Close Menu
    What's Hot

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கெமிக்கல் இன்ஜினியரின் உயிர்பறிப்பு

    மீண்டும் முதலமைச்சராக வேண்டும் மு.க.ஸ்டாலின் – மண் சோறு உண்ணும் தெய்வீக பக்தர்கள் பேரவை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தமிழ்த் தேசியப் பாடகர் தேனிசை செல்லப்பா மறைவு-திருமாவளவன் இரங்கல்
    Featured

    தமிழ்த் தேசியப் பாடகர் தேனிசை செல்லப்பா மறைவு-திருமாவளவன் இரங்கல்

    Editor TN TalksBy Editor TN TalksApril 28, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

    தமிழ்த்தேசிய பாடகர் தேனிசை செல்லப்பா அவர்கள் இன்று காலமானார் என்கிற செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையுமடைந்தேன். 

    தமிழ்த்தேசிய விடுதலைக் களத்தில் தனது எழுச்சிப் பாடல்களின் மூலம் பெரும்பங்காற்றிய தேனிசை செல்லப்பா அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகிறோம்!

    திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே சிங்கிலிப்பட்டி என்னும் கிராமத்தைச் சார்ந்த செல்லப்பா அவர்கள், தொடக்ககாலத்தில் திராவிடர் கழகத்தின் மேடைகளிலும் பின்னர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் நாம் தமிழர் கட்சியின் மேடைகளிலும் பாடிவந்தார்.

    பின்னர் தமிழ்த்தேசியக் களத்தில் ஈடுபாடு கொண்டு தமிழீழ விடுதலைக்கான பாடல்களை இயற்றி பாடினார். அவரது பாடல்கள் எளிய மக்களை ஈர்க்கும் வகையில் இருந்தது.

    கலை நிகழ்வுகளின் மூலமாக தமிழ்த்தேசிய அரசியலை தனது இசையின் மூலமாக வெகுமக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பதை நிறுவியவர்.

    தமிழீழத் தேசிய விடுதலைக் களத்தில் இவரது பங்களிப்பினை அங்கீகரிக்கும் வகையில் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள் ‘ பாசறைப் பாணர் ‘ என்னும் பட்டத்தை இவருக்கு வழங்கி சிறப்பித்தார்.

    என் மீதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீதும் கொண்ட பற்றுதலால் விடுதலைச் சிறுத்தைகளுக்காக அவரே பல பாடலை இயற்றி இசையமைத்துப் பாடியுள்ளார்.

    தனது எழுச்சிமிகு குரல்வளத்தால் உலகத்தமிழர்களிடையே தமிழ்த் தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்திய தேனிசை செல்லப்பா அவர்கள், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் சீராக இல்லாமையினல் மேடைகளில் பாடாமல் ஓய்வு எடுத்து வந்தார்.  எனினும், கடந்த 2024 ஆம் ஆண்டு விசிக தலைமையகமான அம்பேத்கர் திடலில் நடைபெற்ற “மாவீரர் நாள்” நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழ்த்தேசிய பாடல்களை எழுச்சியுடன் பாடினார். அதுவே அவர் பாடிய கடைசி மேடையாகவும்  அமைந்தது.

    தமிழ்த்தேசிய பாடகர் தேனிசை செல்லப்பா அவர்களின் இழப்பு தமிழ்த்தேசியத்திற்கு பேரிழப்பு! 

    அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    நாளை (29.04.2026)  காலை சென்னை அருகே படப்பையில் நடைபெறும் அவரது நல்லடக்க நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் பெருந்திரளாக பங்கேற்று வீரவணக்கம் செலுத்திட வேண்டும்.

    இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாஜக அமைச்சர் நிதேஷ் ராணேவுக்கு ஒரு மாத சிறைத் தண்டனை!
    Next Article EVM மெஷின்கள் பாதுகாப்பாக இருக்கிறதா?. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த செல்வப்பெருந்தகை!. 
    Editor TN Talks

    Related Posts

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    April 28, 2026

    நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கெமிக்கல் இன்ஜினியரின் உயிர்பறிப்பு

    April 28, 2026

    மீண்டும் முதலமைச்சராக வேண்டும் மு.க.ஸ்டாலின் – மண் சோறு உண்ணும் தெய்வீக பக்தர்கள் பேரவை

    April 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கெமிக்கல் இன்ஜினியரின் உயிர்பறிப்பு

    மீண்டும் முதலமைச்சராக வேண்டும் மு.க.ஸ்டாலின் – மண் சோறு உண்ணும் தெய்வீக பக்தர்கள் பேரவை

    பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா மறைவு – அன்புமணி இராமதாஸ் இரங்கல்

    “நம்பிக்கை இருந்தால் அற்புதங்கள் நடக்கும்” – ‘கருப்பு’ இசை விழாவில் சூர்யா

    Trending Posts

    மே 8-ல் ரிலீசாகிறதா ஜனநாயகன்? புதிய தகவலால் ரசிகர்கள் குழப்பம்..!

    April 28, 2026

    EVM மெஷின்கள் பாதுகாப்பாக இருக்கிறதா?. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த செல்வப்பெருந்தகை!. 

    April 28, 2026

    மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்!

    April 28, 2026

    புழுக்களாய் நெளிந்து கொண்டிருந்தவர்களை புலியாக மாற்றியவர் தேனிசை செல்லப்பா – சீமான் இரங்கல்

    April 28, 2026

    கடைசி படத்தில் ‘கமாண்டோ உடையில் அசத்திய ரோபோ சங்கர்!. குடும்பத்தினர் உருக்கம்!.

    April 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.