Close Menu
    What's Hot

    சூழ்நிலைக்கேற்ப மனதை மாற்றிக் கொள்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்; அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

    திருமாவுக்கு துணை முதல்வர் பதவி!. திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும்!. விசிக கூட்டத்தில் தீர்மானம்!

    மின்பகிர்மான கழக ஓய்வு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..!! சம்பள உயர்வுக்கு புதிய உத்தரவு அமல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»இனிதான் நம் முழு பலத்தையும் கொடுத்து ஓடவேண்டும்: திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
    அரசியல்

    இனிதான் நம் முழு பலத்தையும் கொடுத்து ஓடவேண்டும்: திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 22, 2025Updated:December 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வெற்​றியை நெருங்​கும் நேரத்​தில் பதற்​றமோ, அசதியோ கூடாது. இனி​தான் நம் முழு பலத்​தை​யும் கொடுத்து ஓடவேண்​டும் என்று திமுக மாவட்​டச் செய​லா​ளர்​களுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

    வரைவு வாக்​காளர் பட்​டியல் சரி​பார்த்​தல் குறித்த திமுக மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டம், காணொலி வாயி​லாக நடை​பெற்​றது. இதில் திமுக தலை​வரும், முதல்​வரு​மான மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது:

    தமிழகத்​தில் எஸ்​ஐஆர் பணி​களை அவசரக​தி​யில் ஆரம்​பித்​த​போதே இது பல்​வேறு முறை​கேடு​களுக்கு வழி​வகுக்​கும். தகு​தி​யான வாக்​காளர்​கள் நீக்​கப்பட வாய்ப்​புள்​ளது என்று எச்​சரித்​தோம்.

    உச்ச நீதி​மன்​றத்​தி​லும் வழக்கு தொடுத்​தோம். அதன்​படியே, எஸ்​ஐஆர் மூலம் 15 சதவீதம் பேர், அதாவது 97 லட்​சம் வாக்​காளர்​களை நீக்​கி, வரைவுப் பட்​டியலை தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்​டுள்​ளது. இடம் பெயர்ந்​தவர்​கள் என்று மட்​டும் சுமார் 66 லட்​சம் பேரை நீக்​கி​யுள்​ளனர்.

    குறிப்​பாக 168 தொகு​தி​களில் 10 சதவீதத்​துக்​கும் அதி​க​மான வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர். இதை நாம் வாக்​குச்​சாவடி வாரி​யாக சரி​பார்க்க வேண்​டும். உதா​ரண​மாக கும்​மிடிப்​பூண்​டி​யில் முதல் வாக்​குச்​சாவடி​யில் 40 வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர். அதில் 4 பேர் ஓரணி​யில் தமிழ்​நாடு முன்​னெடுப்பு மூல​மாக சேர்ந்​தவர்​கள்.

    அதில் ஒரு​வர் இறந்​து​ விட்​ட​தாக கூறி​யுள்​ளனர். அதே​போல், மற்ற 3 பேரை​யும் எதற்​காக நீக்​கினர் என்று சரி​பார்க்க வேண்​டும். நாம் களத்​தில் முழு​மை​யாக இறங்கி பணி செய்​கிறோம்.

    மறு​புறம் அதி​முக​வும், பாஜக​வும் களத்​துக்கே வரவில்​லை. அதனால்​தான் நாம் சந்​தேகப்பட வேண்​டி​யுள்​ளது. எனவே, நீக்​கப்​பட்​ட​தில் நம் வாக்​காளர்​கள் இருக்​கிறார்​களா என கவன​மாக பார்க்க வேண்​டும்.

    நான் வாக்​குச்​சாவடி வாரி​யாக உன்​னிப்​பாக கவனித்து வரு​கிறேன். ஒரே ஒருத்​தர் தவறு​தலாக விடு​பட்டு இருந்​தால்​கூட வாக்​காளர் பட்​டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். இது அனைத்து மாவட்​டச் செய​லா​ளர்​கள், தொகுதி பார்​வை​யாளர்​களின் பொறுப்​பாகும்.

