மெல்போர்னுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியை, விக்டோரியா மாகாண முதல்வர் ஜசிந்தா ஆலன் உற்சாகமாக வரவேற்றார். அப்போது அவர் இந்தியா நாங்கள் நம்பும் ஒரு நாடு” என்று பெருமையுடன் புகழாரம் சூட்டினார். மேலும் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியா அரசுக்கும் இடையிலான உறவை வலியுறுத்திய அவர், விக்டோரியாவில் உள்ள இந்திய குடிமக்கள் நமது அடையாளத்தின் ஒரு அங்கம் என்று குறிப்பிட்டார்.
மெல்போர்னில் நடைபெற்ற இந்தியச் சமூகத்தினருடனான நிகழ்வில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணப் பிரதமர் ஜசிந்தா ஆலன் ஆற்றிய உரையில், பிரதமர் மோடியின் இந்த வருகை, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையிலான உறவை வலுப்படுத்துவதோடு, ‘இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த ஆஸ்திரேலியப் பயணத்தின் போது, பாதுகாப்பு, எரிசக்தி, முக்கியமான தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 18 முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
