Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»கணவருடன் பிரச்சனை!. பிபி மாத்திரையை சாப்பிட்டு சீரியல் நடிகை தற்கொலை!. சென்னையில் அதிர்ச்சி!
    சினிமா

    கணவருடன் பிரச்சனை!. பிபி மாத்திரையை சாப்பிட்டு சீரியல் நடிகை தற்கொலை!. சென்னையில் அதிர்ச்சி!

    Editor web3By Editor web3December 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    serial actress
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக பிபி மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு சீரியல் நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திரையுலகில் பெண் நடிகைகள் மற்றும் துணை நடிகைகள் கடினமாக உழைத்து முன்னேறி வருகின்றனர். ஆனால், குடும்ப சிக்கல் அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகளால் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். இதுபோன்ற செய்திகள் பலருக்கும் அதிர்ச்சியை தருகிறது. தற்கொலை என்பது தொடர்கதையாகி வருகிறது. நடிகர் சாய் பிரஷாந்த் தொடங்கி VJ சித்ரா வரை இதுபோன்ற அதிர்ச்சிகரமான முடிவுகளை எடுத்த எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

    இந்நிலையில், விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியலில் நடித்த நடிகை ராஜேஸ்வரி(39) கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். சென்னை பிராட்வே தாயப்பன் முதலித் தெருவில், சீரியல் நடிகை ராஜேஸ்வரி (39) மற்றும் சதீஷ் இருவரும் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு, மகன் மற்றும் மகளுடன் குடும்பமாக வசித்து வந்துள்ளனர்.

    ராஜேஸ்வரியின் கணவர் SVS ஆயில் நிறுவனத்தில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். சீரியல் நடிகை ராஜேஸ்வரி பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியலில் நடித்து வந்துள்ளார். ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் சதீஷ் இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு சண்டையிட்டு வந்துள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவன் மனைவி இருவருக்கும் குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. குடும்ப பிரச்சினையின் காரணமாக தனது கணவனை விட்டு கடந்த திங்கட்கிழமை அன்று சைதாப்பேட்டை விஜிபி சாலையில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு ராஜேஸ்வரி சென்றுள்ளார்.

    அங்கு சென்ற பிறகும் மன உளைச்சலில் இருந்த ராஜேஸ்வரி, அவரது தாயாரின் பிபி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுள்ளார். இதனை அறிந்த தாயார், உடனடியாக ராஜேஸ்வரியை அருகில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை ராஜேஸ்வரிக்கு அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Chennai husband - wife problem serial actress suicide
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஈரோட்டில் திட்டமிட்டபடி தவெக மாநாடு!. தடை ஏதும் இல்லை!. செங்கோட்டையன் பேட்டி!
    Next Article காலமானார் சிவ்ராஜ் பாட்டீல்… கார்கே உள்ளிட்டோர் இரங்கல்
    Editor web3
    • Website

    Related Posts

    சென்னையின் முக்கிய இடங்களில் இலவச வைஃபை? மாநகராட்சி ஆணையர் ஆலோசனை!!

    August 8, 2026

    மீண்டும் அதிர்ச்சி கொடுத்த விஷால்! போட்டோவை பார்த்து பதறிய ரசிகர்கள்! என்ன ஆச்சு..??

    August 8, 2026

    முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரும் மனுவை வாபஸ் பெற்றார் சங்கீதா; வழக்கு முடித்து வைப்பு!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.