Close Menu
    What's Hot

    கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன ரகானே.. திடீர் ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

    திருப்பத்தூர்; ஆட்சி மாறியும், காட்சி மாறலையே… கண்ணீர் விடும் தூய்மைப் பணியாளர்கள்!

    சேலம்; கல்லூரிகளில் சேர்த்துவிடுவதாக மோசடி.. தனியார் வழிகாட்டுதல் மைய உரிமையாளர் சிறைப்பிடிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மோடி பிரதமராக அல்ல.. முழுநேர இன்ஃப்ளூயன்சராக செயல்படலாம்.. தீப்கே சாடல்!!
    Featured

    மோடி பிரதமராக அல்ல.. முழுநேர இன்ஃப்ளூயன்சராக செயல்படலாம்.. தீப்கே சாடல்!!

    editor5By editor5July 30, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 18 18
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் உள்ளிட்ட பொதுத் தேர்வுகளில் நடைபெற்ற வினாத்தாள் கசிவு, முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அபிஜித் தீப்கே தலைமையிலான கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்திய ஒரு மாத கால தொடர் போராட்டம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த அழுத்தத்தின் காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது நீண்ட மௌனத்தை முறித்து இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் உரையாற்றினார்.

    போராட்டத்தின் வெற்றியை அடுத்து, தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும், குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் சிறப்பு மசோதா கொண்டு வரப்படும் என பிரதமர் அறிவித்தார். இதன் அடிப்படையில், ‘பொதுத் தேர்வுகள் (முறைகேடு தடுப்பு) மசோதா’ நேற்று மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தேர்வு ஊழல்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    போராட்டத்தை வெற்றிகரமாக முடித்த அபிஜித் தீப்கே, மகாராஷ்டிராவில் உள்ள தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அங்கு ஊடகங்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியின் சமூக வலைத்தள நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார். “பிரதமர் மோடி இப்போது சிறந்த இன்ப்ளூயன்சராக மாறியுள்ளார். அவர் அந்தப் பணியை முழு நேரமும் செய்யட்டும். நாட்டின் ஆட்சிப் பொறுப்பை வேறொரு தலைவர் ஏற்றுக் கொள்ளட்டும்” என்று கூறினார்.

    மேலும், போராட்டம் முடிவுக்கு வந்த பிறகும் பல மாநில அரசுகள் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களை அடையாளம் கண்டு அச்சுறுத்தி வருவதாக தீப்கே குற்றம் சாட்டினார். ஜூலை 20 அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது தடியடி நடத்தியதோடு, பெல்லட் துப்பாக்கிகளையும் பயன்படுத்த உத்தரவிட்ட அமித் ஷா உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    “மாணவர்கள் தீவிரவாதிகள் அல்ல. அடக்குமுறை தொடர்ந்தால் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது போல, அடுத்து மத்திய ஆட்சியையே மாற்றுவோம். அடுத்தகட்ட போராட்டம் இதைவிட பெரிய அளவில் இருக்கும்” என எச்சரித்த அபிஜித் தீப்கே, 36 நாட்கள் வெயிலிலும் மழையிலும் போராடிய தன்னார்வலர்களைக் கௌரவிக்கும் வகையில் கொண்டாட்டம் நடத்தப்பட்டதாகவும் விளக்கினார்.

    இந்த போராட்டம் நாடு முழுவதும் மாணவர்கள் மத்தியில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான இயக்கம் இனி அரசியல் ரீதியாகவும் வலுப்பெறும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    #AbhijeetDipke #CJP Narendra Modi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleHIV பாதிப்பில் 7,000+ மாணவர்கள்.. கர்நாடகாவில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை நிலவரம்..!!
    Next Article  வெளியானது ராமாயணா டிரெய்லர்… தமிழில் மூன்றரை லட்சம் பார்வையாளர்கள் கண்டு களித்துள்ளனர்!
    editor5

    Related Posts

    கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன ரகானே.. திடீர் ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

    July 30, 2026

    திருப்பத்தூர்; ஆட்சி மாறியும், காட்சி மாறலையே… கண்ணீர் விடும் தூய்மைப் பணியாளர்கள்!

    July 30, 2026

    சேலம்; கல்லூரிகளில் சேர்த்துவிடுவதாக மோசடி.. தனியார் வழிகாட்டுதல் மைய உரிமையாளர் சிறைப்பிடிப்பு

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்ன ரகானே.. திடீர் ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

    திருப்பத்தூர்; ஆட்சி மாறியும், காட்சி மாறலையே… கண்ணீர் விடும் தூய்மைப் பணியாளர்கள்!

    சேலம்; கல்லூரிகளில் சேர்த்துவிடுவதாக மோசடி.. தனியார் வழிகாட்டுதல் மைய உரிமையாளர் சிறைப்பிடிப்பு

    டெலிகிராம் நிறுவனர் மீது ரஷியா அதிரடி நடவடிக்கை.. பயங்கரவாத வழக்கில் பிடிவாரண்ட்..!!

    டாஸ்மாக் முறைகேடு வழக்கு… செந்தில் பாலாஜியின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.