Close Menu
    What's Hot

     “டெல்லி போராட்டம்: நானாக இருந்தால் சுட்டுக்கொன்றிருப்பேன்..!” –ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதியின் சர்ச்சை பேச்சு

    இனி நடக்கப்போகும் சம்பவத்தை மட்டும் பாருங்க..!! மார்க்கண்டேயனை நேரில் சந்தித்த உதயநிதி பாய்ச்சல்..!!

    காவிரி உரிமையில் சமரசம் கூடாதாம்..!! கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்க்கு துரைமுருகன் ‘வார்னிங்’..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மீண்டும் மிக கனமழை… 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்
    தமிழ்நாடு

    மீண்டும் மிக கனமழை… 5 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025Updated:December 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250524 WA0019
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    5 மாவட்டங்களுக்கு இன்று (டிச.2) ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 27ஆம் தேதி வங்கக்கடலில் உருவான ‘டிட்வா புயல்’ காரணமாக, தமிழ்நாட்டில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இலங்கையில் தனது கோர தாண்டவத்தை காண்பித்த டிட்வா புயல், புதுச்சேரி – வட தமிழகம் – தெற்கு ஆந்திரா கடற்கரையோர பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கத் தொடங்கியது.

    தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னை அருகே நகராமல் மையம் கொண்டுள்ளது. இதனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒருசில இடங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நேற்று கொட்டித் தீர்த்த மழையின் தாக்கம் இன்று குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வரும் நிலையில், தரைக்காற்றின் வேகம் இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கிறது. இதனால், சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கம் மற்றும் எண்ணூர் பகுதியில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    தென்மேற்கு வங்காள விரிகுடா, மேற்கு மத்திய வங்காள விரிகுடா, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரைகளில் மையம் கொண்டுள்ள புயல், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 40 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு வடகிழக்கில் 130 கி.மீ தொலைவிலும், கடலூருக்கு வடக்கு-வடகிழக்கில் 150 கி.மீ தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே 180 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

    அதேபோல, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதி வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரைகளிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. இது வட தமிழகம் – புதுச்சேரி கடற்கரைகளை நோக்கி மெதுவாக நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன்பிறகு, கடற்கரையை நோக்கி நகரும்போது, அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக பலவீனமடைய வாய்ப்புள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடிட்வா புயலால் சேதமடைந்த வேளாண் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு: தமிழக அரசு
    Next Article நேற்று ரூ.720 உயர்வு.. இன்று ரூ.240 குறைவு.. போக்கு காட்டும் தங்கம் விலை
    Editor TN Talks

    Related Posts

    இனி நடக்கப்போகும் சம்பவத்தை மட்டும் பாருங்க..!! மார்க்கண்டேயனை நேரில் சந்தித்த உதயநிதி பாய்ச்சல்..!!

    July 27, 2026

    காவிரி உரிமையில் சமரசம் கூடாதாம்..!! கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்க்கு துரைமுருகன் ‘வார்னிங்’..!!

    July 27, 2026

    ரூ.28 கோடி ஊழல் வழக்கு.. Ex. அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு செக் வைத்த சென்னை ஐகோர்ட்..!!

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     “டெல்லி போராட்டம்: நானாக இருந்தால் சுட்டுக்கொன்றிருப்பேன்..!” –ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதியின் சர்ச்சை பேச்சு

    இனி நடக்கப்போகும் சம்பவத்தை மட்டும் பாருங்க..!! மார்க்கண்டேயனை நேரில் சந்தித்த உதயநிதி பாய்ச்சல்..!!

    காவிரி உரிமையில் சமரசம் கூடாதாம்..!! கர்நாடகா செல்லும் முதல்வர் விஜய்க்கு துரைமுருகன் ‘வார்னிங்’..!!

    ரூ.28 கோடி ஊழல் வழக்கு.. Ex. அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு செக் வைத்த சென்னை ஐகோர்ட்..!!

    திமுக டீம் ரெடி.. ஒன்றிணையும் பழைய அதிகாரிகள்.. உளவுத்துறையின் ரகசிய ஆபரேஷன்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.