Close Menu
    What's Hot

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»சினிமாவை உயிர் போல நேசித்தார்.. ஏவிஎம் சரவணன் உடலுக்கு ரஜினி அஞ்சலி
    சினிமா

    சினிமாவை உயிர் போல நேசித்தார்.. ஏவிஎம் சரவணன் உடலுக்கு ரஜினி அஞ்சலி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 4, 2025Updated:December 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    avmm
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சினிமாவை உயிருக்கு உயிராக ஏவிஎம் சரவணன் நேசித்தார் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

    பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று காலை காலமானார். அவரின் உடல், சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரைத்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து ஏவிஎம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுக்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் பேசுகையில், “அவர் திரைத்துறையை மிகவும் நேசித்தார். நான் ஏவிஎம் தயாரிப்பில் 9 திரைப்படங்கள் நடித்துள்ளேன். அவை அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றன. இதில் முரட்டுக்காளை உள்ளிட்ட படங்களும் அடங்கும்.

    என் கஷ்ட காலங்களில் எனக்குத் துணையாக இருந்தவர். உடையிலும் உள்ளத்திலும் வெண்மையானவர். என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். என் நலன்விரும்பி.

    அவருடைய மறைவு திரைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்றார் ரஜினிகாந்த்.

    விசால் அஞ்சலி: ஏவிஎம் சரவணனின் உடலுக்கு நடிகர் விசாலும் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேட்டியளித்த அவர், ஏவிஎம் சரவணனின் இழப்பு திரைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு என விசால் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதூர்தர்ஷன் தலைவர் நவ்நீத் குமார் செகல் திடீர் ராஜினாமா!. என்ன காரணம்?.
    Next Article தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்படவில்லை: மாநில தேர்தல் அதிகாரி விளக்கம்
    Editor TN Talks

    Related Posts

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    December 23, 2025

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    December 23, 2025

    ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் அரசியல் பேசத் தடை?

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் அரசியல் பேசத் தடை?

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    December 23, 2025

    டிடிவி, ஓபிஎஸ்-சை அதிமுக கூட்டணியில் இணைப்பது குறித்து இபிஎஸ்சுடன் கோயல் பேச்சா? நயினார் மறுப்பு

    December 23, 2025

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.11 லட்சம் பேர் விண்ணப்பம்! வரும் 27, 28- 3, 4ம் தேதிகளில் சிறப்பு முகாம்!

    December 23, 2025

    கூடங்குளத்தில் ஐயப்ப பக்தர்களின் மண்டல பூஜை விழா

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.