Close Menu
    What's Hot

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»LIFESTYLE»ஆரோக்கியம்»ஒருவர் ஒருநாளில் எவ்வளவு பால் குடிக்கலாம்?
    ஆரோக்கியம்

    ஒருவர் ஒருநாளில் எவ்வளவு பால் குடிக்கலாம்?

    Editor TN TalksBy Editor TN TalksNovember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    milks
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பால் என்றாலே நிறைய ஊட்டச்சத்து அதில் உள்ளது என்றுதான் நாம் நினைத்திருப்போம். குழந்தைப் பருவத்தில், ‘தினமும் ஒரு கப் சூடான பாலை குடித்து வந்தால் எலும்புகள் வலிமைப்பெறும்’ என்று பலரும் சொல்லி கேட்டிருப்போம்.

    ஆனால் கடந்த சில தினங்களாகவே, பசும்பாலை விட இது நல்லது, அது நல்லது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வீகன் பின்பற்றுவோர் இன்னும் ஒருபடி மேலே போய் ‘பசும்பாலே வேண்டாம், சோயா பால் குடியுங்கள்’ என்கின்றனர். இதற்கிடையே எருமைப்பால் முதல் ஒட்டகப்பால் வரை எல்லா பால் வகைகளும் சந்தைக்கு வந்துவிட்டன. இப்போ என்ன, பசும்பாலை குடிக்கலாமா வேணாமா என நீங்கள் யோசிக்கக்கூடும்.

    இதுபற்றி Nutrition & Metabolism மருத்துவ இதழில் செய்யப்பட்ட ஆய்வில், மிதமான அளவில் அன்றாடம் பால் குடிப்பதன்மூலம் இதய நோய்கள், பக்கவாதம், டைப் 2 நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை தடுக்கப்படும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

    பாலில் அதிக தரமான புரதம், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் பி 12, பாஸ்பரஸ் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இவையாவும் நம் எலும்புகளின் ஆரோக்கியத்தை காப்பதுடன், தசைகளை வலிமைப்படுத்தி, நரம்புகளுக்கு புத்துணர்வூட்டுவது தெரியவந்துள்ளது. இத்தகைய பாலை என்ன வடிவில் உட்கொள்வது கூடுதல் பலன்களை கொடுக்கும்? யார் யார் எவ்வளவு பால் தினசரி குடிக்கலாம்? பார்க்கலாம்…

    பாலை எப்போதும் காய்ச்சிக் குடிப்பதே சிறந்தது. அப்போதுதான், அதில் உள்ள தொற்றுக்களும் பாக்டீரியாவும் அழிக்கப்படும். அதேநேரத்தில் பாலை அதிகமாகக் கொதிக்கவைக்கத் தேவையில்லை. சில நிமிடங்கள் காய்ச்சினாலே போதுமானது.

    5 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள், தினமும் சராசரியாக 400 மி.லி பால் வரை அருந்தலாம் என்பதும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பால் அருந்தலாம் என்பதும் நிபுணர் பரிந்துரையாக உள்ளது.

    இளம் வயதினர் மிதமான கொழுப்புள்ள பாலையும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்த கொழுப்புள்ள பாலையும், வயதானவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலையும் குடிப்பது சிறந்தது.

    கடையிலிருந்து வாங்கி வந்ததும், பாலை உடனே பயன்படுத்திவிட வேண்டும். அவசியம் ஏற்பட்டால், ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, பாக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் நாள் வரை பயன்படுத்தலாம். முடிந்த வரை தேவையானபோது வாங்கி, அப்போதே பயன்படுத்துவது நல்லது.

    லாக்டோஸ் ஒவ்வாமை இருப்பவர்கள், இதய நோய் அல்லது கொழுப்புச்சத்து அதிகம் இருப்பவர்கள், புற்றுநோய் அபாயம் கொண்டவர்கள், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்டவர்கள் போன்றோர் பால் குடிப்பதை தவிர்க்கலாம். அல்லது மருத்துவ ஆலோசனையுடன் அருந்தி வரலாம்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரூ. 1200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் வாரணாசி.. ராஜமவுலி, மகேஷ் பாபு சம்பளத் தொகை எவ்வளவு தெரியுமா?
    Next Article அட இததானே நாங்க எதிர்பார்த்தோம் ; ஜனநாயகன் பட தயாரிப்பாளர் எடுத்த முடிவால் உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள் !!!
    Editor TN Talks

    Related Posts

    உடல் எடை அதிகரிப்பா? காலையில் இதை குடிச்சு பாருங்க!

    December 26, 2025

    குழந்தைகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய பழங்கள்! லிஸ்ட் இதோ!

    December 26, 2025

    நாய்களால் கெட்ட சக்திகளை உணர முடியுமா?

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    சுங்கச்சாவடிகளில் இனி ‘நோ கேஷ்’!. ஏப்ரல் 10 முதல் அதிரடி மாற்றம்!

    மோடி முதல் யோகி வரை!. தமிழகம் வரும் தலைவர்கள்!. அண்ணாமலைக்கும் வாய்ப்பு!.

    ஈரான் போர் எதிரொலி!. இந்தியாவில் தாறுமாறாக உயரும் குடிநீர் பாட்டில் விலை!

    Trending Posts

    இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!

    April 4, 2026

    ஈரான் போர் எதிரொலி!. இந்தியாவில் தாறுமாறாக உயரும் குடிநீர் பாட்டில் விலை!

    April 4, 2026

    “விஜயகாந்தை போல விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார்”!. டிடிடி தினகரன் பரபரப்பு பேட்டி!

    April 4, 2026

    எதிரணிகளை அலறவிட்ட சேப்பாக்கம்; ஆனா இப்போ… CSK-வின் தொடர் தோல்வியால் வேதனை!.

    April 4, 2026

    தமிழக தேர்தல்!. “யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது; கூட்டணி ஆட்சிதான்!” ஆற்காடு பஞ்சாங்கக் கணிப்பு!

    April 4, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.