Close Menu
    What's Hot

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னையில் இனி குடிநீர் பிரச்சனை இல்லை – இசிஆர் சாலையில் வரப்போகும் 6-வது நீர்த்தேக்கம்
    தமிழ்நாடு

    சென்னையில் இனி குடிநீர் பிரச்சனை இல்லை – இசிஆர் சாலையில் வரப்போகும் 6-வது நீர்த்தேக்கம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    waterr
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் ரூ.350 கோடி மதிப்பீட்டில் சுமா்ர 4,375 ஏக்கர் பரப்பளவில் சென்னை கடற்கரை சாலையில் (ஈசிஆர் ரோடு) ஆறாவது நீர்த்தேக்கம் விரைவில் அமைய உள்ளது.

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய முக்கிய நீர்த்தேக்கமாக சத்தியமூர்த்தி சாகர் பூண்டி நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, கண்ணன்கோட்டை ஏரி மற்றும் சோழவரம் ஏரிகள் உள்ளன. அதுமட்டுமின்றி, வீராணம் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் இருந்தும் சென்னைக்கு குழாய் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், கடல் நீரை குடிநீராகும் திட்டத்தின் மூலமும், சென்னையில் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    இத்தனை குடிநீர் ஆதாரங்கள் இருந்தும் கூட, சென்னைக்கான குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படுகிறதா என்றால், நிச்சயம் இல்லை. சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள்தொகையும், மக்கள்தொகைக்கு ஏற்ப சென்னை விரிவாகிக் கொண்டே செல்வதுமே இதற்கு முக்கிய காரணம். குறிப்பாக, கோடைக்காலங்களில் பல்வேறு பகுதிகள் போதுமான நீரின்றி மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். தற்போது அதிகரித்து வரும் மக்கள் தொகையால், குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால், புதிய நீர்த்தேக்கம் உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி, கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், பழைய மகாபலிபுரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் 4,375 ஏக்கர் அரசு நிலத்தில் ஆறாவது நீர்தேக்கமாக புதிய நீர் தேக்கம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, நீர்த்தேக்கம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த கோவளம் பகுதியில் ரூ.350 கோடி மதிப்பீட்டில் இந்த ஆறாவது நீர்த்தேக்கம் கட்டப்பட உள்ளது. இந்த நீர்த்தேக்கம் அமைய உள்ள இடத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று ஆய்வு செய்வதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் வேறு ஒரு பணி இருந்ததால், வேறு தேதிக்கு இந்த ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது.

    அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்த பிறகு இந்த பணி துவங்கப்படும். திருப்போரூர் தொகுதியில் ஏற்கனவே சிறுதாவூர் கொண்டாங்கி, தையூர் போன்ற பல ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீர், பக்கிங் கால்வாய் வழியாக கோவளம், முகத்துவாரம் சென்று கடலில் வீணாக கலக்கிறது. இவ்வாறு கடலில் வீணாக கலக்கும் உபநீரை தடுத்து, குடிநீராக மாற்றும் வகையில் இந்த ஆறாவது நீர்த்தேக்கம் அமைய உள்ளது.

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தையிலிருந்து கோகிலமேடு வரை சுமார் 34 கிலோ மீட்டருக்கு, 4,375 ஏக்கர் பரப்பில், 1.6 டிஎம்சி கொள்ளளவில் சென்னையின் 6-வது நீர்த்தேக்கம் ரூ.350 கோடியில் அமைய உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து நாளொன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் வீதம், ஒன்பது மாதங்களுக்கு குடிநீர் வழங்கப்பட உள்ளது. இதனால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிட்புல், ராட்வீலர் வாங்கி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: இன்று முதல் அமல்
    Next Article இன்சூரன்ஸ் பணம் மீதான மோகம் – பாம்பை ஏவி மகன்களே தந்தையை கொன்ற கொடூரம்
    Editor TN Talks

    Related Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    May 17, 2026

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    May 17, 2026

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    Trending Posts

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    May 17, 2026

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    May 17, 2026

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 17, 2026

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.