Close Menu
    What's Hot

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்: காவல்துறையின் தடியடி தொடர்பான பொதுநல வழக்கு நாளை விசாரணை

    “நீட் பிரச்சனையில் இடைக்கால தீர்வே தவெக நிலைப்பாடு”

    களம் காணும் காங்கிரஸ்… கண்டு கொள்ளாத திமுக – நீட் எதிர்ப்பில் இரட்டை வேடமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஏ.ஆர் ரஹ்மான் விஷயத்தில் ஏன் இவ்வளவு அவசரம்? வைரலாகும் ‘பெரிய பாய்’ வீடியோ…
    Featured

    ஏ.ஆர் ரஹ்மான் விஷயத்தில் ஏன் இவ்வளவு அவசரம்? வைரலாகும் ‘பெரிய பாய்’ வீடியோ…

    Editor TN TalksBy Editor TN TalksMay 20, 2025Updated:May 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Arr reacts to DD
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் அண்மையில் தொகுப்பாளர் டிடியுடன் கலந்துகொண்ட நேர்காணலில் பேசிய கருத்து அவசர அவசரமாக வைரல் ஆக்கப்பட்டிருக்கிறது. என்ன ஏது என முழு காணொளியைக் கூடப் பார்க்காமல் ஒருவர் கருத்தின் மீது சர்ச்சையைக் கிளப்ப இவ்வளவு அவசரம் என்ன வேண்டியிருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. 

    என்ன சொன்னார் ஏ.ஆர் ரஹ்மான்? 

    மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவுள்ள தக் லைஃப் திரைப்படத்தின் புரோமோஷனின் ஒரு பகுதியாக அப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், பிரபல தொகுப்பாளர் திவ்ய தர்ஷினியுடன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார். அதில் ஏ.ஆர் ரஹ்மானைப் பற்றி பல புகழ்த் துதிகளை அடுக்கிக் கொண்டே வந்த டிடி, சமூக ஊடகங்களில் அவரைப் பெரிய பாய் என்று குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டி தானும் அப்பெயரைப் பெருமையோடு குறிப்பிட்டார். சமூக ஊடகங்களில் ஏ.ஆர் ரஹ்மானை பெரிய பாய் என்றும் யுவன் சங்கர் ராஜாவைச் சின்ன பாய் என்றும் அழைக்கும் வழக்கம் இருப்பதால், அதைக் குறிக்கும் வகையில் அப்பதத்தை டிடி பயன்படுத்தினார். அதைக் கேட்டதும் “என்ன பெரிய பாயா” என்று கேட்ட ஏ.ஆர் ரஹ்மான் “அது வேண்டாம். எனக்குப் பிடிக்கவில்லை” என்று கூறினார். 

    எங்கே சர்ச்சை ஆனது? 

    இந்த நேர்காணல் குறித்த முன்னோட்ட காணொளி ஒன்று வெளியானது. அதில் டிடி சொன்னதுக்கு ஏ.ஆர் ரஹ்மான் சொன்ன மறுமொழியில், “என்ன பெரிய பாயா? எனக்கு அது பிடிக்கல, என்ன கசாப் கடையா வெச்சிருக்க” என்று கூறியிருப்பது பதிவாகியுள்ளது.

    https://x.com/kollywoodnow/status/1924510074242007186 

    இதைப் பார்த்த பலரும் என்ன கசாப் கடை வைத்திருப்பது அவ்வளவு கேவலமா? இசையமைப்பாளர் என்றால் கசாப் கடை வைத்திருப்பவர்களை ஏ.ஆர் ரஹ்மான் மட்டமாகப் பேசுவாரா என்று நெட்டிசன்கள் சிலர் கொந்தளித்துள்ளனர். 

    https://x.com/RamThevar9/status/1924784328736649455 

    உண்மை என்ன? 

    தொகுப்பாளர் டிடி பெரிய பாய் என்று குறிப்பிட்டதும் “எனக்கு அது பிடிக்கவில்லை” என்றார் ஏ.ஆர் ரஹ்மான். உடனே “கட்.. கட்.. அந்தப் பெயரை இன்று முதல் கட் செய்து விடுவோம்” என்று கிண்டலாக கேமராவை நோக்கி கட் சொன்னார் டிடி. அதையும் கிண்டல் செய்யும் ஏ.ஆர் ரஹ்மான் “என்ன கட் கட்-ன்னு கசாப் கடையா வெச்சிருக்க” என்று டிடியை கிண்டலடிக்கிறார். மிகத் தெளிவாக இடைப்பட்ட அந்தப் பகுதியை எடிட்டில் வெட்டித் தூக்கிவிட்டு வெளியிடப்பட்ட புரோமோவைப் பார்த்துவிட்டு ஏ.ஆர் ரஹ்மான் மீது பொங்கியிருக்கிறார்கள் பலர். 

    https://x.com/i/status/1924767927284203905 

    நிதானம் தேவை 

    முழு காணொலியைக் கூட பார்க்காமல், வெறும் புரோமோவில் வெளியான கருத்துகளை வைத்துக் கொண்டு ஒருவர் மீது கண்டனங்கள் தெரிவிப்பதும், அதை ஏதோ மிக முக்கிய விஷயமாக ஊடகங்கள் பெரிதாக்குவதும்தான் இந்தக் கதையில் நடந்துள்ளது. திரைப் பிரபலமோ, யாரோ தவறான கருத்து தெரிவித்தால் அதை உலகத்திற்கு அம்பலப்படுத்த வேண்டியது ஊடகங்களின் முக்கிய கடமை. கருத்துகளுக்குக் கண்டனம் தெரிவிப்பது பொதுமக்களின் அடிப்படை உரிமை. ஆனால் அதில் இத்தனை அவசரம் காட்ட வேண்டிய தேவை என்னவிருக்கிறது என்று கேள்வி எழுப்புகின்றனர் இணையவாசிகள் சிலர். ஒரு கருத்தை வெளியிடும்போது அவசரம் தவிர்த்து நிதானம் கடைபிடிக்க வேண்டியது கடமையல்லவா!

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமயக்கமடைந்து தொடர் சிகிச்சையில் இருந்த தாய் யானை உயிரிழப்பு!
    Next Article தோழி விடுதி கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
    Editor TN Talks

    Related Posts

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்: காவல்துறையின் தடியடி தொடர்பான பொதுநல வழக்கு நாளை விசாரணை

    July 21, 2026

    “நீட் பிரச்சனையில் இடைக்கால தீர்வே தவெக நிலைப்பாடு”

    July 21, 2026

    களம் காணும் காங்கிரஸ்… கண்டு கொள்ளாத திமுக – நீட் எதிர்ப்பில் இரட்டை வேடமா?

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம்: காவல்துறையின் தடியடி தொடர்பான பொதுநல வழக்கு நாளை விசாரணை

    “நீட் பிரச்சனையில் இடைக்கால தீர்வே தவெக நிலைப்பாடு”

    களம் காணும் காங்கிரஸ்… கண்டு கொள்ளாத திமுக – நீட் எதிர்ப்பில் இரட்டை வேடமா?

    டெல்லி மாணவர் போராட்டம் : மத்திய அரசிடம் காங்கிரஸ் முன்வைத்த 5 கோரிக்கைகள்

    சாப்பிட்டது ஒரு குத்தமா..?? டெல்லி தடியடியின்போது ‘பர்கர்’ சாப்பிட்ட CJP லீடர்..!! பதவி போச்சு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.