Close Menu
    What's Hot

    பிஃபா உலகக் கோப்பை!. 40 ஆண்டு கால ஏக்கம்!. சொந்த மண்ணில் அசத்திய கனடா!. போஸ்னியாவுடன் டிரா!.

    நூற்றாண்டு கடந்தும் குறையாத கம்பீரம்… ‘சிங்கார சென்னையின் இதயம்’ எழும்பூருக்கு 118 வயது!

    ஹர்ஷவர்தனின் ‘#IOIO’ ஹூக் ஸ்டெப்!. இன்ஸ்டாகிராமில் புதிய ட்ரெண்ட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»ஓய்வுபெற்ற ஆசிரியர் மீது போக்சோ வழக்கு: சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் முயற்சி!
    இந்தியா

    ஓய்வுபெற்ற ஆசிரியர் மீது போக்சோ வழக்கு: சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் முயற்சி!

    Editor TN TalksBy Editor TN TalksMay 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250531 WA0010
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டினத்தில் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரசுப் பள்ளி ஒன்றில் விளையாட்டு ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற 70 வயது நடராஜ் மாஸ்டர் என்பவர், சிறுமி ஒருவரிடம் தன்னுடைய பாலியல் ஆசையைத் தீர்த்துக்கொள்ள முயன்றதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

     

    சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி, மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நடராஜ் மாஸ்டரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அந்த முதியவர் சிறுமியிடம் “நைசாகப் பேசி” தன்னுடைய பாற்றின்ப ஆசையைத் தீர்த்துக்கொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது. முதலில் நிலைமையை உணராமல் தடுமாறிய சிறுமி, பின்னர் தனக்கு ஏற்பட்ட ஆபத்தைப் புரிந்துகொண்டு, நடராஜ் மாஸ்டரின் கையைத் தட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறி, நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

     

    சிறுமி மற்றும் அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், மசூலிப்பட்டினம் போலீசார் உடனடியாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். நடராஜ் மாஸ்டரின் வீட்டிற்குச் சென்ற போலீசார், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்தக் காட்சிகளில், சிறுமி சுமத்திய குற்றச்சாட்டுகள் உண்மை என உறுதிப்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

     

    இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், நடராஜ் மாஸ்டரை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் பேரம் பேசி, பண ஆசை காட்டி வழக்கை திரும்பப் பெற சிலர் முயற்சிப்பதாகவும், அதனால்தான் கைது தாமதமாவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

     

    மேலும், நடராஜ் மாஸ்டர் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியபோது உடன் பணியாற்றிய ஆசிரியைகளிடமும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    Pocso
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்த் திரையுலகிற்கு உயிரூட்டிய தமிழக அரசுக்கு ஃபெப்சி நன்றி!
    Next Article முதலமைச்சர் வருகைக்காக பந்தல்குடி கால்வாய் துணியால் மறைக்கப்பட்டதால் சர்ச்சை!
    Editor TN Talks

    Related Posts

    இனி ஒருநாளைக்கு 200 லிட்டருக்கு மேல் டீசல் கிடையாது!. மத்திய அரசு அதிரடி!

    June 13, 2026

    வெங்காயம் கொள்முதல் விலை இன்று முதல் உயர்வு!. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

    June 13, 2026

    இந்தியாவில் நுழைந்தது எல் நினோ!. மிக மோசமான மழைப்பொழிவு?. வறட்சி ஏற்படும் அபாயம்!

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிஃபா உலகக் கோப்பை!. 40 ஆண்டு கால ஏக்கம்!. சொந்த மண்ணில் அசத்திய கனடா!. போஸ்னியாவுடன் டிரா!.

    நூற்றாண்டு கடந்தும் குறையாத கம்பீரம்… ‘சிங்கார சென்னையின் இதயம்’ எழும்பூருக்கு 118 வயது!

    ஹர்ஷவர்தனின் ‘#IOIO’ ஹூக் ஸ்டெப்!. இன்ஸ்டாகிராமில் புதிய ட்ரெண்ட்!

    இனி ஒருநாளைக்கு 200 லிட்டருக்கு மேல் டீசல் கிடையாது!. மத்திய அரசு அதிரடி!

    வெங்காயம் கொள்முதல் விலை இன்று முதல் உயர்வு!. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.