மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் திரையுலகப் பயணத்தில் இறுதி முத்திரையாக அமைந்துள்ள ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த அவரது குடும்பத்தினர், திரையரங்கிலேயே உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட்டு அழுதது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

குறிப்பாக, இப்படத்தில் அவர் ஏற்றிருந்த ராணுவ வீரர் கதாபாத்திரத்தைப் பார்த்த அவரது மகள் இந்திரஜா, தன் தந்தை அந்தச் சீருடையில் இருக்கும் புகைப்படத்தைக் காட்டி, “அப்பா இந்த வேடத்தைப் போடும்போதெல்லாம் ஒருவித பெருமிதத்துடன் காணப்படுவார்; இது அவருடைய உழைப்பிற்குச் சான்றாக இருக்கும்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா, அவர் மறைந்தாலும் மக்களின் சிரிப்பிலும், திரையில் அவர் விட்டுச் சென்ற கலைப் படைப்புகள் மூலமாகவும் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். “அவர் எங்களுடனும், உங்கள் ஒவ்வொருவருடனும் எப்போதும் வாழ்ந்து கொண்டே இருப்பார்” என்று அவர் கூறிய வார்த்தைகள் ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் ஆறுதலையும் ஏற்படுத்தியது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version