறு செய்யும் பட்சத்தில் ஒரு தந்தையாக நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தேன். ஆனால் எந்த தவறும் செய்யாத போது தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது குறித்து ஒரு தந்தையாக நான் கேட்க தான் வேண்டும் என தழுதழுத்த குரலில் கூறினார்.

    எனவே காவல்துறை தன் மகன் மீது பதியப்பட்டுள்ள வழக்கு பதிவை ரத்து செய்ய வேண்டும் இது சம்பந்தமாக வடபழனி காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளேன் விசாரணை நடத்தி எனது படத்தை பெற்று தருமாறும் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூர் நீதிபதிக்கு அறிவுரை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்
    Next Article திராவிட இயக்கங்களால் தான் தமிழகம் முன்னேறிய மாநிலமாக இருக்கின்றது – உதயநிதி
    Editor TN Talks

    Related Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.