Close Menu
    What's Hot

    நாய்களால் கெட்ட சக்திகளை உணர முடியுமா?

    ஸ்டாலின், இபிஎஸ்சுடன் அடுத்தடுத்து எல்.கே. சுதிஷ் சந்திப்பு! ஏன் தெரியுமா?

    ஆழித்தாண்டவம் ஆடிய சுனாமி! மறக்க முடியாத சோக நாள்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»தெலங்கானா: ஒரேநாளில் 37 நக்சல்கள் ஆயுதங்களுடன் சரண்!
    இந்தியா

    தெலங்கானா: ஒரேநாளில் 37 நக்சல்கள் ஆயுதங்களுடன் சரண்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தெலங்கானா மாநிலத்தில் நக்சல் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உள்பட 37 பேர் இன்று (நவ. 22) ஒரே நாளில் ஆயுத நடவடிக்கையை கைவிட்டுவிட்டு, அமைதி வாழ்க்கைக்காக சரணடைந்தனர்.

    நாடு முழுதும் உள்ள நக்சல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக நக்சல் செயல்பாடுகள் அதிகமுள்ள மாநிலங்களில் நடவடிக்கைகளை வேகப்படுத்தி வருகிறது. பீகார், ஜார்க்கண்ட், தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் செயல்பாட்டில் இருக்கும் நக்சல் அமைப்பினர் தங்களின் ஆயுத நடவடிக்கையை  கைவிட்டு, சரண் அடைந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தெலங்கானா மாநிலத்தில் இன்று (நவ. 22) ஒரே நாளில் நக்சல் அமைப்பின் நிர்வாகிகள் உள்பட 37 பேர் ஆயுத நடவடிக்கையை கைவிட்டு சரணடைந்துள்ளனர். அமைதியான, பாதுகாப்பான, அன்றாட வாழ்க்கைச் சூழலை அனுபவிக்கும் எண்ணத்தில் நக்சல்களின் சரண் நடவடிக்கை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சரணடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாவர்.

    நவீன ஏகே 47 ரக துப்பாக்கிகள், எஸ்எல்ஆர் ரக துப்பாக்கிகள், 330 ரக துப்பாக்கிகள், ஜி3 வகை துப்பாக்கி, தோட்டாக்கள் ஆகிய ஆயுதங்களை சரணடைந்த நக்சல்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.

    தடை செய்யப்பட்ட நக்சல் அமைப்பைச் சேர்ந்த 37 பேர் சரண் அடைந்துள்ளதாகவும்,  அவர்களில் 3 பேர் முக்கியமானவர்கள் என்றும் தெலுங்கானா டிஜிபி ஷிவாதர் ரெட்டி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். 59 பேர் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் 50 வயதை கடந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். தலைமறைவாக உள்ள நக்சல் அமைப்பினரும், சரணடைந்து, அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டுமென அழைப்பு விடுப்பதாகவும் டிஜிபி ஷிவாதர் ரெட்டி தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜெர்மனியை சேர்ந்த பிரபல தனியார் நிறுவனம் புனேவில் கிளையை திறந்துள்ளது !!!
    Next Article தலைமைச் செயலாளர், தேனி ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பிடிவாரண்ட்! நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி
    Editor TN Talks

    Related Posts

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    December 26, 2025

    தண்டவாளம் நடுவில் நின்ற ஆட்டோ! வந்தே பாரத் ரயில் தப்பியது

    December 25, 2025

    டெல்லி தேவாலயத்தில் மோடி பிரார்த்தனை! கிறிஸ்துமஸை முன்னிட்டு வழிபாடு

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாய்களால் கெட்ட சக்திகளை உணர முடியுமா?

    ஸ்டாலின், இபிஎஸ்சுடன் அடுத்தடுத்து எல்.கே. சுதிஷ் சந்திப்பு! ஏன் தெரியுமா?

    ஆழித்தாண்டவம் ஆடிய சுனாமி! மறக்க முடியாத சோக நாள்

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    Trending Posts

    ரயில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

    December 26, 2025

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    நாய்களால் கெட்ட சக்திகளை உணர முடியுமா?

    December 26, 2025

    ஸ்டாலின், இபிஎஸ்சுடன் அடுத்தடுத்து எல்.கே. சுதிஷ் சந்திப்பு! ஏன் தெரியுமா?

    December 26, 2025

    ஆழித்தாண்டவம் ஆடிய சுனாமி! மறக்க முடியாத சோக நாள்

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.