Close Menu
    What's Hot

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் புஸ்லி ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்
    Featured

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 sengotaiyan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

    அப்போது உள்ளாட்சித் தேர்தல், கனிமவளக் கடத்தல், மேகதாது அணை விவகாரம் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து அவர் பேசியதாவது:

    உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரையில், தமிழக முதல்வர் நாள்தோறும் துறைவாரியாக விரிவான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக, மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகள் வரையறுக்கப்பட வேண்டும். குறிப்பாக, பெண்கள், பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு மக்கள் தொகைக்கு ஏற்ப சீரமைக்கப்பட வேண்டும். பட்ஜெட் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே, இது குறித்த ஆழமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். உள்ளாட்சித் துறை அமைச்சர் இந்தப் பணிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார். அரசின் நற்பெயருக்குக் களங்கம் வராத வகையிலும், கொள்கை முடிவுகளில் எவ்வித சமரசமும் இல்லாத வகையிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்கச் சோதனைச் சாவடிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைகள் குறுகலாக இருப்பதாலும், மக்கள் போராட்டங்களாலும் கனிமப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவது மாற்றிவிடப்பட்டு, தென்காசி வழியாகச் செல்ல அரசு உரிய நடவடிக்கை எடுத்தது. தற்போது, கேரளாவிற்குத் தற்காலிகமாகக் கனிமப் பொருட்களைக் கொண்டு செல்லக் கூடாது என அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதேபோல, விவசாயிகளுக்குத் தேவையான யூரியா உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் உரத்தைப் பதுக்கியவர்கள் பிடிபட்டுள்ளனர். இதுபோன்று செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, உரம் பதுக்கலில் ஈடுபடுவோர் மீது அரசு கடுமையான மற்றும் பாரபட்சமற்ற நடவடிக்கைகளை விரைந்து எடுத்து வருகிறது.

    மேகதாது அணை கட்டப்பட்டால் ஒரு லட்சம் வீரப்பன்கள் உருவாகுவார்கள் என அன்புமணி ராமதாஸ் கூறியது குறித்துப் பதிலளிக்கையில், ஒரு மாநிலத்திற்கு எதிராக இதுபோன்ற வன்முறையைத் தூண்டும் கருத்துகளைத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல. எந்தவொரு பிரச்சினையையும் நாம் சட்ட ரீதியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும். இரு மாநிலங்களிலும் இரு தரப்பு மக்களும் வசித்து வருகின்றனர்.

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, மக்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தாலும் ஒரு பொருளைக் கூடச் சேதப்படுத்தவில்லை. ஆனால், வங்கதேசத்தில் வன்முறை வெடித்தது. நாம் அமைதியான முறையில்தான் நமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும். காவிரி விவகாரத்தில், உபரி நீர் வரும்போது மட்டுமே கர்நாடகா தண்ணீர் திறக்கிறதே தவிர, காவேரி நதிநீர் ஆணையம் நிர்ணயித்த தண்ணீரை நமக்கு உரிய காலத்தில் வழங்குவதில்லை. இது தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது கண்டனத்திற்குரியது.

    கர்நாடகாவில் இருந்து வெளியேற்றப்படும் தொழிற்சாலை மற்றும் கழிவுநீரால் கெலவரப்பள்ளி அணை முழுமையாக மாசடைந்துள்ளது. இதனால் மீன்கள் உயிரிழந்து, விவசாயத்திற்கு நீரைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்த புகார்கள் வந்தவுடன், மீன்வளத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். இதனைத் தடுக்க அரசு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    மாற்றுக்கட்சிகளில் இருந்து பலர் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவது குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி நல்லாட்சி தருவார், அனைவரையும் அரவணைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் அவர் பின்னால் அணிவகுக்கிறார்கள் என்றார். அதிமுகவைப் பொறுத்தவரை, அதன் கொள்கைகளில் ஏற்பட்ட சறுக்கல்களே அக்கட்சியினர் வெளியேறக் காரணமாகும். எடப்பாடி பழனிசாமி தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக எதையும் செய்யத் துணிந்தவர். எதிர்க்கட்சியாக இருந்தபோதே திமுகவுடன் அவர் ரகசியக் கூட்டணி வைத்திருந்தார் என்பது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. அம்மாவைச் சிறையில் அடைத்த இயக்கத்துடன் கைகோர்க்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமியால் அந்த இயக்கத்தைக் காப்பாற்ற முடியாது. இதன் காரணமாகவே, அங்கிருந்து பலரும் வெளியேறி வருகிறார்கள்.

    Anbumani Ramadoss Political Statement Sengottaiyan Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் கேப்டன் பதவியில் பாபர் ஆசம்! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி முடிவு!
    Next Article “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை
    Editor TN Talks

    Related Posts

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் புஸ்லி ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    July 5, 2026

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    July 5, 2026

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் புஸ்லி ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.