Close Menu
    What's Hot

    வந்தே மாதர மசோதா மூலம் தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணிக்க முயற்சியா? கனிமொழி எம்.பி. கடும் கண்டனம்!

    கர்நாடகாவில் அனைத்து கல்லூரிகளிலும் எச்.ஐ.வி. பரிசோதனை, ஆலோசனை முகாம்களுக்கு அரசு உத்தரவு

    “பிரகாஷ்ராஜ் அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாவார்” – பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»மக்களவையில் தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா நிறைவேற்றம்: வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை
    அரசியல்

    மக்களவையில் தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா நிறைவேற்றம்: வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை

    Editor web2By Editor web2July 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Parliament Vote pass
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாடு முழுவதும் போட்டித் தேர்வுகளில் நடைபெறும் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்க கொண்டு வரப்பட்ட பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்த மசோதா – 2026, மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

    இதன் மூலம் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் சட்டத்துக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கட்டமாக இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.

    இந்த மசோதாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடந்த ஜூலை 27-ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தினார். அண்மையில் நாடு முழுவதும் நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பான சர்ச்சைகளுக்குப் பிறகு இந்த மசோதா கொண்டு வரப்பட்டது.

    புதிய திருத்தங்களின்படி, தேர்வு வினாத்தாள்களை கசியவிடுதல் அல்லது அதற்கு உடந்தையாக செயல்படுதல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும், திட்டமிட்டு செயல்படும் வினாத்தாள் கசிவு கும்பல்களுக்கு ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், விசாரணை இரண்டு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் மசோதா வலியுறுத்துகிறது.

    மசோதா குறித்து பேசிய மத்திய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷி, தேர்வு முறைகேடுகளை கட்டுப்படுத்த வலுவான சட்ட அமைப்பை உருவாக்கும் முக்கியமான நடவடிக்கை இதுவாகும் என்றும், மாணவர்களின் நம்பிக்கையை பாதுகாக்க அரசு உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

    இதற்கிடையே, மசோதா மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர் போராட்டங்களின்போது காவல்துறை நடவடிக்கை குறித்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியதால், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மக்களவையில் அமளி ஏற்பட்டது.

    ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை மறுத்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என்றும், கண்ணீர் புகைக் குண்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் விளக்கமளித்தார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவையில் முன்வைக்கக் கூடாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் ராகுல் காந்தியை எச்சரித்தார்.

    மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதா,  அடுத்ததாக மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டால் சட்டமாக அமலுக்கு வரும். அதன்பிறகு நாடு முழுவதும் போட்டித் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக மேலும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ExamReforms loksabha PaperLeak rahulgandhi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!
    Next Article “பிரகாஷ்ராஜ் அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாவார்” – பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
    Editor web2
    • Website

    Related Posts

    வந்தே மாதர மசோதா மூலம் தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணிக்க முயற்சியா? கனிமொழி எம்.பி. கடும் கண்டனம்!

    July 29, 2026

    கர்நாடகாவில் அனைத்து கல்லூரிகளிலும் எச்.ஐ.வி. பரிசோதனை, ஆலோசனை முகாம்களுக்கு அரசு உத்தரவு

    July 29, 2026

    “பிரகாஷ்ராஜ் அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாவார்” – பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வந்தே மாதர மசோதா மூலம் தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறக்கணிக்க முயற்சியா? கனிமொழி எம்.பி. கடும் கண்டனம்!

    கர்நாடகாவில் அனைத்து கல்லூரிகளிலும் எச்.ஐ.வி. பரிசோதனை, ஆலோசனை முகாம்களுக்கு அரசு உத்தரவு

    “பிரகாஷ்ராஜ் அரபிக்கடலில் மீன்களுக்கு இரையாவார்” – பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

    மக்களவையில் தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா நிறைவேற்றம்: வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை

    ரயிலில் பயணித்து போரூர்–பூந்தமல்லி மெட்ரோ பாதையை ஆய்வு செய்த முதல்வர் விஜய்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.