முதலமைச்சராகப் பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு ஆகியோருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்தியின் பதிவுகளுக்கு பதில் அளித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் பதிவிட்டுள்ளார். அதில், நான் முதலமைச்சராகப் பதவியேற்றதையொட்டி, மாண்புமிகு பிரதமர்
நரேந்திரமோடி அவர்கள் தெரிவித்த நல்வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
நமது மக்களின் நலனும் முன்னேற்றமுமே எங்களின் ஒரே நோக்கம். தமிழகத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு மத்திய அரசின் செயல்மிகு ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
மேலும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஜி தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டதற்கு தன் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும், மக்களுக்கு சேவை செய்யும் இந்தப் பயணத்தைத் தொடங்கும் வேளையில், உங்கள் ஆதரவும் அன்பான வாழ்த்துக்களும் தனக்கு மிகவும் உற்சாகத்தை அளிப்பதாகவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
