Close Menu
    What's Hot

    பாகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடி?. 2027 எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்க விருப்பம்!.

    40,000 கிலோ ஆட்டுக்கறி… 20,000 பேருக்கு விருந்து… ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா!

    திருப்பூர் : ஐடிபிஎல் பைப் லைன் திட்டத்திற்கு எதிர்ப்பு..! போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»செந்தில் பாலாஜி முன்ஜாமீன் வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்; அடுத்த கட்டம் என்ன?
    Featured

    செந்தில் பாலாஜி முன்ஜாமீன் வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்; அடுத்த கட்டம் என்ன?

    editor5By editor5July 31, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 21 16
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை மற்றும் பார் ஒதுக்கீடு தொடர்பான பெருமளவிலான முறைகேடுகள் தொடர்பாக திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜூலை 31) மதியம் விசாரணைக்கு வந்தது.

    முந்தைய திமுக ஆட்சியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த செந்தில் பாலாஜியின் காலகட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்தில் கணிசமான ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறிப்பாக மதுவிற்பனை உரிமங்கள், பார் ஒதுக்கீடு மற்றும் தொடர்புடைய பல்வேறு பரிவர்த்தனைகளில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் முறைகேடுகள் நிகழ்ந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    கடந்த ஜூலை 28-ஆம் தேதி செந்தில் பாலாஜியின் சென்னை இல்லம், அவர் தங்கியிருந்த ஹோட்டல்கள் உள்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி, டாஸ்மாக் இயக்குநராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விசாகன் உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உட்பட 11 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், செந்தில் பாலாஜி கைது செய்யப்படும் சூழல் உருவானது.

    இதனால் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். நேற்று (ஜூலை 30) அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இன்று மதியம் 1 மணிக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. மூன்று நீதிபதிகள் அமர்வில் (தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி, நீதிபதி வி. மோகனா) விசாரணை நடைபெற இருந்த நிலையில், நீதிபதி வி. மோகனா வழக்கிலிருந்து விலகிக் கொண்டார்.

    காரணம், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு மூத்த வழக்கறிஞராக இருந்த வி. மோகனா, செந்தில் பாலாஜிக்காக பல வழக்குகளில் வாதாடியுள்ளார். எனவே நேர்மையான விசாரணைக்காக அவர் தானாகவே விலகிக் கொண்டார். இதனால் தற்போது தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வில் வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.

    கோவையைச் சேர்ந்த வி. மோகனா, உச்சநீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்பட்ட 11-வது நபர் மற்றும் இரண்டாவது பெண் (முதலாவது இந்து மல்ஹோத்ரா) ஆவார். இந்த சம்பவம் சட்ட வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    Senthil Balaji supreme court justice
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகால்பந்து உலகில் பேரதிர்ச்சி!. ஏசி மிலன் ஜாம்பவான் ஃபிராங்கோ பரேசி காலமானார்!
    Next Article ’கர்நாடகா செல்ல முதல்வர் பிடிவாதம் ஏன்… எதை சாதிக்கப் போகிறார்?’- அன்புமணி கேள்வி
    editor5

    Related Posts

    பாகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடி?. 2027 எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்க விருப்பம்!.

    July 31, 2026

    40,000 கிலோ ஆட்டுக்கறி… 20,000 பேருக்கு விருந்து… ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா!

    July 31, 2026

    திருப்பூர் : ஐடிபிஎல் பைப் லைன் திட்டத்திற்கு எதிர்ப்பு..! போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது..!

    July 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாகிஸ்தான் செல்லும் பிரதமர் மோடி?. 2027 எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்க விருப்பம்!.

    40,000 கிலோ ஆட்டுக்கறி… 20,000 பேருக்கு விருந்து… ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா!

    திருப்பூர் : ஐடிபிஎல் பைப் லைன் திட்டத்திற்கு எதிர்ப்பு..! போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது..!

    பாஜகவில் திடீர் திருப்பம்.. தேசிய செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா பதவி விலகல்..!!

    கல்வான் மோதலுக்குப் பிறகு முதல்முறை!. இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.