Close Menu
    What's Hot

    அடக்கி வாசித்தால் செங்கோட்டையனுக்கு நல்லது..! என்னை அவருக்கு நன்றாக தெரியும்..! நயினார் நாகேந்திரன் காரசார பேட்டி..!

    “அரசியல் சாசனம் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று”..!! நயினார் நாகேந்திரன் பரபரப்பு பதிவு..!!

    இருமொழிக் கொள்கையில் எந்த சமரசமும் இல்லை..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!
    தமிழ்நாடு

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    Editor web3By Editor web3April 6, 2026Updated:April 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Actress Suicide
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை போரூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த சின்னத்திரை நடிகை சுபாஷினி (36), குடும்பத் தகராறு காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், பெங்களூரில் தனது கணவர் பிப்பின் என்பவருடன் வசித்து வந்தார். சமீபகாலமாக படப்பிடிப்புப் பணிகளுக்காகச் சென்னை வந்திருந்த அவர், போரூரில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்து பல்வேறு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

    சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான இவர், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘கயல்’ உள்ளிட்ட சீரியல்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்ததோடு, சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் முத்திரை பதித்துள்ளார். நேற்று இரவு தனது கணவருடன் வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்தத் திடீர் மோதலால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சுபாஷினி, சில நிமிடங்களிலேயே விபரீத முடிவை எடுத்துத் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    நடிகை சுபாஷிணி தற்கொலை செய்து கொள்வதை வீடியோ காலில் பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் பிபின் உடனே அடுக்குமாடி காவலாளிக்கு தகவல் தெரிவித்தன் பேரில் காவலாளி உடனே இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போரூர் போலீசார், சுபாஷினியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடிகைகளின் தொடர் தற்கொலைச் சம்பவங்கள் சமீபகாலமாகக் கலைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தச் சம்பவம் குறித்தும், தற்கொலைக்கான பின்னணி குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பப் பிரச்சனையா அல்லது வேறு ஏதேனும் அழுத்தங்கள் காரணமா என்பது குறித்தும் கணவரிடம் விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉலகளாவிய சவால்களை முறியடித்து இந்தியா சாதனை!. ஜெய்சங்கர் பெருமிதம்!
    Next Article அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!
    Editor web3
    • Website

    Related Posts

    “அரசியல் சாசனம் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று”..!! நயினார் நாகேந்திரன் பரபரப்பு பதிவு..!!

    June 25, 2026

    இருமொழிக் கொள்கையில் எந்த சமரசமும் இல்லை..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    June 25, 2026

    விஸ்வரூபம் எடுக்கும் அமோனியா கசிவு விவகாரம்..!! உயிரிழப்பு 11ஆக அதிகரிப்பு..!!

    June 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அடக்கி வாசித்தால் செங்கோட்டையனுக்கு நல்லது..! என்னை அவருக்கு நன்றாக தெரியும்..! நயினார் நாகேந்திரன் காரசார பேட்டி..!

    “அரசியல் சாசனம் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று”..!! நயினார் நாகேந்திரன் பரபரப்பு பதிவு..!!

    இருமொழிக் கொள்கையில் எந்த சமரசமும் இல்லை..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    விஸ்வரூபம் எடுக்கும் அமோனியா கசிவு விவகாரம்..!! உயிரிழப்பு 11ஆக அதிகரிப்பு..!!

    செங்கல்பட்டு : 14 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை..! இருவர் கைது..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.