Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»LIFESTYLE»இருமல், தூக்கமின்மை, மலச்சிக்கலா? தினமும் பாலில் ஊற வைத்த பேரிச்சம்பழம் சாப்பிட்டு பாருங்க.. பல நன்மைகள் இருக்கு!
    LIFESTYLE

    இருமல், தூக்கமின்மை, மலச்சிக்கலா? தினமும் பாலில் ஊற வைத்த பேரிச்சம்பழம் சாப்பிட்டு பாருங்க.. பல நன்மைகள் இருக்கு!

    Editor TN TalksBy Editor TN TalksMay 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    WhatsApp Image 2025 05 10 at 08.38.29
    பேரிச்சம்பழம் இரும்புச்சத்து நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அதை வெறுமனே சாப்பிடுவதைக் காட்டிலும் பாலில் ஊற வைத்து சாப்பிட்டால் கூடுதல் பலன்களைப் பெறலாம். அதோடு ஊறவைத்த பாலிலும் பல நன்மைகள் உள்ளன. சர்க்கரை விரும்பாதவர்களுக்கு பேரிச்சை இனிப்புடன் பால் குடிப்பது கூடுதல் பலன் தரும். சரி, அப்படி ஊற வைத்த பாலிலும் பேரிச்சம்பழத்திலும் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன பார்ப்போம்.
    WhatsApp Image 2025 05 10 at 08.38.57
    இருமல்: பேரிச்சம்பழம் ஊற வைத்த பாலில் கொஞ்சம் தேனும் கலந்து வெதுவெதுப்பான பாலை குடித்தால் நீடித்த இருமலை போக்க முடியும். இதற்காக பாலில் சில பேரிச்சைகளை போட்டு கொதிக்க வைத்து சூடாக குடித்தால் தொண்டைக்கும் இதமாக இருக்கும்.
    WhatsApp Image 2025 05 10 at 08.39.41
    இரத்த சோகை, நரம்பு நோய்கள், விறைப்புத்தன்மை இழத்தல்: இந்த மூன்று பிரச்னைகளையும் சரி செய்யும் ஆற்றல் பேரிச்சைக்கு உண்டு. 24 மணி நேரம் அல்லது இரவு பேரிச்சையை பாலில் ஊற வைத்து மறுநாள் குடிக்கும்போது அதில் கொஞ்சம் குங்குமப்பூ, ஏலக்காய், இஞ்சி தட்டிப்போட்டு குடித்தால் நல்ல பலன்களைப் பெறலாம்.
    WhatsApp Image 2025 05 10 at 08.40.05
    தூக்கமின்மை: தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுவோர் வெதுவெதுப்பான நீரில் பேரிச்சம்பழத்தை கலந்து ஊற வைத்து குடிக்க சரியாகலாம்.
    WhatsApp Image 2025 05 10 at 08.40.45
    நெஞ்சு வலி: உயர் இதயத்துடிப்பு, இதய பாதிப்புகள் இருந்தால் தினம் 2 பேரிச்சையை அரை கிளாஸ் பாலில் ஊற வைத்து 2 ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் கட்டுப்படுத்தலாம்.
    WhatsApp Image 2025 05 10 at 08.41.15
    மலச்சிக்கல்: 5-8 பேரிச்சம்பழத்தை அரை லிட்டர் பாலில் கொதிக்க வைத்து ஆறியதும் குடிக்க வேண்டும். இதை காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். காலை உணவுக்குப் பிறகும் சில பேரிச்சைகளை சாப்பிடலாம்.
    WhatsApp Image 2025 05 10 at 08.41.36
    உயர் இரத்த அழுத்தம்: 50-70 கிராம் அளவு பேரிச்சையை பாலில் ஊற வைத்து காலை உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு சாப்பிடுங்கள். இதை மூன்று வாரங்கள் செய்து பாருங்கள்.
    WhatsApp Image 2025 05 10 at 08.42.10
    வாயு: வாயுத்தொல்லை இருந்தால் பேரிச்சம்பழத்துடன் இடித்த சீரகத்தை 2:1 என்ற அளவில் பாலின் கலந்து குடிக்க வாயுத்தொல்லை நீங்கும்.
    WhatsApp Image 2025 05 10 at 08.42.42
    பாலூட்டும் தாய்க்கு நல்லது: பாலில் ஊற வைத்த பேரிச்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பாலூட்டும் தாய்மார்களுக்கு நல்லது. பாலும் நன்கு சுரக்கும்.
    dates health benefits இருமல் பேரீச்சம் பழம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதக்காளியை தினமும் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் முற்றிலும் வெளியேறுமா?!
    Next Article அழகிய தீயே… தாவணியில் கலக்கும் லப்பர் பந்து நடிகை!!
    Editor TN Talks

    Related Posts

    சர்வதேச யோகா தினம் 2026!. உடலையும் மனதையும் காக்கும் யோகாசனத்தின் அசாத்திய நன்மைகள்!

    June 21, 2026

    இதயத்தை பாதுகாக்கும் கோவிட் தடுப்பூசிகள்!. கட்டுக்கதைகளை நம்பாதீர்கள்!. புதிய ஆய்வின் உண்மை!

    June 18, 2026

    நீங்கள் சாப்பிடுவது ஐஸ்கிரீமா… ப்ரோசன் டெசர்டா? – வரிசைக் கட்டும் நோய்கள்… எச்சரிக்கும் நிபுணர்கள்!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.