Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தர்மேந்திர பிரதானை முழுமையாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்..!! ராகுல் வலியுறுத்தல்..!!
    Featured

    தர்மேந்திர பிரதானை முழுமையாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்..!! ராகுல் வலியுறுத்தல்..!!

    editor5By editor5July 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 20 12
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் தேர்வு முறைகேடு பிரச்சினையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை வேறு அமைச்சகத்துக்கு மட்டும் மாற்றுவது போதாது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாகக் கோரிக்கை வைத்துள்ளார். அவரை அமைச்சர் பதவியில் இருந்து முழுமையாக நீக்க வேண்டும் என்பதே மாணவர்களின் முக்கிய கோரிக்கை என்றும் அவர் வலியுறுத்தினார்.

    டெல்லியில் ஜந்தர் மந்தரில் தொடரும் மாணவர் போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “தர்மேந்திர பிரதானை வேறு துறைக்கு மாற்றப் போவதாகச் செய்திகள் வருகின்றன. ஆனால் இது பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் அளிக்காது. மாணவர்கள் தெளிவாகப் பதவி நீக்கத்தைக் கோருகின்றனர். எனவே அவர் உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்” என்றார்.

    மேலும், “நீட் தேர்வு முறைகேட்டால் நாட்டின் கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மாணவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க மத்திய அரசு உறுதியான, உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

    ஜந்தர் மந்தரில் நடைபெறும் மாணவர் போராட்டத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவே மையக் கோரிக்கையாகத் தொடர்கிறது. மத்திய அரசு கூடுதல் அவகாசம் கோரிய நிலையில், போராட்டக்காரர்கள் தங்கள் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்று உறுதியாகத் தெரிவித்துள்ளனர். இன்று மூன்றாவது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. எனினும், “தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யாவிட்டால் பேச்சுவார்த்தையில் எந்த அர்த்தமும் இல்லை” என்று இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

    நீட் விவகாரம் தொடர்பான இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் அரசு உடனடியாக நம்பகமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    Dharmendra Pradhan rahul gandhi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமறைந்த நெல் ஜெயராமன் நினைவாக தேசிய நெல் திருவிழா!. 174 பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சி!
    Next Article நீட் வேண்டாம் என்பதே முதல்வரின் தெளிவான நிலைப்பாடு..!! அமைச்சர் நிர்மல்குமார் உறுதி..!!
    editor5

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.