Close Menu
    What's Hot

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    “என்னை ஏமாத்திட்டாங்க..” விஜய் காரை மறித்து கதறிய பெண்! பரபரப்பான பனையூர்!!

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»கணவருடன் பிரச்சனை!. பிபி மாத்திரையை சாப்பிட்டு சீரியல் நடிகை தற்கொலை!. சென்னையில் அதிர்ச்சி!
    சினிமா

    கணவருடன் பிரச்சனை!. பிபி மாத்திரையை சாப்பிட்டு சீரியல் நடிகை தற்கொலை!. சென்னையில் அதிர்ச்சி!

    Editor web3By Editor web3December 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    serial actress
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக பிபி மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு சீரியல் நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திரையுலகில் பெண் நடிகைகள் மற்றும் துணை நடிகைகள் கடினமாக உழைத்து முன்னேறி வருகின்றனர். ஆனால், குடும்ப சிக்கல் அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகளால் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். இதுபோன்ற செய்திகள் பலருக்கும் அதிர்ச்சியை தருகிறது. தற்கொலை என்பது தொடர்கதையாகி வருகிறது. நடிகர் சாய் பிரஷாந்த் தொடங்கி VJ சித்ரா வரை இதுபோன்ற அதிர்ச்சிகரமான முடிவுகளை எடுத்த எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

    இந்நிலையில், விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியலில் நடித்த நடிகை ராஜேஸ்வரி(39) கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். சென்னை பிராட்வே தாயப்பன் முதலித் தெருவில், சீரியல் நடிகை ராஜேஸ்வரி (39) மற்றும் சதீஷ் இருவரும் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு, மகன் மற்றும் மகளுடன் குடும்பமாக வசித்து வந்துள்ளனர்.

    ராஜேஸ்வரியின் கணவர் SVS ஆயில் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். சீரியல் நடிகை ராஜேஸ்வரி பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியலில் நடித்து வந்துள்ளார். ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் சதீஷ் இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு சண்டையிட்டு வந்துள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவன் மனைவி இருவருக்கும் குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. குடும்ப பிரச்சினையின் காரணமாக தனது கணவனை விட்டு கடந்த திங்கட்கிழமை அன்று சைதாப்பேட்டை விஜிபி சாலையில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு ராஜேஸ்வரி சென்றுள்ளார்.

    அங்கு சென்ற பிறகும் மன உளைச்சலில் இருந்த ராஜேஸ்வரி, அவரது தாயாரின் பிபி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுள்ளார். இதனை அறிந்த தாயார், உடனடியாக ராஜேஸ்வரியை அருகில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை ராஜேஸ்வரிக்கு அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Chennai husband - wife problem serial actress suicide
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஈரோட்டில் திட்டமிட்டபடி தவெக மாநாடு!. தடை ஏதும் இல்லை!. செங்கோட்டையன் பேட்டி!
    Next Article காலமானார் சிவ்ராஜ் பாட்டீல்… கார்கே உள்ளிட்டோர் இரங்கல்
    Editor web3
    • Website

    Related Posts

    ரூ.900 கோடி வசூல்… தொடர்ந்து பட்டையை கிளப்பும் துரந்தர்

    December 23, 2025

    அரசியலுக்கு வராமலேயே நல்லது செய்ய முடியும்: சிவராஜ்குமார் கருத்து

    December 23, 2025

    “பராசக்தி” ரிலீஸ் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய்யும், சீமானும் ஆர்எஸ்எஸ்சின் கையாட்கள்! புட்டு புட்டு வைத்த திருமாவளவன்

    “என்னை ஏமாத்திட்டாங்க..” விஜய் காரை மறித்து கதறிய பெண்! பரபரப்பான பனையூர்!!

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    ரூ.900 கோடி வசூல்… தொடர்ந்து பட்டையை கிளப்பும் துரந்தர்

    கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு… சிஎஸ்கே முன்னாள் வீரர் அறிவிப்பு

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    December 23, 2025

    உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரி!. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இடி அமீன்!.

    December 23, 2025

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    December 23, 2025

    “இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.