Close Menu
    What's Hot

    நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் நியூ அப்டேட்

    திட்டக்குடி விபத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்…. அன்புமணி வலியுறுத்தல்

    இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! வைகோ கொந்தளிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம்… அனுமதி மறுக்கப்பட்டதற்கு சசிகலா ஆவேசம்..
    Featured

    கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம்… அனுமதி மறுக்கப்பட்டதற்கு சசிகலா ஆவேசம்..

    Editor TN TalksBy Editor TN TalksMay 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கோடநாடு எஸ்டேட்டில் மணி மண்டபம் கட்ட திமுக அரசு அனுமதி மறுத்துள்ளதற்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார். 2026-க்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் அப்போது மணிமண்டபம் கட்டப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டிற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், கோடநாடு எஸ்டேட்டின் பங்குதாரருமான சசிகலா வருகை புரிந்துள்ளார்.
    அங்கு அவர் மூன்று நாட்கள் தங்கி ஓய்வெடுக்க உள்ளார். கோடநாட்டுக்கு வருகை தந்த அவருக்கு எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பு தந்தனர். ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலா கோடநாட்டிற்கு வருவது இது இரண்டாவது முறையாகும்.

    கோடநாட்டிற்கு வந்த சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோடநாட்டில் ஜெயலலிதாவிற்கு மணி மண்டபம் கட்ட திமுக அரசாங்கம் அனுமதி மறுத்து விட்டதாக குற்றஞ்சாட்டினார். எங்கள் சொந்த நிலத்தில் மணிமண்டபம் கட்ட எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 2026 ல் நிச்சயமாக தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் அம்மாவின் ஆட்சி அமைந்ததும் கோடநாட்டில் மணி மண்டபம் அமைக்கப்பட்டு எல்லா மக்களும் பார்க்கும்படி செய்யப்படும் என்றார்.

    மணிமண்டபம் கட்ட திமுக அனுமதி மறுத்தது தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவது குறித்து வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் சசிகலா கூறியுள்ளார். திமுகவினர் மக்களிடம் அதிக வரியை வசூலிப்பதில் முனைப்பாக உள்ளனர் என்றும், மக்களுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை என்றும் அவர் அதிருப்தி தெரிவித்தார். இந்த நிலை மாறவேண்டும் என்றால் அம்மா ஆட்சியை நான் கொண்டு வருவேன் என செய்தியாளர்களிடம் சசிகலா தெரிவித்துள்ளார்.

    AIADMK news Jayalalithaa Sasikala relationship Jayalalithaa tribute Kodanadu controversy Kodanadu Jayalalithaa Memorial Permission denied for memorial Political memorial dispute Sasikala latest news Sasikala outrage Tamil Nadu politics 2025
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபொற்கோயிலில் அதிகரிக்கப்பட்ட வான்பாதுகாப்பு.. இந்திய ராணுவ அதிகாரிகள் தகவல்!!
    Next Article OTT தளங்களில் பார்க்க வேண்டிய மாஃபியா படங்களில் சில…
    Editor TN Talks

    Related Posts

    நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் நியூ அப்டேட்

    December 25, 2025

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    December 25, 2025

    கிரிக்கெட்டில் நான் ஒரு ‘ஆப் ஸ்பின்னர்’ – முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் நியூ அப்டேட்

    திட்டக்குடி விபத்துக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்…. அன்புமணி வலியுறுத்தல்

    இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்! வைகோ கொந்தளிப்பு

    1,519 படங்கள் ரிலீஸ்! 10 மட்டுமே சூப்பர் ஹிட்!

    தண்டவாளம் நடுவில் நின்ற ஆட்டோ! வந்தே பாரத் ரயில் தப்பியது

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    தேசிய சீனியர் பாட்மிண்டன்: உன்னதி, தன்வி முன்னேற்றம்

    December 25, 2025

    கிரிக்கெட்டில் நான் ஒரு ‘ஆப் ஸ்பின்னர்’ – முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

    December 25, 2025

    புதுச்சேரியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 மாணவர்கள் தப்பியோட்டம்

    December 25, 2025

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.