Close Menu
    What's Hot

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பட்டியலின மக்களுக்கு மண்டகப்படி ஒதுக்கீடு செய்ய கோரி வழக்கு…. இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு…
    தமிழ்நாடு

    பட்டியலின மக்களுக்கு மண்டகப்படி ஒதுக்கீடு செய்ய கோரி வழக்கு…. இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு…

    Editor TN TalksBy Editor TN TalksJune 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பட்டியலின மக்களுக்கு மண்டகப்படி ஒதுக்கீடு செய்ய கோரி வழக்கு….
    இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு…

    விருதுநகர் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலின் திருவிழாவில் பட்டியலின மக்களுக்கு மண்டகப்படி ஒதுக்கீடு செய்ய கோரிய வழக்கில் இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    விருதுநகரைச் சேர்ந்த முத்துச்சாமி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். விருதுநகர் தேவதானம் பகுதியில் உள்ள , “ஸ்ரீ அன்னை தவம் பெற்ற நாயகி உடனுறை அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். இப்பகுதியில் சுமார் 1300 பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். 10 நாட்களில் ஒவ்வொரு நாளும் மண்டகப்படியில் சுவாமிக்கு மரியாதை செலுத்தப்படும். அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும், மண்டகப்படி அமைத்து சுவாமிக்கு மரியாதை செய்யும் நிலையில், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் மண்டகப்படி வழங்கப்படுவதில்லை.

    இந்த ஆண்டு மே 31 ஆம் தேதி திருவிழா தொடங்கியுள்ளது ஆகவே பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் மண்டகப்படி வழங்கி 10 நாட்களில் ஒரு நாளை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கென ஒதுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரியக்கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், ஆஜரான வழக்கறிஞர்
    “ஏற்கனவே நடத்தப்பட்ட அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் மனுதாரரும் பங்கேற்றுள்ளார். இது தொடர்பாக இந்து சமய அறநிலைய துறையின் இணை ஆணையரே இறுதி முடிவு எடுக்க முடியும்” என குறிப்பிட்டார்.

    இதையடுத்து நீதிபதிகள், “மனுதாரர் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை அணுகி உள்ளார். ஆகவே அடுத்த ஆண்டு மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது போன்ற பிரச்சனைகளுக்கு விரைவில் உரிய தீர்வு காணப்பட வேண்டும்” என குறிப்பிட்டு,
    வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமணல் கொள்ளையை தடுக்க சிறப்பு அதிகாரி நியமனம்… தூத்துக்குடி ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு..
    Next Article ஆர்சிபியின் 18 ஆண்டு கால தவம்… என்ன செய்திருக்கிறது இந்த வெற்றி??
    Editor TN Talks

    Related Posts

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    June 2, 2026

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    June 2, 2026

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.