Close Menu
    What's Hot

    அப்பாவுக்கு பதவி உயர்வா? அனிதா ராதாகிருஷ்ணனுடன் மோதலா? திமுகவில் அடுத்த கட்ட நகர்வு!

    த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தப் பேச்சு… உதயநிதியை கைது செய்யத் திட்டமா?… வீட்டை முற்றுகையிட்டுள்ள காவல் துறை…

    கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை!. கண்முன்னே உள்வாங்கிய கிணறு!. இடிந்து விழும் நிலையில் வீடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»உதயநிதி பேச்சால் சர்ச்சை தீவிரம்.. தேசிய மகளிர் ஆணையம் வரை சென்ற விவகாரம்!!
    Featured

    உதயநிதி பேச்சால் சர்ச்சை தீவிரம்.. தேசிய மகளிர் ஆணையம் வரை சென்ற விவகாரம்!!

    editor5By editor5August 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 14
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. காவிரி நீர் பிரச்சினை மற்றும் விவசாயிகளின் நலன் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற அந்தப் போராட்டத்தில், அவர் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தையும் முதலமைச்சர் விஜயையும் கடுமையாக விமர்சித்தார்.

    குறிப்பாக, பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் மௌனம் காப்பதாகக் குற்றம்சாட்டிய உதயநிதி, அவரது செயல்பாடுகளுக்கு திமுக தக்க பதிலடி அளிக்கும் என எச்சரித்தார். மேலும், முதலமைச்சரை ஒரு நடிகையுடன் தொடர்புபடுத்தும் வகையில் இரட்டை அர்த்தமுள்ள கருத்துகளைத் தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேச்சு பெண்களுக்கு எதிரானதாகவும், பொறுப்பற்றதாகவும் பார்க்கப்படுகிறது என எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

    இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதர்ஷ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர். ஆனந்த், “எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பின் மாண்பையும் மரபையும் உணராமல் வாய்க்கு வந்தபடி பேசிய ஒருவரை என்ன சொல்வது என்றே தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.

    ஆதவ் அர்ஜுனா, “பேரறிஞர் அண்ணா தனது தமிழ்ப் புலமையால் கட்டியெழுப்பிய இயக்கத்தை இன்று ஆபாச மொழிகளாலும் தரக்குறைவான பேச்சுகளாலும் அழித்து வருபவர் ஆபாசநிதி” என விமர்சித்தார். கட்சியின் பல அமைச்சர்களும் நிர்வாகிகளும் #ஆபாசநிதி என்ற ஹேஷ்டேக் மூலம் தொடர்ந்து கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

    இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தியதாகக் குற்றம்சாட்டி இந்தப் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், இந்த அரசியல் மோதல் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக வெற்றிக் கழகத் தலைமை, நேற்றைய நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உடனடி போராட்டத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இரு தரப்பினரும் விவசாயப் பிரச்சினைகளை முன்வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், மாநில அரசியல் சூழல் மேலும் பதற்றமடையும் வாய்ப்புள்ளது.

    national women commission Udhayanidhi Stalin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉதயநிதி பேச்சால் அரசியல் சூடு.. இன்று களமிறங்கும் தவெக.. தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!
    Next Article கடைசி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. ஈரானுக்கு டிரம்ப் அதிரடி எச்சரிக்கை!!
    editor5

    Related Posts

    அப்பாவுக்கு பதவி உயர்வா? அனிதா ராதாகிருஷ்ணனுடன் மோதலா? திமுகவில் அடுத்த கட்ட நகர்வு!

    August 4, 2026

    த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தப் பேச்சு… உதயநிதியை கைது செய்யத் திட்டமா?… வீட்டை முற்றுகையிட்டுள்ள காவல் துறை…

    August 4, 2026

    கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை!. கண்முன்னே உள்வாங்கிய கிணறு!. இடிந்து விழும் நிலையில் வீடு!

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அப்பாவுக்கு பதவி உயர்வா? அனிதா ராதாகிருஷ்ணனுடன் மோதலா? திமுகவில் அடுத்த கட்ட நகர்வு!

    த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தப் பேச்சு… உதயநிதியை கைது செய்யத் திட்டமா?… வீட்டை முற்றுகையிட்டுள்ள காவல் துறை…

    கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை!. கண்முன்னே உள்வாங்கிய கிணறு!. இடிந்து விழும் நிலையில் வீடு!

    வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் அனுப்ப தடை ஏன்? ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்!

    அதிகார நியமனங்களில் புதிய நடைமுறை! ஆளுநர் ஒப்புதலை ரத்து செய்த முதல்வர் விஜய்!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.