Close Menu
    What's Hot

    முகத்தில் பருக்கள் உள்ளதா? அப்போ உடலில் இந்த பிரச்சனை கன்பர்ம்!

    10 வேட்பாளர்கள் கூட தவெகவில் கிடையாது! நயினார் நாகேந்திரன் கிண்டல்

    அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 10 பேர் குழு! விரைவில் தமிழகம் முழுவதும் பயணம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி!
    Featured

    முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி!

    Editor TN TalksBy Editor TN TalksMay 27, 2025Updated:May 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250527 WA0005 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5205 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் மூன்று அடி உயர்ந்துள்ளது.

     

    நீர்வரத்து அதிகரிப்பு

    தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவையைப் பூர்த்தி செய்யும் முல்லைப் பெரியாறு அணைக்கு, கடந்த சில மாதங்களாகப் போதிய மழை இல்லாததால் நீர்வரத்து மிகவும் குறைவாக இருந்தது. கடந்த மே 24 அன்று கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதையடுத்து, நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    IMG 20250527 WA0005

    மே 24-ம் தேதி வினாடிக்கு 487 கன அடியாக இருந்த நீர்வரத்து, மே 25-ம் தேதி 584 கன அடியாகவும், நேற்று வினாடிக்கு 1648 கன அடியாகவும் அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் 10 செ.மீ., தேக்கடியில் 10.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5205.32 கன அடியாகப் பத்து மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    நீர்மட்டம் உயர்வு

    அணையின் நீர்மட்டம் நேற்று 115.65 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 118.10 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மூன்று அடி வரை நீர்மட்டம் உயர்ந்திருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீர்மட்டம் மேலும் வேகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     

    தற்போது அணையின் நீர் இருப்பு 2285.10 மில்லியன் கன அடியாக உள்ளது. அணையில் இருந்து தேனி மாவட்டக் குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    Mullai periyar dam Rain Water level
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகேரளாவில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை.. 10 பேர் உயிரிழப்பு!
    Next Article கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!
    Editor TN Talks

    Related Posts

    எஸ்ஐஆர் படிவத்தை முறையாக நிரப்பாததால் பெயர் நீக்கம் – 10 லட்சம் பேருக்கு விரைவில் நோட்டீஸ்!

    December 25, 2025

    நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் நியூ அப்டேட்

    December 25, 2025

    ஒரு பவுன் தங்கம் : இன்றைய நிலவரம் என்ன?

    December 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முகத்தில் பருக்கள் உள்ளதா? அப்போ உடலில் இந்த பிரச்சனை கன்பர்ம்!

    10 வேட்பாளர்கள் கூட தவெகவில் கிடையாது! நயினார் நாகேந்திரன் கிண்டல்

    அதிமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க 10 பேர் குழு! விரைவில் தமிழகம் முழுவதும் பயணம்

    எஸ்ஐஆர் படிவத்தை முறையாக நிரப்பாததால் பெயர் நீக்கம் – 10 லட்சம் பேருக்கு விரைவில் நோட்டீஸ்!

    இறந்தவர்கள் பட்டியலில் நாதக வேட்பாளர் பெயர்! கொதித்தெழுந்த சீமான்

    Trending Posts

    மும்பையில் டிஜிட்டல் அரெஸ்ட்- ரூ.9 கோடியை இழந்து தவிக்கும் 85 வயது முதியவர்

    December 25, 2025

    தேசிய சீனியர் பாட்மிண்டன்: உன்னதி, தன்வி முன்னேற்றம்

    December 25, 2025

    கிரிக்கெட்டில் நான் ஒரு ‘ஆப் ஸ்பின்னர்’ – முதல்வர் ஸ்டாலின் கலகல பேச்சு

    December 25, 2025

    புதுச்சேரியில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 3 மாணவர்கள் தப்பியோட்டம்

    December 25, 2025

    இஷான் கிஷனின் சாதனை சதம் வீண்: 413 ரன்களை வெற்றிகரமாக துரத்தியது கர்நாடகா அணி

    December 25, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.