Close Menu
    What's Hot

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»இன்சூரன்ஸ் பணம் மீதான மோகம் – பாம்பை ஏவி மகன்களே தந்தையை கொன்ற கொடூரம்
    தமிழ்நாடு

    இன்சூரன்ஸ் பணம் மீதான மோகம் – பாம்பை ஏவி மகன்களே தந்தையை கொன்ற கொடூரம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    snakes
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருத்தணி அருகே ரூ.3 கோடி காப்பீடு பணத்திற்காக, தந்தையை பாம்பை ஏவி கொலை செய்த கொடூர மகன்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பொதட்டூர்பேட்டை பேரூராட்சியை சேர்ந்தவர் கணேசன் (56). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக (lab assistant) வேலை செய்து வந்தார். இவருக்கு மோகன்ராஜ், ஹரிஹரன் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் கணேசன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, பாம்பு கடித்து இறந்ததாக அவரது மகன்கள் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர்.

    இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, உயிரிழந்த கணேசன் மொத்தம் 11 காப்பீடுகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதில், 4 காப்பீடுகள் அவரது பெயரில் இருந்துள்ளன. இது போலீசாருக்கு சிறு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக, சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் சார்பில் வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க்கிடம் புகார் ஒன்று வந்தது.

    அதாவது, கணேசன் மரணம் தொடர்பாக அவரது இரண்டு மகன்களும் முன்னுக்கு பின் முரணாக பேசுவதாகவும், இதனால் அவர்களை விசாரிக்க வேண்டும் எனவும் காப்பீட்டு நிறுவனம் தெரிவித்திருந்தது. இதன்பேரில், கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ஜெயஸ்ரீ தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. முதலில் ஒன்றும் தெரியாததை போல நடித்த அவர்கள், ஒருகட்டத்தில் காப்பீட்டு பணத்துக்காக கணேசனை கொலை செய்தததாக அவரது மகன்கள் ஒப்புக்கொண்டனர்.

    இதையடுத்து, அவர்கள் அளித்த வாக்குமூலம் போலீசாரையே அதிர்ச்சியடைய செய்தது. தந்தை கணேசன் பெயரில் உள்ள ரூ.3 கோடி காப்பீடு பணத்தை எப்படியாவது வாங்கிவிட, அவரது இரண்டு மகன்களான மோகன்ராஜும், ஹரிஹரனும் திட்டமிட்டுள்ளனர். மேலும், இதற்காக தங்கள் நண்பர்களான பாலாஜி, பிரசாந்த், நவீன்குமார், தினகரன் ஆகியோரை தங்கள் சதியில் அவர்கள் சேர்த்துள்ளனர்.

    அதன்படி, பாம்பை ஏவி கணேசனை கொலை செய்ய அவர்கள் முடிவு செய்த அவர்கள், கட்டுவிரியன் பாம்பு ஒன்றை பிடித்துள்ளனர். பின்னர், அதனை தந்தை கணேசனின் கழுத்தில் அவர்கள் கடிக்க வைத்துள்ளனர். இதில் பாம்பு விஷம் ஏறிய கணேசன், துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, 6 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து சொகுசு கார் மற்றும் 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா கூறுகையில், “இந்த விவகாரத்தில் கணேசன் உயிரிழப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, அவரது இரண்டு மகன்களும் விஷப் பாம்பை ஏவி தந்தையை கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். ஆனால், கணேசனை பாம்பு கடிக்காமல் தப்பியுள்ளது. இதையடுத்து, இரண்டாவது முறையாக திட்டமிட்டு, 3 அடி கட்டுவிரியன் பாம்பினை ரூ. 1.5 லட்சத்திற்கு கூலிக்கு வாங்கி, அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், போலீசாருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, கடித்த பாம்பையும் வீட்டுக்குள்ளே அடித்து கொன்றுள்ளனர். இதில், கைது செய்யப்பட்ட 6 பேரில் ஒருவர் பாம்புகளை கையாளும் திறமை கொண்டவர் என்பதால், அவர் மூலமாக இந்த செயலை நிகழ்த்தி இருக்கின்றனர்.

    World Snake Day: The Seven Deadliest Snakes – Rainforest Trust

    இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்யும்போது, இது சாதாரண பாம்பு கடி என நாடகம் நடத்தினர். ஆனால், சந்தேகத்தின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தியதில் இது கொலை என்பது தெரியவந்தது” எனத் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னையில் இனி குடிநீர் பிரச்சனை இல்லை – இசிஆர் சாலையில் வரப்போகும் 6-வது நீர்த்தேக்கம்
    Next Article தவாகவில் இணையவுள்ளாரா காளியம்மாள்?. வெளியான தகவல்!
    Editor TN Talks

    Related Posts

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    December 23, 2025

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.11 லட்சம் பேர் விண்ணப்பம்! வரும் 27, 28- 3, 4ம் தேதிகளில் சிறப்பு முகாம்!

    December 23, 2025

    சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.13,400! 3 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் அரசியல் பேசத் தடை?

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    December 23, 2025

    டிடிவி, ஓபிஎஸ்-சை அதிமுக கூட்டணியில் இணைப்பது குறித்து இபிஎஸ்சுடன் கோயல் பேச்சா? நயினார் மறுப்பு

    December 23, 2025

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.11 லட்சம் பேர் விண்ணப்பம்! வரும் 27, 28- 3, 4ம் தேதிகளில் சிறப்பு முகாம்!

    December 23, 2025

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.