தமிழ்நாட்டில் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 13) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு, முதற்கட்டமாகச் சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீட்டுடன் தொடங்கியுள்ளது. மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 13) நடைபெறுகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% முன்னுரிமை இடஒதுக்கீட்டில் வரும் சிறப்புப் பிரிவினரும் இன்றைய கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். விளையாட்டு வீரர்கள் பிரிவில் 38 இடங்கள் உள்ளன, இதற்கு 504 பேர் தகுதி பெற்றுள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 150 இடங்களுக்கு 14 பேர் பங்கேற்கின்றனர்.
பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 20-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வு சுமார் 40 நாட்கள் வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கால அட்டவணையின்படி, அதிகாரப்பூர்வ இணையதளமான tneaonline.org மூலம் கலந்தாய்வில் பங்கேற்கலாம். இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு முற்றிலும் ஆன்லைன் முறையில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
