Close Menu
    What's Hot

    “புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி”!. தவெக தலைவர் விஜய்!

    இனி ஒரு சிகரெட் விலை ரூ.72?. மசோதா கொண்டுவர திட்டம்!.

    உலகின் பாதி தங்கம் பிரிக்ஸ் நாடுகளிடம் மட்டுமே உள்ளது!. பதற்றத்தில் டிரம்ப்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»திருச்செந்தூர் கோயில் குடமுழக்கில் தமிழ் மந்திரங்கள்.. இந்துசமய அறநிலையத்துறை முடிவெடுக்க உத்தரவு..
    ராசிபலன்

    திருச்செந்தூர் கோயில் குடமுழக்கில் தமிழ் மந்திரங்கள்.. இந்துசமய அறநிலையத்துறை முடிவெடுக்க உத்தரவு..

    Editor TN TalksBy Editor TN TalksJuly 2, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tiruchendur Gopuram
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த வியனரசு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலின் குடமுழுக்கு நடைபெற உள்ளது. தமிழ் மொழியில் நடத்த கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை. ஆகவே திருச்செந்தூர் முருகன் கோவிலின் குடமுழுக்கு விழாவின் போது யாகசாலை, கருவறை, கோபுரவிமான பூஜை ஆகியவற்றை தமிழ் மொழியில் மந்திரங்களை ஓதி நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
    இந்து சமய அறநிலையத்துறையின் தரப்பில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலின் இணை ஆணையர் பதில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “யாகசாலையில் மந்திரங்கள் ஓதுவது தொடங்கி, திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, பன்னிரு திருமுறைகள் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது முதல் குடமுழுக்கு வரை நிகழ்வுகள் தமிழிலேயே நடைபெற உள்ளன. குடமுழுக்கின் போது தமிழ் வேத மறைகளும், சமஸ்கிருத வேதங்களும் ஓதப்படும்” என தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள், “கோவில் நிர்வாகத்தால் நடத்தப்படும் விழாக்களில் இந்து சமய அறநிலையத் துறையின் விதிகள் மீறப்பட்டால், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரையோ, அல்லது சம்பந்தப்பட்ட அலுவலரையோ அணுகலாமே தவிர நீதிமன்றம் தலையிட இயலாது. மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக இந்த சமய அறநிலையத்துறை ஆணையர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெக கொடியில் யானை சின்னம்- பகுஜன் சமாஜ் கட்சி புதிய மனு
    Next Article விசாரணை கைதிகளை துன்புறுத்தக் கூடாது… ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் உத்தரவு…
    Editor TN Talks

    Related Posts

    மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 28 டிசம்பர் 2025

    December 28, 2025

    12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.26 – 31

    December 26, 2025

    இன்று நாள் எப்படி? 12 ராசிகளுக்கும் துல்லிய கணிப்பு

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி”!. தவெக தலைவர் விஜய்!

    இனி ஒரு சிகரெட் விலை ரூ.72?. மசோதா கொண்டுவர திட்டம்!.

    உலகின் பாதி தங்கம் பிரிக்ஸ் நாடுகளிடம் மட்டுமே உள்ளது!. பதற்றத்தில் டிரம்ப்!.

    ‘தி ராஜா சாப்’ மாளவிகா மோகனன் தோற்றம் வெளியீடு

    ‘ரஜினியை வைத்து காதல் படம்’ – இயக்குநர் சுதா கொங்காரா ஆசை

    Trending Posts

    பாலத்தில் தடம் புரண்ட ரயில்!. ஆற்றில் கவிழ்ந்த 10 பெட்டிகள்!. பீகாரில் பரபரப்பு!

    December 28, 2025

    விஜயகாந்த் நினைவு தினம்: உதயநிதி, செல்வ பெருந்தகை அஞ்சலி

    December 28, 2025

    தைவானை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்!. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு!. 

    December 28, 2025

    தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம்!

    December 28, 2025

    கேப்டன் விஜயகாந்த் நினைவுநாள்!. முதல்வர் ஸ்டாலின் போட்ட ட்வீட்!

    December 28, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.