Close Menu
    What's Hot

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கெமிக்கல் இன்ஜினியரின் உயிர்பறிப்பு

    மீண்டும் முதலமைச்சராக வேண்டும் மு.க.ஸ்டாலின் – மண் சோறு உண்ணும் தெய்வீக பக்தர்கள் பேரவை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Uncategorized»பாஜக அமைச்சர் நிதேஷ் ராணேவுக்கு ஒரு மாத சிறைத் தண்டனை!
    Uncategorized

    பாஜக அமைச்சர் நிதேஷ் ராணேவுக்கு ஒரு மாத சிறைத் தண்டனை!

    Editor TN TalksBy Editor TN TalksApril 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nitesh rane
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மகாராஷ்டிர மாநில அமைச்சரும் பாஜக தலைவருமான நிதேஷ் ராணேவுக்கு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் தொடர்பான வழக்கில் சிந்துதுர்க் கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஒரு மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது.

    2019 ஆம் ஆண்டு ஜூலை 4 அன்று மும்பை-கோவா நெடுஞ்சாலை நான்கு வழிச் சாலைப் பணிகள் மோசமாக இருப்பதாகக் கூறி அப்போது எதிர்க்கட்சியில் இருந்த நிதேஷ் ராணே மற்றும் அவரது ஆதரவாளர்கள் அரசு ஊழியரான தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) பொறியாளர் பிரகாஷ் ஷெடேகரை அழைத்து விசாரித்தபோது, சேறு நிறைந்த தண்ணீரை அவர்மீது கொட்டியதாகவும், அவரை அவமானப்படுத்தியதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக 30 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி வி.எஸ். தேஷ்முக் தலைமையிலான சிந்துதுர்க் கூடுதல் அமர்வு நீதிமன்றம், நிதேஷ் ராணேவை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 504 (பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் வேண்டுமென்றே அவமதித்தல்) கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளித்து ஒரு மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது. மற்ற 29 பேரையும் போதிய ஆதாரம் இல்லாததால் விடுவித்தது.

    நீதிபதி தனது தீர்ப்பில், “சாலைப் பணி மோசமாக இருந்தது, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டது என்பதற்காகக் குரல் எழுப்புவது ராணேவின் நோக்கமாக இருந்தாலும், பொதுவெளியில் அரசுப் பணியாளரை அவமானப்படுத்தக் கூடாது. சட்டத்தைத் தங்கள் கையில் எடுக்க எம்.எல்.ஏ.க்களோ, அரசியல்வாதிகளோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இது அதிகார துஷ்பிரயோகம்” என்று குறிப்பிட்டார். பொதுமக்கள் குறைகளைத் தீர்க்க அரசு ஊழியரை பொதுவில் அவமதிப்பது நியாயமற்றது என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

    எனினும், தண்டனையை உடனடியாக அமல்படுத்தாமல் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து, நிதேஷ் ராணேவுக்கு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்துள்ளது. இதனால் அவர் உடனடியாக சிறை செல்ல வேண்டிய அவசியம் இல்லை.இந்தச் சம்பவம் 2019 இல் நடைபெற்றபோது நிதேஷ் ராணே எதிர்க்கட்சியில் இருந்தார். தற்போது மகாராஷ்டிர அமைச்சரவையில் அவர் பொறுப்பு வகிக்கிறார்.இந்தத் தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரிசல்ட்-க்கு முன் ‘மெகா’ மீட்டிங்! வேட்பாளர்களுக்கு விஜய் கொடுக்கும் அசைன்மென்ட் என்ன?
    Next Article தமிழ்த் தேசியப் பாடகர் தேனிசை செல்லப்பா மறைவு-திருமாவளவன் இரங்கல்
    Editor TN Talks

    Related Posts

    நெருக்கடியில் விமான நிறுவனங்கள்: இந்திய விமான சேவைகள் பாதிக்கப்படுமா?

    April 28, 2026

    வீட்டுக்குள் நுழையும் பாம்புகள்!. ஒரே நாளில் குழந்தை உள்பட 16 பேருக்கு நேர்ந்த அதிர்ச்சி!

    April 28, 2026

    திருச்செந்தூரை தொடர்ந்து விஜய் செல்லும் ஆன்மீக தலம் எது? – வெளியான தகவல்

    April 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கெமிக்கல் இன்ஜினியரின் உயிர்பறிப்பு

    மீண்டும் முதலமைச்சராக வேண்டும் மு.க.ஸ்டாலின் – மண் சோறு உண்ணும் தெய்வீக பக்தர்கள் பேரவை

    பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா மறைவு – அன்புமணி இராமதாஸ் இரங்கல்

    “நம்பிக்கை இருந்தால் அற்புதங்கள் நடக்கும்” – ‘கருப்பு’ இசை விழாவில் சூர்யா

    Trending Posts

    மே 8-ல் ரிலீசாகிறதா ஜனநாயகன்? புதிய தகவலால் ரசிகர்கள் குழப்பம்..!

    April 28, 2026

    EVM மெஷின்கள் பாதுகாப்பாக இருக்கிறதா?. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த செல்வப்பெருந்தகை!. 

    April 28, 2026

    மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்!

    April 28, 2026

    புழுக்களாய் நெளிந்து கொண்டிருந்தவர்களை புலியாக மாற்றியவர் தேனிசை செல்லப்பா – சீமான் இரங்கல்

    April 28, 2026

    கடைசி படத்தில் ‘கமாண்டோ உடையில் அசத்திய ரோபோ சங்கர்!. குடும்பத்தினர் உருக்கம்!.

    April 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.