Close Menu
    What's Hot

    6 நாள்.. 3 நாடுகள்..!! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி..!!

    போலீஸ் வளையத்தில் மம்தா வீடு..?? மேற்கு வங்கத்தில் பதற்றம் ஏன்..??

    மனுஷன் வாழ்றாப்ல.. 61 வயதில் 3வது கல்யாணம்..!! அமீர்கானை நினைத்து புலம்பும் 90’s கிட்ஸ்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»சமையல் எரிவாயு தட்டுப்பாடு அச்சம்!. போர்க்கால அடிப்படையில் களமிறங்கிய பெட்ரோலிய அமைச்சகம்!
    இந்தியா

    சமையல் எரிவாயு தட்டுப்பாடு அச்சம்!. போர்க்கால அடிப்படையில் களமிறங்கிய பெட்ரோலிய அமைச்சகம்!

    Editor web3By Editor web3March 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    LPG GAS
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, “உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் எல்.பி.ஜி (LPG) உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் எரிவாயு, முழுமையாக வீட்டு உபயோகத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவை பதுக்குவதையும், கருப்பு சந்தையில் விற்பனை செய்வதையும் தடுக்க, ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்ததிலிருந்து அடுத்த பதிவிற்கு இடையே 25 நாட்கள் கட்டாய இடைவெளி இருக்க வேண்டும் என்ற புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவில், வணிக ரீதியான பயன்பாட்டிற்குப் பதில், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பிற தொழிற்சாலைகளின் எரிவாயு தேவைகளைப் பரிசீலிக்க, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் (OMCs) மூன்று செயல் இயக்குநர்கள் (Executive Directors) கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தக் குழு இத்துறையினரின் கோரிக்கைகளை ஆய்வு செய்து உரிய முடிவுகளை எடுக்கும். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரதமர் மோடி வருகை; தொகுதி பங்கீட்டில் இறுதி முடிவு?. EPS-ஐ சந்திக்கும் பியூஷ் கோயல்!
    Next Article தங்கம் விலை அதிரடி உயர்வு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
    Editor web3
    • Website

    Related Posts

    6 நாள்.. 3 நாடுகள்..!! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி..!!

    July 6, 2026

    போலீஸ் வளையத்தில் மம்தா வீடு..?? மேற்கு வங்கத்தில் பதற்றம் ஏன்..??

    July 6, 2026

    மனுஷன் வாழ்றாப்ல.. 61 வயதில் 3வது கல்யாணம்..!! அமீர்கானை நினைத்து புலம்பும் 90’s கிட்ஸ்..!!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    6 நாள்.. 3 நாடுகள்..!! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி..!!

    போலீஸ் வளையத்தில் மம்தா வீடு..?? மேற்கு வங்கத்தில் பதற்றம் ஏன்..??

    மனுஷன் வாழ்றாப்ல.. 61 வயதில் 3வது கல்யாணம்..!! அமீர்கானை நினைத்து புலம்பும் 90’s கிட்ஸ்..!!

    திருச்சி : காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர்..! சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்..!

    வெட்கமில்லையா விஜய் அரசே..?? ஸ்டிக்கர் ஒட்ட கல்வெட்டை அகற்றுவதா? கொந்தளித்த திமுக..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.