தமிழ் சினிமாவுல தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் வெற்றிமாறன். உண்மை சம்பவங்களை தழுவி சமுதாயத்தில் நடக்கக் கூடிய அரசியலை தெளிவாக படமாக்கக் கூடிய அவரது படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும். அப்படி அவரது வட சென்னை திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலரது நடிப்பில் வடசென்னையை சுற்றி நடக்கும் அரசியலை இயல்பாக படமாகி இருந்தார் வெற்றிமாறன். இப்படத்தின் 2ம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக வடசென்னை 2 படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். படத்தின் போஸ்டர், ப்ரோமோ என அனைத்தும் செம ஹிட். அப்படி இருக்க, வடசென்னை 2 கதையின்படி, தனுஷின் அன்பு கதாபாத்திரமும், சிம்புவின் அரசன் கதாபாத்திரமும் நேருக்கு நேர் சந்திப்பதற்கான ஒரு வலிமையான சூழல் திரைக்கதையில் உள்ளதாம்.

இந்த மாஸான தருணத்தை திரையில் கொண்டு வர இயக்குநர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இரு முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்தால் திரையில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதால், இந்த திட்டத்தை செயல்படுத்த வெற்றிமாறன் முயற்சி எடுத்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version