Close Menu
    What's Hot

    நொய்டா சர்வதேச விமான நிலையம் ஜனவரியில் திறப்பு

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை சுட்டுக்கொன்ற கணவர்-பெங்களூருவில் அதிர்ச்சி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»தேமுதிக யாருடன் கூட்டணி? பிரேமலதா விஜயகாந்த் முக்கிய அறிவிப்பு
    அரசியல்

    தேமுதிக யாருடன் கூட்டணி? பிரேமலதா விஜயகாந்த் முக்கிய அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 13, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dmdk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் தேமுதிக மாநில மாநாட்டுக்கு பிறகு கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

    தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி, கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா மரியாதை செலுத்தினார். இதையடுத்து, விஜயகாந்த் நினைவிடத்துக்கு வந்திருந்த மக்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் உணவு வழங்கினார்.

    தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”விமானம் தாமதம் காரணமாக விஜய பிரபாகரன் வரவில்லை. தேமுதிகவில் விரைவில் உரிய நேரத்தில் விருப்ப மனு விநியோகம் குறித்து அறிவிப்போம். கேப்டன் குரு பூஜைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. உள்ளம் தேடி, இல்லம் நாடி பிரசார பயணம் வெற்றிகரமாக 3 கட்டங்கள் நடந்து முடிந்துள்ளது.

    அனைத்து இடங்களிலும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான பணிகள் முடிவடைந்து, தேர்தலுக்கு தேமுதிக தயாராக உள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநில மாநாட்டுக்காக கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். கடலூர் மாநாட்டில் நல்ல அறிவிப்பு வெளியாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல பொங்கலுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் அரசியலுக்கு ஒரு நல்ல வழி பிறக்கும்.

    தேமுதிக நிர்வாகிகளுடன் தேர்தலுக்கான ஆலோசனை தினந்தோறும் நடைபெற்று வருகிறது. தேமுதிக நிர்வாகிகளுடன் தினமும் பேசி வருகிறோம். கேப்டன் இருந்த காலத்தில் இருந்தே தேமுதிகவுக்கு மாநில கட்சிகளும், ஒன்றிய கட்சிகளும் தோழமை கட்சிகள்தான். தேமுதிகவுடன் அனைவரும் தோழமையோடும், நட்போடும் உள்ளனர். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

    கூட்டணி முடிவை எடுக்க தேமுதிக கொஞ்சம் கால அவகாசம் எடுத்துள்ளது. கூட்டணி குறித்தோ அல்லது யாருடன் கூட்டணி அமைப்பது? என்பது குறித்தோ உரிய நேரத்தில் நல்ல தகவல் அளிப்போம். ஜனவரி 9 ஆம் தேதி நடைபெறும் மாநாட்டுக்குள் கூட்டணி குறித்து நல்ல முடிவு வரும். தேமுதிக நிர்வாகிகள் தொடர்ந்து களத்தில் உள்ளனர்.

    யாருடன் கூட்டணி? எந்தெந்த தொகுதி? எத்தனை தொகுதிகள்? என்பது குறித்து ஜனவரி 9ம் தேதி தெரிவிக்கப்படும். 2026 தேர்தலில் 234 தொகுதிகளும் இலக்கு தான். அதிகாரப்பூர்வமாக தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை யாரும் தொடங்கவில்லை” என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“தங்கத்தையே கொடுத்தாலும் மதுரை மக்கள் திமுகவுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள்” – செல்லூர் ராஜூ
    Next Article 2001 நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: குடியரசு துணை தலைவர், பிரதமர் அஞ்சலி
    Editor TN Talks

    Related Posts

    “பாஜகவின் முதல் அடிமை திமுகதான்” – ஸ்டாலினுக்கு விஜய் சூடான பதில்

    December 25, 2025

    திண்டிவனம் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு இந்திரா காந்தி பெயர் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்

    December 24, 2025

    திமுக அரசின் மூடிக்கிடக்கும் சமூகநீதி கண்களை பெரியாராவது திறக்கட்டும்! அன்புமணி விளாசல்

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நொய்டா சர்வதேச விமான நிலையம் ஜனவரியில் திறப்பு

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை சுட்டுக்கொன்ற கணவர்-பெங்களூருவில் அதிர்ச்சி

    இயேசுபிரான் காட்டிய அன்பு, சகோதரத்துவத்தை பின்பற்றுவோம்: தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து

    13 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    நொய்டா சர்வதேச விமான நிலையம் ஜனவரியில் திறப்பு

    December 25, 2025

    விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை சுட்டுக்கொன்ற கணவர்-பெங்களூருவில் அதிர்ச்சி

    December 25, 2025

    இயேசுபிரான் காட்டிய அன்பு, சகோதரத்துவத்தை பின்பற்றுவோம்: தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து

    December 25, 2025

    13 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.