கிராம சாலைகளை முறையாக அமைத்து தமிழகம் முழுவதும் சாலை வசதிகளை மேம்படுத்த அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆனந்த் உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பணங்கள் மாளிகையில் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் நடைபெற்ற வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து துரை சார்ந்த அலுவலர்களுடன் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆனந்த் ஆலோசனையில் ஈடுபட்டார் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் உயரதிகாரிகள் மற்றும் தமிழக முழுதும் உள்ள அனைத்து மாவட்ட கூடுதல் ஆட்சியர்கள் மாவட்ட திட்ட இயக்குனர்கள் ஊரக வளர்ச்சி துறையின் முதன்மை செயலாளர் உளித்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஆனந்த் கிராம சாலைகளை புதுப்பித்தல் மற்றும் புதிய சாலைகளை அமைத்து கிராமப்புற மக்களுக்கு சாலை வசதிகளை மேம்படுத்தி கொடுப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் மேலும் கிராமப்புறங்களில் உள்ள நூலகங்களை புதுப்பித்தல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு பாசன ஏரிகளை தூய்மை செய்து புதுப்பித்தல் மற்றும் மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கம் திட்டம் உள்ளிட்டவைகளின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் ஆனந்த் கேட்டறிந்தார்.
