Close Menu
    What's Hot

    “நான் இல்லாவிட்டால் வாடிகனே இருக்காது”!. போப் லியோவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

    சுந்தர்.சி-ஐ தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி அவுட்?. ரஜினி படத்தில் திடீர் திருப்பம்!

    இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026!. பணப்பட்டுவாடாவைத் தடுக்க ட்ரோன் கண்காணிப்பு!.
    தமிழ்நாடு

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026!. பணப்பட்டுவாடாவைத் தடுக்க ட்ரோன் கண்காணிப்பு!.

    Editor web3By Editor web3April 13, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Drone Surveillance
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்க ட்ரோன் கேமராக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலைச் சிறப்பாக நடத்தி முடிக்க அரசு தரப்பில் ரூ.1032 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

    தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து, மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.727 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.126 கோடி ரொக்கம், ரூ.295 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், ரூ.75 கோடி மதிப்பிலான போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள் அடங்கும். உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தவர்களிடம் ரூ.265 கோடி மதிப்பிலான பொருட்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக 1.40 லட்சம் காவலர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுதவிர, 299 துணை ராணுவ கம்பெனிகள் பாதுகாப்புப் பணியில் இணையவுள்ளன; இதில் 115 கம்பெனிகள் ஏற்கனவே தமிழகம் வந்துவிட்டன.

    தபால் வாக்கைப் பொறுத்தவரை, 85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என சுமார் 1.90 லட்சம் பேர் தகுதி பெற்றுள்ளனர்.

    இதுவரை 15,000 பேர் தபால் வாக்குகளைச் செலுத்தியுள்ளனர்.

    தேர்தல் பணியில் உள்ள 1.5 லட்சம் அலுவலர்கள் படிவம் 12D மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர்.

    தமிழகம் முழுவதும் மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 5,938 இடங்கள் பதற்றமானவை எனத் தரம் பிரிக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் அமைதியாக நடைபெற ஏதுவாக, வரும் ஏப்ரல் 21 முதல் 23-ஆம் தேதி நள்ளிரவு வரை மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் பெயரையும் பூத் விவரங்களையும் அறிய 1950 என்ற எண்ணிற்கு ‘EPIC’ எண்ணுடன் குறுஞ்செய்தி அனுப்பி உறுதி செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமைச்சர் சேகர்பாபு மகன்கள் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!. சென்னையில் பரபரப்பு!
    Next Article 21ம் நூற்றாண்டின் முக்கிய முடிவுகளில் ஒன்று மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா!. பிரதமர்  மோடி!.
    Editor web3
    • Website

    Related Posts

    இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!

    April 13, 2026

    3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

    April 13, 2026

    ஊதிய உயர்வு போராட்டத்தில் கலவரம்!. வாகனங்களுக்கு தீ வைப்பு!. 144 தடை உத்தரவு அமல்!

    April 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “நான் இல்லாவிட்டால் வாடிகனே இருக்காது”!. போப் லியோவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

    சுந்தர்.சி-ஐ தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி அவுட்?. ரஜினி படத்தில் திடீர் திருப்பம்!

    இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!

    3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

    ஊதிய உயர்வு போராட்டத்தில் கலவரம்!. வாகனங்களுக்கு தீ வைப்பு!. 144 தடை உத்தரவு அமல்!

    Trending Posts

    ஊதிய உயர்வு போராட்டத்தில் கலவரம்!. வாகனங்களுக்கு தீ வைப்பு!. 144 தடை உத்தரவு அமல்!

    April 13, 2026

    ”எரிபொருளுக்காக ஏங்குவீர்கள்”!. அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!.

    April 13, 2026

    மீண்டும் படம் நடிக்கும் விஜய்? ‘ஜனநாயகன்’ நஷ்டத்தை ஈடு செய்ய அதிரடி முடிவு?

    April 13, 2026

    இலக்கு மாறிய ஏவுகணை; சிதறிய உயிர்கள்!. நைஜீரிய அரசின் தவறால் நிகழ்ந்த 100 பேர் மரணம்!

    April 13, 2026

    நெல் சாகுபடி ஊக்கத்தொகை!. கடிதத்தை வெளியிட தயாரா?. நிர்மலாவுக்கு ஸ்டாலின் சவால்!.

    April 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.