Close Menu
    What's Hot

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சபரிமலையில் தரிசன முன்னுரிமை திட்டம் விரைவில் அமல்
    தமிழ்நாடு

    சபரிமலையில் தரிசன முன்னுரிமை திட்டம் விரைவில் அமல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sabarimalai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     எரிமேலி வனப்பாதை வழியே சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தரிசன முன்னுரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தேவசம் போர்டு தலைவர் கே.ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

    ஐயப்ப பக்தர்கள் பலரும் எரிமேலி வனப்பாதையில் செல்ல விரும்புகின்றனர். ஐயப்பனின் பூங்காவனம் என்று அழைக்கப்படும் இப்பகுதி, சுவாமி நடந்து சென்ற பாதை என்பது ஐதீகம். ஏற்ற இறக்கம், அதிக குளிர், வன விலங்குகள் நடமாட்டம், கற்பாறைகள் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு பக்தர்கள் இப்பாதையைக் கடந்து செல்கின்றனர்.

    சுமார் 50 கி.மீ. தொலைவை 2 நாட்கள் சிரமப்பட்டு கடந்து பம்பையை அடையும் இவர்கள், மீண்டும் சபரிமலைக்கு 5 கி.மீ. மலையேறிச் செல்கின்றனர். ஆனால், பம்பை வரை வாகனத்தில் எளிதாக வரும் லட்சக்கணக்கான பக்தர்களுடன் இணைந்து இவர்களும் பயணிக்க வேண்டியுள்ளது.

    ஏற்கெனவே வனப்பாதையைக் கடந்து உடல் சோர்வுடன் வரும் பக்தர்கள், பல மணி நேரம் தரிசனத்துக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, தரிசன முன்னுரிமை திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து தேவசம் போர்டு தலைவர் கே.ஜெயகுமார் கூறும்போது, “எரிமேலி வனப் பாதையில் வரும் பக்தர்களுக்கு தரிசன முன்னுரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக வனப் பகுதியில் அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, வழியில் முத்திரை பதிக்கப்படும். இந்த திட்டம் தொடர்பாக காவல் மற்றும் வனத் துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது” என்றார். இந்த அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, “கடந்த ஆண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட சில நாட்களிலேயே குழப்பம் ஏற்பட்டு, பாதியில் நிறுத்தப்பட்டது. எனவே, பக்தர்களின் அனுமதிச்சீட்டில் கல்லிடும் குன்று, கரிமலை ஏற்றம் ஆகிய இடங்களில் முத்திரையிட்டால், முறைகேடு நடைபெறாது. தகுதியான பக்தர்கள் மட்டுமே பயனடைவர்” என்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோலி ரேஷன் அட்டைகள் அதிரடி ரத்து… நாடு முழுவதும் 2.12 கோடி போலி பயனாளிகள் நீக்கம்
    Next Article வானிலை முன்னறிவிப்பு: நீலகிரி, கொடைக்கானலுக்கு உறைபனி எச்சரிக்கை
    Editor TN Talks

    Related Posts

    இயேசுபிரான் காட்டிய அன்பு, சகோதரத்துவத்தை பின்பற்றுவோம்: தலைவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்து

    December 25, 2025

    13 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

    December 25, 2025

    “பாஜகவின் முதல் அடிமை திமுகதான்” – ஸ்டாலினுக்கு விஜய் சூடான பதில்

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு

    “பியூஷ் கோயல் சென்னை வந்தது ஏன்?” – பெங்களூரு புகழேந்தி புது தகவல்

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    December 25, 2025

    ஆஷஸ் தொடரில் இருந்து ஜோப்ரா ஆர்ச்சர் விலகல்

    December 25, 2025

    கர்நாடகாவில் ஆம்னி பேருந்து மீது லாரி மோதி விபத்து: தீயில் கருகி 11 பேர் உயிரிழப்பு

    December 25, 2025

    “பியூஷ் கோயல் சென்னை வந்தது ஏன்?” – பெங்களூரு புகழேந்தி புது தகவல்

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.