Close Menu
    What's Hot

    கட்சியிலிருந்து போக நினைப்பவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள்..!! மம்தா பானர்ஜி அதிரடி..!!

    மோசமடையும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை..!! 20வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்..!!

    ஆடி பிறந்தாச்சு..!! களைகட்டும் தேங்காய் சுடும் பண்டிகை.. ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை அமோகம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஈரோடு மலையாளிகளுக்கு பழங்குடியினர் சான்று தந்தது எப்படி?
    தமிழ்நாடு

    ஈரோடு மலையாளிகளுக்கு பழங்குடியினர் சான்று தந்தது எப்படி?

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    f1c18e40 f82f 11ef a8b4 b37546a32a57.jpg
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பழங்குடியினர் சான்று பெற தகுதியுள்ள மாவட்டங்களின் பட்டியலில் இடம்பெறாத நிலையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மலையாளிகள் சமூகத்தினருக்கு பழங்குடியினர் சாதிச் சான்று வழங்கியது எப்படி என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பழங்குடியினர் சாதிச் சான்று வழங்கக் கோரிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மலையாளி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மலையாளி சமூகத்தினர் 14 பேருக்கு பழங்குடியினர் சான்று வழங்கப்பட்டுள்ளதாகவும், ஈரோட்டைச் சேர்ந்த மலையாளி சமுதாயத்தினருக்கும் பழங்குடியினர் சான்று வழங்கும் வகையில் பட்டியலில் சேர்க்க தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

    இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், தர்மபுரி, வட ஆற்காடு, தென் ஆற்காடு, புதுக்கோட்டை, சேலம், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மலையாளி சமுதாயத்தினருக்கு மட்டும் பழங்குடியினர் சான்று பெற தகுதி உள்ளதாகவும், இந்த மாவட்டங்கள் மட்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், மாநில அரசின் பரிந்துரை மட்டும் போதாது; குடியரசு தலஇவர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்; நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் எனத் தெரிவித்தனர்.

    பழங்குடியினர் சான்று பெற தகுதியுள்ள மாவட்டங்களின் பட்டியலில் இடம்பெறாத நிலையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மலையாளிகள் சமூகத்தினருக்கு எந்த அடிப்படையில் பழங்குடியினர் சாதிச் சான்று வழங்கப்பட்டது என நான்கு வாரங்களில் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநவம்பர் 1 முதல் வால்பாறையிலும் இ-பாஸ் முறை
    Next Article பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் கைது
    Editor TN Talks

    Related Posts

    ஆடி பிறந்தாச்சு..!! களைகட்டும் தேங்காய் சுடும் பண்டிகை.. ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை அமோகம்..!!

    July 17, 2026

    சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு பயணம்..!! 2 தமிழக அமைச்சர்களுக்கு மத்திய அரசு ‘ஷோ காஸ்’ நோட்டீஸ்!

    July 17, 2026

    மக்கள் தொகை கணக்கெடுப்பு: வீடுகள் கணக்கெடுக்கும் முதல் கட்டப் பணி இன்று ஆரம்பம்..!!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கட்சியிலிருந்து போக நினைப்பவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள்..!! மம்தா பானர்ஜி அதிரடி..!!

    மோசமடையும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை..!! 20வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்..!!

    ஆடி பிறந்தாச்சு..!! களைகட்டும் தேங்காய் சுடும் பண்டிகை.. ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை அமோகம்..!!

    சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு பயணம்..!! 2 தமிழக அமைச்சர்களுக்கு மத்திய அரசு ‘ஷோ காஸ்’ நோட்டீஸ்!

    மக்கள் தொகை கணக்கெடுப்பு: வீடுகள் கணக்கெடுக்கும் முதல் கட்டப் பணி இன்று ஆரம்பம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.