Close Menu
    What's Hot

    தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம்: காவல்துறைக்கு அளித்தது தமிழக அரசு

    24,600 இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்! அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

    ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. நாடு முழுவதும் 123 ரயில்களில் வேகம் அதிகரிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ஆஹா!. இனி பணி நேரம் முடிந்தபின் ஆபிஸ் mail-க்கு பதிலளிக்க தேவையில்லை!. மசோதா நிறைவேற்றம்!.
    இந்தியா

    ஆஹா!. இனி பணி நேரம் முடிந்தபின் ஆபிஸ் mail-க்கு பதிலளிக்க தேவையில்லை!. மசோதா நிறைவேற்றம்!.

    Editor web3By Editor web3December 8, 2025Updated:December 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Right to Disconnect Bill
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பணி நேரத்திற்கு பிறகு அல்லது விடுமுறை நாட்களில், தனியார் நிறுவனங்கள் வேலை தொடர்பான மின்னஞ்சல்கள் மற்றும் போன் கால் அழைத்தால் அதற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது குறித்த தனிநபர் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே இந்த மசோதாவை தாக்கல் செய்த நிலையில், இந்த மசோதா வாக்கெடுப்புக்கு அனுப்பப்படும் என்றும், அதன் பின் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

    விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு நாட்களிலும், பணி நேரம் முடிந்த பின்னரும் அலுவலக மேல் அதிகாரிகளிடமிருந்து மின்னஞ்சல் வந்து அந்த பணியை முடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த “Right to Disconnect Bill” (தொடர்பைத் துண்டிக்கும் உரிமை மசோதா) என்பது, பணியாளர்கள் அலுவலக நேரத்திற்குப் பிறகு வேலை தொடர்பான அழைப்புகள், மின்னஞ்சல்கள் மற்றும் பிற தகவல்தொடர்புகளுக்குப் பதிலளிக்க மறுக்கும் சட்டப்பூர்வ உரிமையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

    இந்த மசோதாவில் பணியாளர்கள் அலுவலக நேரம் முடிந்த பிறகும், விடுமுறை நாட்களிலும் வேலை தொடர்பான எந்தவொரு மின்னணுத் தகவல்தொடர்புகளுக்கும் (அழைப்புகள், மின்னஞ்சல்கள், மெசேஜ்கள்) பதிலளிக்க வேண்டியதில்லை. ஒருவர் அலுவலக நேரம் முடிந்த பிறகு அழைப்புகளுக்குப் பதிலளிக்க மறுத்தால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது.

    பணியாளர் தனது விருப்பத்தின் பேரில், அலுவலக நேரத்திற்குப் பிறகு வேலை செய்ய ஒப்புக்கொண்டால், அவருக்குச் சாதாரண ஊதிய விகிதத்தில் ஓவர் டைம் சம்பளம் வழங்கப்பட வேண்டும். இது ஊதியம் இல்லாத ஓவர் டைம் வேலைகள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது. இந்த உரிமையைப் பாதுகாக்கவும், நிறுவனங்கள் விதிகளைக் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்தவும் ‘ஊழியர்கள் நல ஆணையம்’ (என்ற ஓர் அமைப்பு உருவாக்கப்படும் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

    "Right to Disconnect Bill" after work emails loksabha mp supriya no calls
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமெரிக்கா இனி ரஷ்யாவை எதிரியாகக் கருதாது!. புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையில் திருத்தம்!.
    Next Article விமானத் துறையில் இரட்டை வேடம்!. விழித்துக்கொண்டதா மத்திய அரசு?. ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!.
    Editor web3
    • Website

    Related Posts

    24,600 இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்! அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

    December 27, 2025

    ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. நாடு முழுவதும் 123 ரயில்களில் வேகம் அதிகரிப்பு

    December 27, 2025

    100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் ரத்து!. நாடு தழுவிய பிரசாரத்திற்கு கார்கே அழைப்பு!

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம்: காவல்துறைக்கு அளித்தது தமிழக அரசு

    24,600 இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்! அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

    ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. நாடு முழுவதும் 123 ரயில்களில் வேகம் அதிகரிப்பு

    அதிமுக, பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் – நயினார் நாகேந்திரன் பேட்டி

    செயல்படாத அதிமுக்கிய ‘ஆதார்’ சேவை மையம்! விழிபிதுங்கும் மக்கள்!

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    சூப்பர் டூப்பர் ஹிட்! ரூ.1,000 கோடியை தாண்டியது துரந்தர் வசூல்!

    December 27, 2025

    ஆலியா பட்டின் “ஆல்பா” ரிலீஸ் மீண்டும் ஒத்திவைப்பு

    December 27, 2025

    தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவு தெரியுமா?

    December 20, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.