Close Menu
    What's Hot

    9 நாட்களாக ஒதுக்கப்படாத இலாகா… புதுச்சேரியில் பாஜக-ரங்கசாமி இடையே விரிசலா?

    செமி கண்டக்டர் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி சீனா… சொந்த DUV லித்தோகிராபி இயந்திரங்கள் உற்பத்தி தொடக்கம்!

    தவெகவுக்கு அதிமுக எம்.எல்.ஏக்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டவர் சி.வி.சண்முகம் – பசுபதி போடும் பகீர் குண்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் சிக்கன் பிரியாணி? அமைச்சர் ராஜ்மோகன் தகவல்..!!
    Featured

    அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் சிக்கன் பிரியாணி? அமைச்சர் ராஜ்மோகன் தகவல்..!!

    editor5By editor5July 29, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 34 10
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் அனைத்து ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இந்தக் கூட்டம் இன்று நடைபெற்றது.

    கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் தங்கள் நீண்ட நாள் கோரிக்கைகளை முன்வைத்தனர். மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் நலன் சார்ந்த பல முக்கிய பரிந்துரைகளும் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, சில சங்கங்கள் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு திட்டத்தில் வாரத்திற்கு ஒரு முறையாவது சிக்கன் பிரியாணி சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த புதிய கோரிக்கை குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

    முதலமைச்சருடன் விரைவில் ஆலோசித்து, நிதி ஒதுக்கீடு, சாத்தியக்கூறுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, சத்துணவு பட்டியலில் சிக்கன் பிரியாணியை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இது மாணவர்களிடையே வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதவிர, பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்துதல், ஆசிரியர் தகுதித் தேர்வின் (TET) தகுதி மதிப்பெண்களைக் குறைத்தல், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியத் திருத்தம், பழைய ஊதிய முறையை மீட்டெடுத்தல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை சங்கங்கள் எடுத்து வைத்தன. உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், தையல் உள்ளிட்ட பாடங்களில் தற்போது 11,773 பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை உடனடியாக நிரந்தரப்படுத்த வேண்டும் என சங்கத் தலைவர் செந்தில் குமார் வலியுறுத்தினார்.

    அமைச்சர் ராஜ்மோகன், சங்கங்கள் சமர்ப்பித்த அனைத்து கோரிக்கை மனுக்களையும் பிரத்யேக மென்பொருள் மூலம் டிஜிட்டல் மயமாக்குவதாக அறிவித்தார். கோரிக்கைகள் வகைப்படுத்தப்பட்டு, எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் தொடர்புடைய சங்கங்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும். இந்த ஆலோசனைக் கூட்டம் ஆசிரியர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

    cm vijay Minister rajmohan
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டின் நலன்… ஒன்று சேரும் கூட்டணிக் கட்சி எம்.பிக்கள்- திமுக புறக்கணிப்பு?
    Next Article நிலப் பிரச்சனை தொடர்பாக குழந்தையுடன் பெண்கள் தர்ணா… தலைமைச் செயலகத்தில் பரபரப்பு!
    editor5

    Related Posts

    9 நாட்களாக ஒதுக்கப்படாத இலாகா… புதுச்சேரியில் பாஜக-ரங்கசாமி இடையே விரிசலா?

    July 29, 2026

    செமி கண்டக்டர் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி சீனா… சொந்த DUV லித்தோகிராபி இயந்திரங்கள் உற்பத்தி தொடக்கம்!

    July 29, 2026

    தவெகவுக்கு அதிமுக எம்.எல்.ஏக்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டவர் சி.வி.சண்முகம் – பசுபதி போடும் பகீர் குண்டு

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    9 நாட்களாக ஒதுக்கப்படாத இலாகா… புதுச்சேரியில் பாஜக-ரங்கசாமி இடையே விரிசலா?

    செமி கண்டக்டர் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி சீனா… சொந்த DUV லித்தோகிராபி இயந்திரங்கள் உற்பத்தி தொடக்கம்!

    தவெகவுக்கு அதிமுக எம்.எல்.ஏக்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டவர் சி.வி.சண்முகம் – பசுபதி போடும் பகீர் குண்டு

    தூத்துக்குடி : முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்..! ஜாமின் மனு ஒத்திவைப்பு..!

    புதிய சாலைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்… CUMTA முடிவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.