    ஒவ்​வொரு வாக்​குச்​சாவடி​யிலும் நீக்​கப்​பட்​ட​வர்​கள் பட்​டியலும் அதில் யாரெல்​லாம் ஓரணி​யில் தமிழ்​நாடு உறுப்​பினர்​கள் என்ற விவர​மும் இன்​றைக்​குள் (டிசம்​பர் 22) மாவட்​டச் செய​லா​ளர்​களுக்கு அனுப்பி வைக்​கப்​படும். விவரங்​களை முழு​மை​யாக சரி​பார்த்து விடு​படல் இல்​லாத​வாறு பார்த்​துக்​கொள்ள வேண்​டும். மேலும், புதிய வாக்​காளர்​கள் சேர்க்​கப்​ படு​வதை​யும் கவனிக்க வேண்​டும். போலிகள் இல்லாமல் பார்த்​துக் கொள்ள வேண்​டும்.

    இதுத​விர, வாக்​குச்​சாவடிகளின் எண்​ணிக்கை 75,032 ஆக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. பூத் எண் மட்​டும் மாறிய வாக்​குச்​சாவடிகளுக்​கு, ஏற்​கெனவே நியமிக்​கப்​பட்​டுள்ள பிஎல்ஏ 2-க்​கள் தொடர வேண்​டும். புதி​தாக உரு​வாக்​கப்​பட்​டுள்ள வாக்​குச்​சாவடிகளுக்கு புதிய பொறுப்​பாளர்​களை நியமிக்க வேண்​டும். நம்மை நேர்​வழி​யில் வீழ்த்த முடி​யாத எதிரி​கள் குறுக்கு வழி​யில் காரி​யம் சாதிக்க நினைப்​பார்​கள். அதற்கு கடு​களவு​கூட இடம் தரக்​கூ​டாது.

    வெற்​றியை நெருங்​கும் நேரத்​தில் பதற்​றமோ, அசதியோ கூடாது. இனி​தான் நம் முழு பலத்​தை​யும் கொடுத்து ஓடவேண்​டும். களத்​தில் நாம்​தான் வலிமை​யாக உள்​ளோம். நம் கூட்​ட​ணி​தான் வெற்​றிக் கூட்​ட​ணி. வெற்​றியை எட்​டும் வரை கவனம் சிதறாமல் உழை​யுங்​கள்.

    இவ்​வாறு அவர் பேசி​னார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜோதிட நாள்காட்டி 22.12.2025 | மார்கழி 07
    Next Article இரவு, பகலாக 4-வது நாளாக போராடும் செவிலியர்கள்: அமைச்சர் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
    Editor TN Talks

    Related Posts

    சூழ்நிலைக்கேற்ப மனதை மாற்றிக் கொள்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்; அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

    July 4, 2026

    திருமாவுக்கு துணை முதல்வர் பதவி!. திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும்!. விசிக கூட்டத்தில் தீர்மானம்!

    July 4, 2026

    மின்பகிர்மான கழக ஓய்வு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..!! சம்பள உயர்வுக்கு புதிய உத்தரவு அமல்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சூழ்நிலைக்கேற்ப மனதை மாற்றிக் கொள்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்; அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு

    திருமாவுக்கு துணை முதல்வர் பதவி!. திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும்!. விசிக கூட்டத்தில் தீர்மானம்!

    மின்பகிர்மான கழக ஓய்வு ஊழியர்களுக்கு குட் நியூஸ்..!! சம்பள உயர்வுக்கு புதிய உத்தரவு அமல்..!!

    மளமளவென சரியும் அதிமுக கோட்டை..!! இதுவரை 32% பேர் விலகல்..!! அப்செட்டில் இபிஎஸ்..!!

    செந்தில் பாலாஜி, அசோக்குமார் விவகாரத்தில் புதிய திருப்பம்..!! பெற்றோர் கைக்கு போன சம்மன்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.