Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னையில் இனி குடிநீர் பிரச்சனை இல்லை – இசிஆர் சாலையில் வரப்போகும் 6-வது நீர்த்தேக்கம்
    தமிழ்நாடு

    சென்னையில் இனி குடிநீர் பிரச்சனை இல்லை – இசிஆர் சாலையில் வரப்போகும் 6-வது நீர்த்தேக்கம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    waterr
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் ரூ.350 கோடி மதிப்பீட்டில் சுமா்ர 4,375 ஏக்கர் பரப்பளவில் சென்னை கடற்கரை சாலையில் (ஈசிஆர் ரோடு) ஆறாவது நீர்த்தேக்கம் விரைவில் அமைய உள்ளது.

    சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய முக்கிய நீர்த்தேக்கமாக சத்தியமூர்த்தி சாகர் பூண்டி நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, கண்ணன்கோட்டை ஏரி மற்றும் சோழவரம் ஏரிகள் உள்ளன. அதுமட்டுமின்றி, வீராணம் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் இருந்தும் சென்னைக்கு குழாய் மூலமாக குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், கடல் நீரை குடிநீராகும் திட்டத்தின் மூலமும், சென்னையில் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    இத்தனை குடிநீர் ஆதாரங்கள் இருந்தும் கூட, சென்னைக்கான குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படுகிறதா என்றால், நிச்சயம் இல்லை. சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள்தொகையும், மக்கள்தொகைக்கு ஏற்ப சென்னை விரிவாகிக் கொண்டே செல்வதுமே இதற்கு முக்கிய காரணம். குறிப்பாக, கோடைக்காலங்களில் பல்வேறு பகுதிகள் போதுமான நீரின்றி மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். தற்போது அதிகரித்து வரும் மக்கள் தொகையால், குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால், புதிய நீர்த்தேக்கம் உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி, கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், பழைய மகாபலிபுரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் 4,375 ஏக்கர் அரசு நிலத்தில் ஆறாவது நீர்தேக்கமாக புதிய நீர் தேக்கம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, நீர்த்தேக்கம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த கோவளம் பகுதியில் ரூ.350 கோடி மதிப்பீட்டில் இந்த ஆறாவது நீர்த்தேக்கம் கட்டப்பட உள்ளது. இந்த நீர்த்தேக்கம் அமைய உள்ள இடத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று ஆய்வு செய்வதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் வேறு ஒரு பணி இருந்ததால், வேறு தேதிக்கு இந்த ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது.

    அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்த பிறகு இந்த பணி துவங்கப்படும். திருப்போரூர் தொகுதியில் ஏற்கனவே சிறுதாவூர் கொண்டாங்கி, தையூர் போன்ற பல ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீர், பக்கிங் கால்வாய் வழியாக கோவளம், முகத்துவாரம் சென்று கடலில் வீணாக கலக்கிறது. இவ்வாறு கடலில் வீணாக கலக்கும் உபநீரை தடுத்து, குடிநீராக மாற்றும் வகையில் இந்த ஆறாவது நீர்த்தேக்கம் அமைய உள்ளது.

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை திருவிடந்தையிலிருந்து கோகிலமேடு வரை சுமார் 34 கிலோ மீட்டருக்கு, 4,375 ஏக்கர் பரப்பில், 1.6 டிஎம்சி கொள்ளளவில் சென்னையின் 6-வது நீர்த்தேக்கம் ரூ.350 கோடியில் அமைய உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து நாளொன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் வீதம், ஒன்பது மாதங்களுக்கு குடிநீர் வழங்கப்பட உள்ளது. இதனால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிட்புல், ராட்வீலர் வாங்கி வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: இன்று முதல் அமல்
    Next Article இன்சூரன்ஸ் பணம் மீதான மோகம் – பாம்பை ஏவி மகன்களே தந்தையை கொன்ற கொடூரம்
    Editor TN Talks

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.