Close Menu
    What's Hot

    இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு..!! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்த ராகவா லாரன்ஸ்..!!

    பாரதிராஜா ஒரு திரையுலக வித்தகர்..!! மண் வாசனை மிகுந்த அவரது குரல் என்றும் ஒலிக்கும்..!! உதயநிதி புகழாரம்..!!

    கெத்து காட்டும் பிரதமர் நரேந்திர மோடி..!! நேருவின் சாதனை முறியடிப்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»கரூர் கூட்டநெரிசல் விவகாரம்: 13ஆம் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார் விஜய்?
    அரசியல்

    கரூர் கூட்டநெரிசல் விவகாரம்: 13ஆம் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கிறார் விஜய்?

    Editor TN TalksBy Editor TN TalksOctober 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vijay Karur Stampede 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினரை விஜய் வரும் 13ஆம் தேதி நேரில் சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கரூர் வேலாயுதம்பாளையத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். ஆளும் திமுக தரப்பினரும், தவெக தரப்பினரும் மாறி, மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர். தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை என தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

    இதற்கிடையில், விஜய் கரூர் செல்லும்போது எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படாத வகையில், பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வலியுறுத்தி, தமிழக வெற்றி கழகத்தினர் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாகவும், நீதிமன்ற வழிகாட்டுதலோடு பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.

    இந்நிலையில், கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம், தவெக தலைவர் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்ட நெரிசலில் பலியான தனுஷ்குமாரின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த விஜய் உயிரிழந்தவரின் தங்கையிடம் அண்ணன் ஸ்தானத்தில் இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.

    இந்நிலையில், நேற்று புதன்கிழமை (அக்-08) அன்று தமிழக வெற்றிக் கழக வழக்கறிஞர் அறிவழகன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களை விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூற அனுமதி மற்றும் பாதுகாப்பு வேண்டி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தார்.

    இந்நிலையில், விஜய் வருகின்ற 13ஆம் தேதி, கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கரூருக்கு நேரடியாக சென்று இறந்தவர்களின் குடும்பத்தினரை ஒரே அரங்கத்தில் வரவழைத்து அவர்களிடம், வருத்தத்தை தெரிவித்து இழப்பீட்டுக்கான காசோலையை வழங்கு விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்குள் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்க உள்ளதாகவும், அரங்கத்திற்குள் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    நிகழ்ச்சிக்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இடத்தை தேர்வு செய்த பிறகு அதற்கான அனுமதியை கரூர் போலீசார் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    karur stampede meeting TVK Victims Family Vijay கரூர் கூட்டநெரிசல் சந்திப்பு தவெக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மனு விஜய்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை – தவெக உறுதி என தகவல்
    Next Article தோனி வருகையால் குதூகலமான மதுரை விமான நிலையம்! – ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு
    Editor TN Talks

    Related Posts

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    June 10, 2026

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    June 9, 2026

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு..!! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்த ராகவா லாரன்ஸ்..!!

    பாரதிராஜா ஒரு திரையுலக வித்தகர்..!! மண் வாசனை மிகுந்த அவரது குரல் என்றும் ஒலிக்கும்..!! உதயநிதி புகழாரம்..!!

    கெத்து காட்டும் பிரதமர் நரேந்திர மோடி..!! நேருவின் சாதனை முறியடிப்பு..!!

    கறுப்பர் இனவெறியா?. சோமாலிய நடுவரை நாட்டை விட்டு விரட்டிய அமெரிக்கா!. வெடித்த சர்ச்சை!

    சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்புமனு ஆவணங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் ஆர்டர்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.