Close Menu
    What's Hot

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»முதலமைச்சர் வருகைக்காக பந்தல்குடி கால்வாய் துணியால் மறைக்கப்பட்டதால் சர்ச்சை!
    Featured

    முதலமைச்சர் வருகைக்காக பந்தல்குடி கால்வாய் துணியால் மறைக்கப்பட்டதால் சர்ச்சை!

    Editor TN TalksBy Editor TN TalksMay 31, 2025Updated:May 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250531 WA0011
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள கலைஞர் திடலில் திமுகவின் மாநில பொதுக்குழு கூட்டம் ஜூன் 1ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக அண்ணா அறிவாலயம் போன்ற அமைப்புடன் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் திமுகவினர் பங்கேற்றனர்.

     

    இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜூன் 1 அன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை வந்தார். அவருக்கு விமான நிலையம் முதல் புது ஜெயில் சாலை வரை “ரோட் ஷோ” ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு புதூர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் அவர் ஓய்வெடுத்தார்.

     

    முதலமைச்சர் வருகை தந்த சாலைகள் இருபுறமும் திமுகவின் கொடிகள் மற்றும் தோரணங்கள் அமைக்கப்பட்டு கோலாகலமாக காட்சியளித்தன.

     

    முதலமைச்சர் கோரிப்பாளையம் வழியாகச் சென்றதால், அந்தப் பகுதியில் கழிவுநீர் செல்லும் பந்தல்குடி கால்வாய் அவரது பார்வையில் படாமல் மறைக்கப்பட்டது. மதுரை மாநகராட்சி அதிகாரிகள் அந்தக் கால்வாயை சாரம் கட்டி துணி வைத்து மறைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

     

    கழிவுநீர் கால்வாயை மறைத்த இந்தச் செயல் குறித்து அப்பகுதி மக்கள் முதலமைச்சரிடம் முறையிட இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, தற்காலிகமாக மறைக்கும் இத்தகைய செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    CM MK Stalin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஓய்வுபெற்ற ஆசிரியர் மீது போக்சோ வழக்கு: சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் முயற்சி!
    Next Article ஒடிசா அமலாக்கத்துறை துணை இயக்குநர் லஞ்ச வழக்கில் கைது: 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!
    Editor TN Talks

    Related Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    Trending Posts

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026

    ஜன நாயகன் படத்தை டவுன்லோட் செய்யாதீங்க!. படக்குழுவினர் கடும் எச்சரிக்கை!

    April 10, 2026

    வாக்கு வேட்டையில் முதல்வர் ஸ்டாலின்!. மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வாக்கு சேகரிப்பு!

    April 10, 2026

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.