Close Menu
    What's Hot

    கட்சியிலிருந்து போக நினைப்பவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள்..!! மம்தா பானர்ஜி அதிரடி..!!

    மோசமடையும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை..!! 20வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்..!!

    ஆடி பிறந்தாச்சு..!! களைகட்டும் தேங்காய் சுடும் பண்டிகை.. ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை அமோகம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மாணவர்களை கை, கால்களை அமுக்கி விட வைத்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை
    தமிழ்நாடு

    மாணவர்களை கை, கால்களை அமுக்கி விட வைத்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2025 09 03 153043
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தருமபுரி அருகே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையின் கை கால்களை பள்ளி மாணவர்கள் அமுக்கி விட்ட வீடியோ வெளியான நிலையில் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாவேரிப்பட்டி கிராமத்தில்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளியில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வரும் கலைவாணி என்பவர் பள்ளி நேரத்தில், மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய மேசையின் மீது படுத்து கொண்டு மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தி கை கால்களை அமுக்கி விட வைத்துள்ளார்.

    தலைமை ஆசிரியை கலைவாணி தினமும் இது போன்ற செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாகவும், இதுகுறித்து பெற்றோரிடம் கூறகூடாது எனவும் கூறி மாணவர்களை மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியையின் கை, கால்களை அமுக்கிவிட்டு பணிவிடை செய்யும்  வீடியோ வெளியான நிலையில், அரூர் மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் தலைமையிலான குழுவினர் பள்ளிக்கு நேரில் சென்று தலைமை ஆசிரியர்  மற்றும் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அதேநேரம் பெற்றோர்களும் விசாரணைக்கு வந்த அதிகாரிகளிடம் தலைமை ஆசிரியையின் நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவித்தனர். அதன் பிறகு தலைமை ஆசிரியை கலைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியை கலைவாணி அப்பியம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்து மாவட்ட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  இருந்தபோதிலும் தலைமை ஆசிரியையின் இது போன்ற செயலுக்கு அரசு சார்பில் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொண்டு இருக்க வேண்டும், ஆனால் சஸ்பெண்ட் செய்யாமல் பணியிடை மாற்றம், டிரான்ஸ்பர் செய்து உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    anbil mahesh arur dharmapuri government school school student
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“தாயார் குறித்து அவதூறு..கலங்கிய மோடி” பிரதமருக்கு இதெல்லாம் நினைவில் இருக்கிறதா?…
    Next Article பொன்முடி பேசிய மொத்த வீடியோவும் நீதிமன்றத்தில் தாக்கல்
    Editor TN Talks

    Related Posts

    ஆடி பிறந்தாச்சு..!! களைகட்டும் தேங்காய் சுடும் பண்டிகை.. ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை அமோகம்..!!

    July 17, 2026

    சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு பயணம்..!! 2 தமிழக அமைச்சர்களுக்கு மத்திய அரசு ‘ஷோ காஸ்’ நோட்டீஸ்!

    July 17, 2026

    மக்கள் தொகை கணக்கெடுப்பு: வீடுகள் கணக்கெடுக்கும் முதல் கட்டப் பணி இன்று ஆரம்பம்..!!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கட்சியிலிருந்து போக நினைப்பவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள்..!! மம்தா பானர்ஜி அதிரடி..!!

    மோசமடையும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை..!! 20வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்..!!

    ஆடி பிறந்தாச்சு..!! களைகட்டும் தேங்காய் சுடும் பண்டிகை.. ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை அமோகம்..!!

    சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு பயணம்..!! 2 தமிழக அமைச்சர்களுக்கு மத்திய அரசு ‘ஷோ காஸ்’ நோட்டீஸ்!

    மக்கள் தொகை கணக்கெடுப்பு: வீடுகள் கணக்கெடுக்கும் முதல் கட்டப் பணி இன்று ஆரம்பம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.