தமிழ் சினிமா என்று சொன்னாலே குறிப்பாக காதல் படங்கள் என்று வந்துவிட்டால் அதில் மணிரத்னம் கைதேந்தவர். ஜன ரஞ்சகமான காதல் திரைப்படங்கள் கொடுப்பதில் மட்டுமல்ல நாயகன் போன்ற கேங்ஸ்டர் திரைப்படத்தையும் கன்னத்தில் முத்தமிட்டால் போல அழுத்தம் வாய்ந்த திரைப்படத்தையும் மணிரத்னம் தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருக்கிறார்.
ஆனால் அவரது முந்தைய படங்கள் முன்பு போல இல்லை. பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றுக்கு கிடைத்த வரவேற்பு பாகம் இரண்டிற்கு கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து வந்த தக் லைஃப் திரைப்படம் மிக மோசமான வரவேற்பு பெற்றது. மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களில் அதிகமாக கிண்டல் அடிக்கப்பட்ட திரைப்படமாக தக் லைஃப் அமைந்தது.
இதனை தொடர்ந்து மணிரத்னம் அடுத்து என்ன படம் இயக்கப் போகிறார் என்ற கேள்வி தமிழ் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் அந்த கேள்விக்கு தற்பொழுது விடை கிடைத்துள்ளது. மணிரத்னம் அவரது சொந்த தயாரிப்பில் ஒரு திரைப்படத்தை அடுத்த வருடம் இயக்க இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடிகை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வருடம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரும் என்று நாம் எதிர்பார்க்கலாம். மேலும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைப்பது கூடுதல் தகவல்.
